உலக சாம்பியனை வெற்றி கொண்டதால் உச்சகட்ட மகிழ்ச்சியில் பிரக்ஞானந்தா,
செஸ் விளையாட்டிலும் தான் கடுமையாக பயிற்சி பெற வேண்டி இருந்ததாகவும், தற்போது கிடைத்துள்ள வெற்றி தனக்கு மிகுந்த நம்பிக்கையைத் தருவதாகவும்.
மேலும், தனக்குக் கிடைத்து வரும் ஆதரவு, பாராட்டுக்கள் இன்னும் கடினமாக உழைக்கவும், விளையாடவும் தன்னை ஊக்குவிப்பதாக தெரிவித்த நிலையில். இதுகுறித்து பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபு கூறியதாவது: வயது, அனுபவம் முக்கியமானது என்றாலும், விடாமுயற்சியும், கூடவே தீவிரமாக பயிற்சியும் இருந்தால் விஸ்வரூப வெற்றி நிச்சயம் என்பதை நிரூபித்துள்ளார் 16 வயதான இளம் கிரான்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. இணைய வழி நடந்துவரும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் எட்டாவது சுற்றில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை 16 வயதான பிரக்ஞானந்தா தோற்கடித்தார்.
தொடர்ந்து மூன்று வெற்றிகளைப் பெற்றிருந்த கார்ல்சன், கறுப்புக் காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தாவின் 39 நகர்வுகளில் வீழ்ந்தார்.
அனைத்து வகையான செஸ் வடிவங்களிலும் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும்.
ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் போட்டியில், ஒரு வெற்றிக்கு 3 புள்ளிகளும், டிராவுக்கு ஒரு புள்ளியும் வழங்கப்படுகிறது. தொடக்க கட்டத்தில் இன்னும் ஏழு சுற்றுகள் இருக்கின்றன.சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, தனது பன்னிரண்டாவது வயதிலேயே சதுரங்க போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர். அந்த சாதனையை 2018இல் அவர் நிகழ்த்தியபோது அவர் பிறந்து 12 வருடங்கள் 10 மாதங்கள் 13 நாட்கள் ஆகியிருந்தன.
அதன் மூலம் இந்தியாவின் மிக இளம் வயது கிராண்ட் மாஸ்டர் எனும் சாதனையை பிரக்ஞானந்தா படைத்தார். கோடி பேர் வசிக்கும் சென்னையிலிருந்து சென்று, இத்தாலியில் சில ஆயிரம் பேருக்கு மட்டுமே தாயகமாக இருக்கும் ஊர்டிஜெய் பகுதியில் நடந்த நான்காவது க்ரெடின் ஓபன் 2018 தொடரில், இறுதிச் சுற்றில் விளையாடுவதற்கு முன்னரே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று அசத்தியிருக்கும் பிரக்ஞானந்தா.
க்ரெடின் ஓப்பனில் 16 வயது இரான் வீரர் ஆர்யன் கொலாமியை அபாரமாக வென்ற பின்னர் எட்டாவது சுற்றில் இத்தாலியைச் சேர்ந்த 17 வயது கிராண்ட் மாஸ்டர் மோரொனி லூகாவை வென்றார்.
இதன் மூலம் ஒன்பதாவது சுற்றில் 2482 ரேட்டிங் மேல் வைத்துள்ள வீரரை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் மூன்றாவது முறையாக கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான அனைத்து விதிகளையும் பூர்த்தி செய்து தகுதி பெற்றார்.
நெற்றியில் பட்டை, எண்ணெய் வைத்து வகுடெடுத்து வாரிச்சீவப்படாத தலைமுடி, அமைதியான முகம் - எளிமையான முகத்தோற்றமும் பெருஞ்சாதனைகளுக்கும் மிகச்சிறிய புன்னகையை வெளிப்படுத்தும் சிறுவன் பிரக்ஞானந்தா.
உலகிலேயே இரண்டாவது இளவயது கிராண்ட்மாஸ்டர் எனும் சிறப்பை பெற்றார். பதின் பருவத்தை எட்டுவதற்கு முன்னதாக கிராண்ட் மாஸ்டர் ஆனது உலகிலேயே இருவர் தான். ஒருவர் பிரக்ஞானந்தா, மற்றொருவர் உக்ரைனைச் சேர்ந்த செர்கே கர்ஜாகின்.
கடந்த 2002 ஆம் ஆண்டு தனது 12 வருடம் ஏழு மாதத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று உலகின் மிகக் குறைந்த வயது கிராண்ட்மாஸ்டர் எனும் சிறப்பை பெற்றார் செர்கே கர்ஜாகின். அவரது சாதனையை உடைக்க பிரக்ஞானந்தாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. எனினும் முந்தைய தொடரில் கிடைத்த தோல்வியை பொருட்படுத்தாமல் நம்பிக்கையுடன் இத்தாலி க்ரெடின் ஓபன் 2018 தொடரை எதிர்கொண்டதன் மூலம் இரண்டாவது இளைய கிராண்ட் மாஸ்டர் எனும் பட்டத்தையும் இந்தியாவின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் எனும் பட்டத்தை வைத்திருந்த பரிமார்ஜன் நெகியின் சாதனையையையும் தகர்த்துள்ளார்.
சென்னை சிறுவனின் வெற்றிக்குப் பின்னணியில் இருந்தவர்களில் மிகவும் முக்கியமானவர் போலியோவால் பாதிக்கப்பட்ட அவரது தந்தை ரமேஷ்பாபு.
நடுத்தரங் குடும்பத்தில் பிறந்த ரமேஷ்பாபு தமிழக அரசின் கூட்டுறவு வங்கியில் 23 வயதில் பணிக்குச் சேர்ந்தார். தற்போது சென்னையிலுள்ள கொரட்டூரில் கூட்டுறவு வங்கிக் கிளை மேலாளராக பணிபுரிகிறார்.
ரமேஷ்பாபு - நாகலட்சுமி தம்பதிக்கு இரு குழந்தைகளில் இவர்களது பெண் வைஷாலியும் செஸ் எனும் சதுரங்கப் போட்டியில் விளையாடி அசத்திக் கொண்டிருக்கிறார்.
கருத்துகள்