முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறப்பு விமானங்கள் மூலம் உக்ரைனிலிருந்து 6,200-க்கும் அதிகமான இந்தியர்கள் திரும்பியுள்ளனர்

சிறப்பு விமானங்கள் மூலம் உக்ரைனிலிருந்து 6,200-க்கும் அதிகமான இந்தியர்கள் திரும்பியுள்ளனர்



அடுத்த இரண்டு நாட்களில் 7,400-க்கும் அதிகமான இந்தியர்கள் வந்து சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை  திரும்ப அழைத்துவர ஆபரேஷன் கங்கா என்ற பெயரில்,  மீட்பு நடவடிக்கைகளை இந்தியா பெருமளவில் மேற்கொண்டு வருகிறது.  இந்திய மாணவர்களை வெகு வேகமாக இந்தியாவிற்கு அழைத்துவர  சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சகத்தின்  ஒருங்கிணைப்புடன் வெளியுறவு அமைச்சகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.   இந்த நடவடிக்கைகளுக்கு உதவி செய்யவும், மேற்பார்வையிடவும், உக்ரைனுக்கு அருகில் உள்ள நாடுகளுக்கு மத்திய அமைச்சர்கள் திரு ஹர்தீப் சிங் பூரி, திரு ஜோதிராதித்ய சிந்தியா, திரு கிரண் ரிஜிஜூ, திரு வி கே சிங் ஆகியோர் சென்றுள்ளனர்.

10 சிவில் விமானங்கள் மூலம் இன்று வந்து சேர்ந்த 2,185 பேர்களையும் சேர்த்து பிப்ரவரி 22 முதல் இன்றுவரை மொத்தம் 6,200-க்கும் அதிகமானோர் மீட்டு வரப்பட்டுள்ளனர்.  புக்காரெஸ்டிலிருந்து 5,  புடாபெஸ்டிலிருந்து 2,  கோசியிலிருந்து 1, ரிஸோசவிலிருந்து 2 சிவில் விமானங்கள் மூலமும், இவைதவிர  இந்திய விமானப்படையின் 3 விமானங்களிலும் இந்தியர்கள் இன்று அழைத்து வரப்பட்டனர்.

அடுத்த இரண்டு நாட்களில்,  7,400-க்கும் அதிகமானோர்  சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்துவரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் 3,500 பேரை நாளையும் (மார்ச் 4), 3,900 பேரை நாளை மறுநாளும் (மார்ச் 5)  அழைத்துவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  உக்ரைனுக்கு நிவாரண பொருட்களை தேசிய பேரிடர் மீட்பு படை அனுப்பியது

யுக்ரைனுக்கு நிவாரண பொருட்களை தேசிய பேரிடர் மீட்பு படை அனுப்பியுள்ளது. போர்வைகள், பாய்கள் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் விளக்குகள் உள்ளிட்டவை இவற்றில் அடங்கும். யுக்ரைன் நாட்டின் மக்களுக்காக இவை அனுப்பப்பட்டுள்ளன.உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்புடன் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று குடியரசு துணைத் தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்புடன் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும், இந்த திசையில் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்றும் குடியரசு துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விஜயவாடாவில் இன்று நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய அவர், போர் பகுதியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றி பிரதமர் திரு.நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் திரு.எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் தம்மிடம் எடுத்துரைத்திருப்பதாக கூறினார்.

நாட்டின் நலன் கருதி சர்வதேச நிகழ்வு போக்குகள் குறித்த அணுகுமுறையை இந்தியா பின்பற்றுகிறது என்றும் திரு.நாயுடு கூறினார். நாட்டின் நலனைப் பாதுகாக்க அனைவரும் ஒரே குரலில் பேச வேண்டும் என்றும், இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்கும் எதையும் பேச வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தியா ஒரு சக்தியுள்ள நாடாக வளர்ந்து வருவதையும், அதன் முன்னேற்றத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் சில சக்திகள் இருக்கும் நிலையில், இந்திய ஜனநாயகத்திற்கு எதிராக சர்வதேச ஊடகங்களில் சில பிரிவுகள் தவறான தகவல்களை பிரச்சாரம் செய்வதாக குடியரசு துணைத் தலைவர் தெரிவித்தார்.

மற்ற நாடுகளிடம் சமாதான  சகவாழ்வில் இந்தியா எப்போதும் நம்பிக்கைக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ஒரு காலத்தில் விஷ்வகுரு என்று இந்தியா அறியப்பட்டதையும் கலாச்சாரம் மற்றும் பொருளாதார ரீதியாக வலிமையுடன் இருந்ததையும் அவர் நினைவுகூர்ந்தார். மற்றவர்களுக்கு உதவி செய்ய வலுவானதாகவும், நிலையானதாகவும், வளமானதாகவும் மாறுவதற்கு இந்தியா விரும்புகிறது என்று அவர் கூறினார்.

தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில மூலநூலில் ஆசிரியர் வில் டூரன்ட் இந்தியாவின் தொன்மையான நாகரீகத்தையும், உலக மொழிகள், கலாச்சாரம், கணிதம் ஆகியவற்றுக்கு அதன் பங்களிப்பையும் அங்கீகரித்திருப்பதை குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு விவரித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மொழிபெயர்ப்பாளர் திருமதி.நாதெள்ள அனுராதா, வெளியீட்டாளர் திரு.அசோக் ஆகியோரின் முயற்சிகளைப் பாராட்டிய திரு.நாயுடு வரலாற்றுச் சிறப்புமிக்க நூல்களை மேலும் கூடுதலாக இந்திய மொழிகளில் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்

இன்று காலை போலந்து சென்ற விமானம் ஒன்றின் மூலமாகவும், இன்று பிற்பகல் ரோமானியாவிற்கு சென்ற இந்திய விமானப்படை விமானம் மூலமாகவும் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த