கடவுச்சீட்டு அல்லது பாஸ்போர்ட்
15 ஆம் நூற்றாண்டில் தான் பாஸ்போர்ட் எனும் வார்த்தை உருவானது அப்போது பாஸர் (வழிபோக்கர்) + போர்ட் (துறைமுகத்தை கடக்க இருப்பவர்) என்ற கூட்டுச் சொற்கள் சேர்ந்த பாஸ்போர்ட் என்றானது
.முன்பெல்லாம் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்வோர் மட்டுமே வெளிநாடு பயணிப்பார்கள் என்ற நிலை இருந்தது இந்தியாவில் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த நிலையில் அடல் பிகாரி வாஜ்பாய் அப்போது வெளி விவகார அமைச்சர் சாமானிய மக்கள் கடவுச்சீட்டு வாங்கும் நிலை வந்தது அயல் நாடுகளில் வேலை சென்றவர்களில் அப்போது தான் சாமானிய மக்கள் பாஸ்போர்ட் பற்றி அறிந்தனர் என்பது உண்மைத் தகவல் ஆனால், இன்று சூழலில் கல்வி, சுற்றுலா, வியாபாரம் என பல, பல தேவைகளுக்காக பலரும் வெளிநாடு செல்கின்றனர். ஆகவே, நம்மில் எல்லோராலும் பாஸ்போர்ட் கட்டாயமாக இருக்கும். இல்லாத விதிவிலக்காக ஒரு சிலர் மட்டுமே இருக்கலாம். இதுவரையிலும் பலர் வெளிநாடுகளுக்குச் செல்லாவிட்டாலும் கூட, என்றாவது ஒருநாள் பயன்படும் என்ற எண்ணத்தில் பாஸ்போர்ட் வைத்திருப்போம். பாஸ்போர்ட் இல்லாமல் சர்வதேச எல்லைகளைக் கடப்பது யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. ஒரு நாட்டுக்குள் உள்நுழையவும், வெளியேறவும் உங்களுக்கான அடையாள ஆவணமாக பாஸ்போர்ட் இருக்கிறது. மேலும், பாஸ்போர்ட் வைத்திருப்பவர் எங்கிருந்து வருகிறார், எங்கு சென்றார் என்ற தகவல்களும் அதில் இடம்பெற்றிருக்கும். பழைய காலத்தில் பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒரு சில குறிப்பிட்ட குடும்ப நயர்கள் பயன்படுத்திய காலத்தில் கணிப்பொறி இல்லை
கருத்துகள்