அலுவலகப் பணி நேரங்களில் அரசுப்பணியார்கள் செல்போன் பயன்படுத்த கூடாதென உயர்நீதிமன்றம் உத்தரவு.,
இது தொடர்பாக அரசு ஆணை உள்ள நிலையில் விதிகளை வகுத்து உடன் சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.திருச்சிராப்பள்ளி சுகாதாரத்துறை பணிமனை கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர் ராதிகா.
இவர் பணியிடங்களில் சக ஊழியர்களை தன் செல்போனில் வீடியோ காட்சிகளை எடுத்து பதிவு செய்துள்ளார். இது வைரலாகியது. அதையடுத்து அவர் பணியிட நீக்கம் செய்யப்பட்டார்.
அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் ராதிகா ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். தற்போது சென்னை
உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் , ராதிகாவின் மனு விசாரணைக்கு வந்த போது விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு:
அலுவலக நேரத்தில் அரசு ஊழியர்கள் தேவையின்றி செல்போன் பயன்படுத்துவதும், வீடியோ காட்சிகள் எடுப்பதும் நல்ல நடவடிக்கை அல்ல.
அரசு ஊழியர்களின் இதுபோன்ற செயல்பாடுகளை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது.
ஒருவேளை ஏதேனும் அவசரமெனில் முறையான அனுமதி பெற்று செல்போனைப் பயன்படுத்த வேண்டும்.
அரசு ஊழியர்கள் பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்துவது தொடர்பாக அரசு ஊழியர் விதிப்படி நடவடிக்கை எடுக்கும் விதமாக தமிழக அரசு விதிகளை வகுத்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
தமிழக சுகாதாரத்துறைச் செயலர் இந்த உத்தரவின் நகல் கிடைக்கப்பெற்ற 4 வாரங்களுக்குள்ளாக இந்த உத்தரவை நடைமுறைப் படுத்தவேண்டும் என
உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு பொதுமக்களிடம் வரவேற்பைப் பெறுகிறது.
கருத்துகள்