முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பத்து ரூபாய் பித்தளை நாணயம் வாங்க மறுக்கும் நடத்துனர்கள் மற்றும் வியாபாரிகள்

ஒரே மொழி!  ஒரே நாடு!   ஒரே பண்பாடு!    ஒரே தேர்தல்!  ஒரே தேர்வு!  ஒரே நாணயம்!    ஒரே பொதுவிநியோகம்!’ எனும் ஒற்றை அடையாளத்தை நிலைநிறுத்த இந்தியா எனும் கூட்டாட்சித் தத்துவத்தை ஏற்றுக்கொண்ட  மாநில பன்முகத் தத்துவ நாட்டில் நாணயம் அச்சிடும்  அதிகாரங்கள் யாவும் மத்திய அரசுக்கு மட்டுமே


மாநிலங்களின் கூட்டாட்சித் தத்துவம் கொண்ட நாடு இந்தியா அதன் நாணயத்தை  வியாபாரிகள் அரசு பணியாளர்கள் வாங்க மறுப்பது குற்றம் மற்றும் சட்ட விரோதம் என்று அறியாமல் விபரம் தெரிந்த பஸ் நடத்துநர் உள்ளிட்ட பலரும் பத்து ரூபாய் பித்தளை நாணயங்களை வாங்க மறுக்கும் காரணம் புரியாத அப்பாவி மக்கள்.


நாட்டின்பாதுகாப்புத்துறை, நாணயம் அச்சிடல், வெளியுறவுத்துறை போன்ற மிக முக்கியவற்றில் மட்டும் மத்தியில் அரசு நிர்வகிக்கும் நிலையில் அதன்  மாநிலங்களுக்கான அதிகார எல்லைக்குள் அமைந்துள்ள வர்த்தக முறையில் பத்து ரூபாய் பித்தளை நாணயம்  வாங்குவதில் பாகுபாடு இருந்து வருகிறது. அதை அரசு தடுக்க வேண்டும் .


பௌர்ணமி நிலவைப் பார்த்து நடிகர் செந்தில் " ஐய் .....ஏன் அண்ணன் உங்கள் ஊரில் இருக்கும் நிலா மாதிரியே எங்க ஊரிலும் இருக்கிறது.. அது எப்படி அண்ணன்" இது செந்தில்- கவுண்டமணி நடித்த ஒரு திரைப்பட நகைச்சுவை அதுபோலவே பஸ் பயணிகள் இருவர் பத்து ரூபாய் பித்தளை நாணயம் எங்கள் ஊரில் செல்லாது உங்கள் ஊரிலும் செல்லாதா ... எனப் பேசுவதை இப்போது கேட்பது வாடிக்கையாகிவிட்டது. சுதந்திர காலத்திற்கு முன்பே புதுக்கோட்டை சமஸ்தான அரசு வெளியிட்ட அம்மன் சல்லி நாணயங்கள் அருகில் உள்ள சிவகங்கை சமஸ்தானத்தில் செல்லாது

காரணம் அது வேறு நாடு, இது வேறு நாடு இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் 1948 வரை இந்த நிலையில் தான் இருந்தது. அதே போல் இப்போது பத்து ரூபாய் பித்தளை நாணயம் ஒரு மாவட்டம் முழுவதும் செல்லுமாம் பக்கத்து மாவட்டத்தில் செல்லாதாம். இதற்கு தீர்வு தான் என்ன.. யார் நடவடிக்கை எடுப்பது.   மாநில அரசா அல்லது மத்திய அரசா அல்லது ரிசர்வ் வங்கியா என்ற வினா எழுகிறது.. நமக்கு ஏற்பட்ட இது நேரடியான அனுபவத்தைப் பற்றி இங்கு பார்க்கலாம்.பத்துரூபாய் பித்தளை நாணயத்தை அரசுப் பேருந்து நடத்துநர் கொடுத்தார். கையில் வாங்கிய அதே வேகத்தில், 'நோட்டு இருந்தால் கொடுங்க, பத்து ரூபாய் காய்ன் எங்க விருதுநகர் மாவட்டத்துல செல்லாது'

என்று திருப்பிக் கொடுத்து விட்டார் அந்தப் பயணி.  பக்கத்து இருக்கையில் இருந்த பெண், தனக்கு தந்து விடுவார் என்று பயந்து 'கண்டக்டர் சார், எங்க சிவகங்கையிலும் அந்தக் காய்ன் செல்லாது, தேனீர் கடை உள்ளிட்ட எதிலும் யாரும் வாங்க மாட்டாங்க' என்று வாங்கப் போகும் சில்லறையை அட்வான்ஸ்டாகவே பயம் காரணமாக மறுத்து விட்டார். இரயில்வே கவுன்டர்களிலும், பேருந்துகளிலும் அடிக்கடி இதுபோல் பார்க்கிறேன். ரிசர்வ் வங்கி அதிகாரிகளோ அல்லது இது தொடர்பாக விளக்கம் சொல்ல வேண்டியவர்களோ வெளிப்படைத் தன்மையுடன் இதுபற்றி அறிவிப்பு ஒன்றை கொடுக்கலாமே? என நா.ப.சேதுராமன் போன்ற பல மூத்த பத்திரிகையாளர்களே கூறும் நிலையில் இதுபோன்ற வேறொரு நபருக்கு மற்றொரு நிகழ்வு  காயின்.கொடுத்தேன் தூத்துக்குடி மாவட்டத்தில் எல்லார் மத்தியிலும் பத்து ரூபாய் நாணயம் தாராளமாக புழக்கத்தில் உள்ளது ஆனால் பக்கத்து மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தில் எல்லா ஊர்களில் உள்ள கடைகளிலும் பேருந்துகளிலும் பத்து ரூபாய் நாணயம் கொடுக்கலும் கிடையாது வாங்கலும் கிடையாது அரசு இயந்திரம் சொன்னாலும் இவர்களாகவே  ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள் பொதுமக்களுக்கு பெருத்த அவதி ஏற்படுகிறது.  ஒருநாள் அதிகாலை ஐந்து மணிக்கு சூளகிரி பேருந்து நிலையத்தில் இறங்கி டீ சாப்பிட்டேன் இருந்தது இரண்டு பத்து ரூபாய் காயின்.கொடுத்தேன் வாங்க மறுத்துவிட்டார்கள் வேறு ரூபாய் இல்லை ஐந்நூறு ரூபாயாக இருக்குன்னேன் எல்லாரும் அப்படித்தான் சொல்றாங்க  சும்மா குடிச்சிட்டு போங்க சார்ன்னு கோபமா சொன்னாரு எனக்குத் தேவையில்லை இந்தாங்க ஐந்நூறு ரூபாய் ன்னு எடுத்து நீட்டினேன் சார் காலையில் என்னை கடுப்பேத்தாதீங்க ன்னு வாதம் அரைமணி நேரத்திற்குப் பிறகு  நண்பர்கள் என்னை அழைத்துப் போக வந்தனர் விஷயத்தைச் சொன்னேன் அவர்கள் கொடுத்தார்கள் டீக்கடைக்காரர் காசு வாங்க மறுத்து விட்டார் .தெரிஞ்சவங்க போல..என விவரித்தார்.

அவன் கிடக்கான்டா, அம்மஞ்சல்லிக்குப் பிரயோசனமில்லாத பய' என்று ஊர்ப்பக்கத்தில் சொல்வது வழக்கம். அம்மன் சல்லி அல்லது அம்மன் காசு


விஜயநகரப் பேரரசின் மதுரை பிரதேசம்

நாயக்கர் ஆட்சியில் பாண்டிய மண்டலம் பல பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது ஆனால் இராமநாதபுரம் வலுவடைந்தது கிழவன் சேதுபதி என்னும் இரகுநாத சேதுபதி  ஆட்சியின் கீழ் வந்தது. சேதுபதி அரசர்களில் முக்கியமானவரான கிழவன் சேதுபதி (1679 ஆம் ஆண்டில் துவங்கி)  தனது 46 வது மனைவி திருக்கலாம்பூர் கதலியின்  தம்பி இரகுநாதனுக்கு  தனது அரசை ஜந்தில் மூன்று பகுதிகள் தான் வைத்து மீதி இரண்டு பகுதிகளாக தன் மருமகன் சசிவர்ண உடையணத் தேவர் சிவகங்கை மற்றும் மைத்துனர் இரகுநாதன் புதுக்கோட்டை எனப் பிரித்து புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கினார். தனது மைத்துனனான ரகுநாதத் தொண்டைமானை அதற்கு அரசராகவும் நியமித்தார். இரகுநாதன் காலத்திற்குப் பிறகு வந்த தொண்டைமான் அரசர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் நெருங்கிய நட்புப் பூண்டிருந்தனர். அதன் விளைவாக, தங்களுடைய அரசில் சொந்தமாக நாணயம் அச்சிட்டு வெளியிடும் உரிமையையும் பெற்றனர். அப்படி அவர்கள் வெளியிட்ட நாணயம்தான் அம்மன் காசு. ஸ்ரீ பிரகதாம்பாள் படத்துடன் அச்சிடப்பட்ட நாணயம்.


புதுக்கோட்டை மன்னர்கள் அந்நகரின் தெய்வமான ஸ்ரீ பிரகதாம்பாள் மேல் பக்தி பூண்டவர்கள். அதன் காரணமாகவே 'பிரகதாம்பாள்தாஸ்' என்ற முன்னெட்டையும் தங்கள் பட்டாபிஷேகப் பெயரில் சேர்த்துக்கொண்டவர்கள். எனவே அவர்கள் வெளியிட்ட நாணயத்திலும் அந்த அம்மனின் உருவத்தைப் பொறித்தனர். ஒரு புறம் அம்மன் உருவம், மறுபுறம் 'விஜய' என்று தெலுங்கு மொழியில் எழுதப்பட்டிருக்கும்.  மற்றபடி இந்த நாணயங்களில் வெளியிட்ட ஆண்டோ அல்லது யாரால் வெளியிடப்பட்டது என்ற தகவலோ இருப்பதில்லை. ஆனால், 17-18 ம் நூற்றாண்டுகளில் இந்த நாணயங்கள் வெளியிடப்பட்டதென கணிக்கப்படுகிறது.



செப்பால் ஆன இந்த நாணயங்கள் கல்கத்தாவில் தயாரிக்கப்பட்டு வந்தன. என்னதான், பிரிட்டிஷ் அரசு உரிமை கொடுத்திருந்தாலும் அதை 'ஓவராகப்' பயன்படுத்திக்கொள்ள விரும்பாத தொண்டைமான்கள் குறைந்த மதிப்பிலேயே இந்த நாணயங்களை வெளியிட்டனர்.        Pudukkottai: Amman Kasu, 1800 AD, Smallest coin of India                  சல்லி என்று அழைக்கப்பட்ட இந்த நாணயத்தின் மதிப்பு ஒரு அணாவில் பதினாறில் ஒரு பங்கு.  இந்த நாணயமும் மிகச் சிறியதாக, ஒரு சென்டிமீட்டர் அகல அளவிலேயே இருக்கும்  ஆனால் அடுத்த பிரதேசத்திற்கு இந்த நாணயம் செல்லாதது. அதே நிலையில் தான் தற்போது பத்து ரூபாய் ஒரு சோதனையைச் சந்திக்கிறது. திண்டுக்கல் ஈ.வே.ரா பெரியார் சிலை அருகில் உள்ள ஒரு வங்கியின் மேலாளரை பள்ளி மாணவர்கள் சிலர் சந்தித்து நாங்கள் வரும் பஸ்சில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கிறார்கள். எனவே 10 ரூபாய் நாணயம் செல்லுமா? அல்லது செல்லாதா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அந்த மேலாளர் செல்லும் என பதிலளித்தார். இந்நிலையில் திண்டுக்கல்லில் உள்ள டீக்கடைகள், பலசரக்கு கடைகள் உள்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் 10 ரூபாய் நாணயத்தை வியாபாரிகள் வாங்க மறுத்து வருகின்றனர். 10 ரூபாய் நாணயத்தில், அதிகளவு கள்ள நாணயம் புழக்கத்தில் இருக்கிறது என்பதே இதற்கு அவர்கள் கூறும் காரணம். மேலும், கள்ள நாணயத்தில் 10 என்ற எண் நாணயத்தின் நடுவில் பொறிக்கப்பட்டிருக்கும். அந்த எண்ணிற்கு மேலே 15 கோடுகள் இருக்கும் என்று ஆளாளுக்கு ஒரு தவறான கருத்தைச் சொல்லி வருகின்றனர். திண்டுக்கல்லில் உள்ள வங்கிகளில் கூட 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கின்றனர் என்று கூறப்பட்டது. இதில் துளியளவும் உண்மையில்லை. இவையனைத்தும் பொய்யான புரளியே இதனை மக்கள் நம்ப வேண்டாம் என்று திண்டுக்கல் கனரா முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகரன்  கூறியதாவது:–வாங்க மறுப்பது தவறு மத்திய, மாநில அரசு மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவற்றில் இருந்து பண பரிவர்த்தனைகள் குறித்த எந்த வித தகவலாக இருந்தாலும் கனரா முன்னோடி வங்கிக்கு தான் தகவல் வரும். ஆனால் 10 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அங்கிருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை. இதையொட்டி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் யாராக இருந்தாலும் 10 ரூபாய் நாணயத்தை தயக்கமின்றி வாங்கலாம்.மேலும் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதும் தவறு. எனவே வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோர் இதுபோன்ற ஆதாரமற்ற, பொய்யான தகவலை நம்பவேண்டாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...