ரஷ்யா உக்ரைன் இடையே போர் மூளுமென சாமானிய மக்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் அனைத்து தூதரக தரவுகளும் கிடைக்கப்பெற்ற அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு ரஷ்யா உக்ரைன் இடையே போர் மூளும் சூழல் ஒரு மாதத்திற்கு முன்பே தெரிந்திருக்கும். அல்லது தெரிந்திருக்க வேண்டும்.
ஆனாலும் போர் துவங்கும் வரை உக்ரைனில் இந்திய மாணவர்கள் பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை பணி நடந்ததா என்பதே பலரின் எழு வினா அரசு போர் சூழலிருந்து அவர்களைக் காத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்கவில்லை. என்ற குற்றச்சாட்டில் உண்மை உண்டா அல்லது இது வரலாற்றுப் பிழை தானா என்பதும். இந்திய வெளியுறவுத் துறை மற்றும் தூதரக செயல்பாடுகளின் ஒட்டுமொத்த நடவடிக்கைகள் வினாவாக உள்ளது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் இனச் சுழற்சி அதாவது ரோஸ்டர் முறையில் தோல்வி கண்ட மாணவர்களில் எப்படியும் மருத்துவராக வேண்டும் என்ற கனவில் அல்லது ஆசையில் பெற்றோர் உதவியில் பல ஏஜன்சிகள் மூலம் சென்று
உக்ரைனில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களில் படிக்கும் அயல் நாட்டு மாணவர்களில் 25 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக மருத்துவம் படிக்கும் மாணவர்கள்.
இப்போதும் 17000 இந்திய மாணவர்கள் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் நடுங்கும் குளிரில் உண்ண உணவின்றி, பருகிட நீரின்றி, பாதுகாப்பற்ற சூழலில் பரிதவித்து வருகின்றனர்.
உக்ரைனில் போர் மேகம் சூழ்ந்த பிறகு வான்வழிப் பயணம் முற்றிலும் இயலாத நிலையில் கடந்த 26 அன்று இந்தியத் தூதரகம் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் தத்தம் வசிப்பிடங்களிலிருந்து உக்ரைன் - போலந்து, உக்ரைன் - ஸ்லோவாகியா, உக்ரைன் - ஹங்கேரி உக்ரைன் - ரோமானிய எல்லைப் பகுதிகளுக்கு வரவேண்டும்... அப்படி வந்தால் அந்தந்த நாடுகளின் இந்தியத் தூதரக அதிகாரிகள் அங்கிருந்து அவர்களை பத்திரமாக அண்டை நாடுகளுக்கு அழைத்துச் செல்வர். அங்கிருந்து விமானம் மூலம் தாய்நாடு திரும்பலாம் என்று சுற்றறிக்கை விட்டது. முதலில் இந்தத் தகவல் உக்ரைனிலுள்ள மாணவர்களுக்குப் போய் சேர்ந்ததா என்பதே கேள்விக்குறி. அப்படியே கேள்விப்பட்ட மாணவர்களுக்கும் அவரவர் இருப்பிடங்களிலிருந்து உக்ரைன் எல்லைப் பகுதிக்கு செல்வது என்பது ஏறக்குறைய இயலாத காரியம். இது தனுஷ் நடித்த புதுக்கோட்டையிலிருந்து சரவணன் திரைப்படத்தில் வேண்டுமானால் சாத்தியம் உண்மையில் இயலாது இதென்ன எலெக்ட்ரிக் ரயிலில் தாம்பரம் டூ பீச் ஸ்டேஷன் போகிற மாதிரி எளிதா? இல்லை சென்னை டூ மதுரை சூப்பர் ஃபாஸ்ட் தேஜா எக்ஸ்பிரஸ்ல போற மாதிரியா... தயவு செய்து அங்குள்ள கள நிலவர உண்மையை (ground reality) உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்தியத் தூதரக அதிகாரிகளே! பாதுகாப்பான தூதரக அலுவலகத்தை விட்டு உங்களால் கூட வெளியே வர முடியாத நிலையில் எவ்வித பாதுகாப்புமின்றி இந்திய மாணவர்கள் தத்தம் இருப்பிடங்களில் இருந்து பலநூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்லைப் பகுதிக்கு எவ்வாறு செல்ல முடியும். அதுவும் போர் மேகம் சூழ்ந்து குண்டு மழை பொழியும் நேரத்தில் மாணவர்கள் எவ்வாறு நீண்ட தூரம் பயணித்து எல்லையை அடைய முடியும் என்பதும் எழு வினா.
அதற்காக அமைச்சர்கள் நால்வரை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பி அவர்கள் மாணவர்களை அங்கே இருந்து பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் நமது இந்திய மாணவர்கள் எப்படியோ தட்டுத் தடுமாறி அடி உதை மிதிபட்டு உயிர் பிழைத்து பலநூறு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் உக்ரைன் எல்லைக்கு வருவதும். அப்படி வந்தால் அவங்களை அமைச்சர்கள் எல்லைக்கு வெளியே இருந்து வரவேற்று பத்திரமாக மீட்டெடுத்து வருவார்கள் இதுக்கு நமது நாட்டு அமைச்சர்களையும் அதிகாரிகளையும் உக்ரைனுக்குள்ளே சென்று அழைத்து வருவது இயலாது. ஏனெனில் அங்கு அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. உயிருக்கு உத்தரவாதம் இல்லைனு அரசுக்கு தெரியும். அப்படி இருக்க மாணவர்களை எப்படி தைரியமாக பலநூறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள எல்லைப் பகுதிக்கு உயிர் தப்பி உக்ரைனை விட்டு வெளியே வந்தால் காப்பாற்ற முடியும் அப்போது தான். ஒரு இந்தியர் ரயில் நிலையம் வந்த நிலையில் ஏவுகணை தாக்குதல் காரணமாக உயிரிழந்த இந்தியர் நவீன் செகரப்பா நிலையில் தான் மாணவர்கள் இருக்கும் போது.
இதுவரை 8 விமானங்களில் இந்திய மாணவர்கள் பத்திரமாக இந்தியா திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர். 1800 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மீதமுள்ள 16, 000 பேரை எப்படி மீட்டெடுக்க வேண்டும்.
மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உக்ரைன் அதிபருக்கு நேரடியாக தொலைபேசி வாயிலாக அங்கே இருக்கும் இந்திய மாணவர்களின் உயிருக்கு தக்க பாதுகாப்புத் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்க வேண்டுமென பலர் கூறுகிறார்கள் அதுபோலவே பல நாடுகளில் இருந்து வந்த மக்கள் நிலை மேலும் இந்திய மாணவர்களுக்கு உக்ரைனிய இராணுவத்தினரால் பாதிப்பு ஏற்படாதவாறு காக்க வேண்டும். இந்திய மாணவர்கள் உக்ரைன் எல்லைப் பகுதிக்குச் செல்ல போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உக்ரைன் அதிபரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும் என்ற போதிலும் . யுத்த காலத்தில் அது சாத்தியம் தானா?
"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்"...இது அய்யன் திருவள்ளுவர் வாக்கு உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமை, உக்ரைன் ராணுவத்தால் துன்புறுத்தல், எல்லையைக் கடக்க நீண்ட நேரம் காத்திருப்பு போன்றவை உக்ரைனில் உள்ள எல்லை வெளியேற்றும் இடங்களில் இந்தியர் மற்றும் மாணவ மாணவிகள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகள்.
இந்த பிரச்சனைகளை மாண்புமிகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் ஜி அவர்களின் கவனத்திற்கு நன்கு தெரியும் . அதனால் நமது குடிமக்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கும், அவர்களை விரைவில் அழைத்து வருவதற்கும் அவர் உடனடித் தலையீட்டைக் கோரினார். அது தற்போது சரியான வேலை நாம் ஒன்றைக் கவணிக்க வேண்டும் மருத்துவம் படிக்க வேண்டும் என உக்ரைனிலுள்ள மாணவர்கள் இந்தப் பாதிப்பு ஏற்படக் காரணமாக உள்நாட்டு மருத்துவக் கனவில் மண் விழுந்த காரணமாக அங்கு சென்று மாணவர்கள் படித்து வரும் நிலையில் தற்போது மேலும் ரஷ்யா - உக்ரைன் போர் அவர்களை பாதிக்க ஒரு உண்மை நாம் கூறியே ஆகவேண்டும் . முதலியார் ஜாதிச் சங்கங்கள் நடத்தும் ஏசி சண்முகம் தனியார் மருத்துவ கல்லூரிகள் கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார். சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பா ஜ க அகில இந்திய மகளிர் பிரிவின் நிர்வாகத்தில் உள்ள வானதி ஸ்ரீநிவான் கணவர் ஸ்ரீநிவாசன் தான் ஏ.சி. சண்முகத்தின் ஆடிட்டர் எனவும் கூறப்படுகிறது. உக்ரைன் ரஷ்யா போன்ற நாடுகளில் மருந்துவ படிப்பிற்கான செலவு மிகவும் குறைவு, ஆண்டுக்கு சுமார் 12,000 மாணவர்கள் உக்ரைன் ரஷ்யாவில் சீனாவில் மருத்துவம் படிக்கச் செல்கிறார்கள், நம் நாட்டில் மருத்துவப் படிப்பிற்கான செலவு 1.5 - 4 கோடி. நம் மாணவர்கள் ரஷ்யா உக்ரைன் போன்ற நாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்வதால் நம் நாட்டின் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு ஒரு ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் கையூட்டு பணம் நஷ்டம்
உண்மை தூங்கும் ஆனால் சாகாது. அல்பேனியா, அங்குவிலா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, பிரிட்டன், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், ஜெர்மனி, ஜிப்ரால்டர், ஹங்கேரி, கிரீஸ், டென்மார்க், கனடா, குரோஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்சி, அயர்லாந்து, ஐஸ்லாந்து, இத்தாலி, லாட்வியா , லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் ஆகிய 36 நாடுகளில் இருந்து ரஷ்யா வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நம் மாணவர்கள் மீட்சி பெற்று மீண்டும் வரவேண்டும்
ரஷ்யா தனது நாட்டினருக்கு அறிவுரையாக இந்த நாடுகளிலிருந்து ரஷ்யா வர இருக்கும் ரஷ்யர்கள் மாற்று வழியில் வேறு நாடுகள் வழியாக தாயகம் திரும்ப அந்நாட்டு அரசு விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. உதாரணமாக அஜர்பைஜான், ஆர்மீனியா, கஜகஸ்தான், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி போன்ற நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து ரஷ்ய விமானங்கள் மூலம் ரஷ்யா திரும்ப அறிவுறுத்தியுள்ளது தவிர லாட்வியா, லிதுவேனியா, போலந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளின் எல்லை வழியே சாலை மார்க்கமாக ரஷ்யா-வுக்கு வரவும் வலியுறுத்தியுள்ளது.
ரஷ்ய விமானங்கள் தடை செய்யப்பட்டிருக்கும் நாடுகளில் உள்ளவர்கள் அவசர கால மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான விமான சேவைக்காக காத்திருக்காமல் உடனடியாக தாங்களாகவே முன்வந்து மாற்று வழியில் ரஷ்யா திரும்ப வேண்டும் என்று அறிவித்துள்ளது.
கருத்துகள்