வழக்கறிஞருக்கும் கட்சிக்காரருக்குமிடையே உள்ள உறவு தொழில் முறை சம்பந்தப்பட்டது.
இருதரப்பினருக்குமிடையேயுள்ள நம்பிக்கையைப் பொறுத்து அமைகிற ஒன்றாகும். வழக்கறிஞர் தொழில் என்பது ஒரு சேவை (Service) மட்டுமல்ல. ஒரு கட்சிக்காரர் தன்னுடைய வழக்கறிஞரை மாற்றி புதிதாக வேறொருவரை நியமிக்க விரும்பினால் அந்த வழக்கிலிருந்து விலகிக் கொள்வதைத் தவிர பழைய வழக்கறிஞருக்கு வேறு வழியில்லை. அவரது கட்டணம் பாக்கி இல்லாமல் முடித்துக்கொண்டு கட்சிக்காரர் புதிதாக வேறு வழக்கறிஞரை நியமிப்பதால் பழைய வழக்கறிஞரின் அடிப்படை உரிமை பாதிக்கப்படுவதில்லை.
பழைய வழக்கறிஞர் தனது கட்சிக்காரர் தனது சம்மதம் இல்லாமல் புதிதாக வேறொரு வழக்கறிஞரை நியமித்து விட்டதால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்ய முடியாது. ஏனென்றால் வழக்குகளை விசாரிப்பது மட்டுமே நீதிமன்றத்தின் கடமையாகும். அந்த வேலையைச் செய்யாமல் ஒரு கட்சிக்காரருக்கும், அவரது வழக்கறிஞருக்கும் இடையேயான பிரச்சினைகளை மட்டுமே விசாரித்துக் கொண்டிருக்க முடியாது.
எனவே ஒரு கட்சிக்காரர் தன்னுடைய வழக்கறிஞரை மாற்றி புதிதாக வேறொருவரை வழக்கறிஞராக நியமிக்க ஆட்சேபனை இல்லை என்று ஒரு ஒப்புதல் கடிதத்தை அல்லது வக்கலாத்தை பழைய வழக்கறிஞரிடமிருந்து பெற வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தெரிவிக்கிறது.
W.A.NO-1029/2014, -நாள் 04.8.2014
S. திவாகர் Vs துணைப் பதிவாளர் (Writs), உயர்நீதிமன்றம், சென்னை 2014-6-MLJ-638.மரங்களுக்கு...
இலையுதிர் காலம் வருவதைப் போல மனித உறவுகளுக்குள்ளும்.. ஒருவருக்கொருவர், புரிந்துகொள்ள முடியாத காலநிலை வரும்.
அந்தக் காலநிலையைப் புரிந்துக்கொண்டு, நிதானமாக கையாண்டால், பின் வரும்காலங்களில். இலையுதிர் காலத்திற்குப் பிறகு, செழித்து வளரும் இலைகளைப் போல உறவுகள் செழித்து மலரும்!
கருத்துகள்