கேரளா மாநிலம் கூத்தாட்டுக்குளம் ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனையின் நடமாடும் மருத்துவ முகாம். தமிழகத்தில் மதுரை, தேனி, ராமநாதபுரம், மற்றும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலும் நடக்க உள்ளது.
இம்மருத்துவமனை கண் பரிசோதனை, சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்ட பேருந்தை வடிவமைத்துள்ளது. கூத்தாட்டுக்குளத்திற்கு செல்ல சிரமப்படும் கண் நோயாளிகளுக்காக இந்த நடமாடும்
மருத்துவமனை தமிழகத்தில் பல பகுதிகளுக்கு மருத்துவம் பார்க்க வருகிறது.
ஏப்ரல் மாதம். 2 ஆம் தேதியில் தேனி நகரில் கம்மவார் சங்கம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியிலும், ஏப்ரல். 3 ஆம் தேதியில் மதுரையில் மதுரைக் கல்லுாரி மைதானத்திலும், ஏப்ரல் மாதம் . 4 ஆம் தேதியிலும், இராமநாதபுரம் நகரில் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில், ஏப்ரல் .5 ஆம் தேதியிலும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரில் கண்ணதாசன் மணி மண்டபம் உள்ளிட்ட இடங்களில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கண் மருத்துவச் சிகிச்சை முகாம் நடைபெறும். சிகிச்சை பெறுவதற்கு முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு 0485- 225 3007ல் என்ற தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும்.
ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனையின் கேரளாவில் உள்ள மருத்துவமனை, தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெறுகின்றனர். அவர்களின் வசதிக்காக, மதுரை மையம் துவங்கப்பட்டுள்ளது. இம்மையம், தினமும் காலை 10 முதல் மதியம் 1, மதியம் 2 முதல் இரவு 7 மணி வரை இயங்கும்(0452-260 3007). ஞாயிறு விடுமுறை. இங்கு பணியில் உள்ள டாக்டர், கண் நோய் மட்டுமல்ல, பிற நோய்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளிப்பார். இங்கு மருந்தும் வாங்கிக் கொள்ள முடியும். ஒவ்வொரு மாதமும் (முதல் புதன்கிழமை), அதன் நிர்வாக தலைவர் மருத்துவ ஆலோசனை வழங்கி வருகிறார்.
கருத்துகள்