முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உள்ளூர் மைனர் சிறுமியைக் கடத்திய இஸ்லாமிய இளைஞர் சிறுமியின் பலி காரணமாக எட்டு நபர்கள் கைது

மதுரை மாவட்டம் மேலூர் அருகில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததா ?


உண்மை நிலை என்ன?  விஷமருந்திய மைனர் பெண், மரணம் நடக்கும் முன் பின்னணித் தகவல் :- சிகிச்சை பலனின்றிப் பலியான சிறுமி சிக்கிய உள்ளூர் இளைஞர் உள்ளிட்ட 8 நபர்கள் கைது

மேலூர் வட்டம் தும்பைப்பட்டி கிராமத்தில்  17 வயது மைனரான முக்குலத்தோர் சமூகத்தின் சிறுமியை உள்ளூர் இஸ்லாமிய இளைஞர் விரும்பிய நிலையில் அந்தப்  இளைஞரைத் தேடி ஈரோடு சென்ற பெண் விஷமருந்தி உயிரிழந்த விவகாரம் உடந்தையாக இருந்தவர்  உட்பட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில தற்கொலைக்கு முயன்ற  மைனர் சிறுமி பலியான தகவல் வெளியான நிலையில் சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவியது. இந்த நிலையில் நடந்ததாகக் கூறப்படும்  நிகழ்வு குறித்த ஒரு பார்வை.


மேலூர் காவல் நிலைய சரக எல்கைக்கு உட்பட்ட தும்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் மனைவி சபரி.


இவர்களுக்கு ஒரு மகளும் மகனும்  உள்ளனர். 17 வயதான மைனர் மகள் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கிற நிலையில் கடந்த மாதம் 14 ஆம் தேதி மகள் மாயமாகியதையடுத்து மேலூர் காவல் நிலையத்தில் பிப்ரவரி 15 ஆம் தேதி சிறுமியின் தாய் சபரி என்பவர் புகார் கொடுத்து அதற்கு  வழக்கு எதுவும் பதிவு செய்ய வேண்டாம் என்றும் வழக்குப் பதிவு செய்தால் தன்னுடைய மகளின் விவரம் பத்திரிக்கைகளில் செய்தியாக வந்துவிடும் எனக் கருதி மனு ரசீது மட்டும் பதிவு செய்யக்  கேட்டுக்கொண்டார் அதன்படி இப் புகார் சம்பந்தமாக மேலூர் காவல் நிலையத்தில் மனு ரசிது GSR கொடுக்கப்பட்டு புகார் விசாரணையிலிருந்தது.

பின்னர் மேலூர் காவல் நிலைய அதிகாரிகள் கேட்டுக் கொண்டதின் பேரில் மனுதாரர் வழக்கு பதிவு செய்யச் சம்மதம் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக மேலூர் காவல் நிலையத்தில் மைனர் சிறுமியைக் காணவில்லை என்று பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு அது விசாரணையிலிருந்த நிலையில் காவல் நிலையக் குற்ற எண் 88/2022 எனப் பதிவானது


காணாமல் போன சிறுமி அதே கிராமத்தைச் சேர்ந்த சுல்தான் என்பவரின் மகன் நாகூர் ஹனிபா என்பவருடன் விரும்பிய நிலையில் பழகியதாகவும் அவருடன் சென்றிருக்கலாம் என்றும் தெரியவந்த நிலையில். பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி அந்த மைனர் பெண் மாயமாகியுள்ள நிலையில் மார்ச் 3 ஆம் தேதி காலை தும்பைப்பட்டியைச் சேர்ந்த நாகூர் ஹனிபாவின் தாயார் மதினா பேகம் என்பவர் காணாமல் போன சிறுமியை மயக்க நிலையில் அவருடைய தாயார் வீட்டிற்கு கூட்டி வந்து விட்டுச் சென்றுள்ளார்.


உடனே சிறுமியின் தாயார் சபரி தன்னுடைய மகளை மேலூர் தனியார் மருத்துவமனைக்கு காலை 11 மணிக்கு கூட்டிச் சென்று சிகிச்சை அளித்துள்ளார். அங்கு மருத்துவரின் ஆலோசனை பேரில் அவரை மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். இதையடுத்து மேலூர் காவல் நிலையத்தில் கடந்த 15 ஆம் தேதி முதல் மைனர் சிறுமியின் தாய் கொடுத்த புகார்  விசாரணை நிலுவையிலிருந்து வந்தது.   ஊர் மக்கள் ஒரு புறம் நெருக்கடி தர, காவல்துறை மறுபக்கம் நெருக்கடி தர நாகூர் ஹனிபாவின் தாயார் சிறுமியை அழைத்து வந்தது குறித்து தன் மகனுடன் சண்டை போட்டுள்ளார். மேலும் இருவரையும் ஏற்கவும் மதம் இனம் காரணமாக மற்றும் உள்ளூர் என்பதாலும் பயம் காரணமாக மறுத்துள்ளார்.  அதன் பிறகு மேற்படி நாகூர் ஹனிபா 3 எலி பேஸ்ட்களை  வாங்கி வந்து சிறுமியும் நாகூர் ஹனிபாவும் தற்கொலை செய்து கொள்ளலாம் என  இருவரும் எலி பேஸ்ட் விஷம் உட்கொணடுள்ளனர் .


ஆனால் நாகூர் ஹனிபா அதை முழுமையாகச் சாப்பிடாமல் வெளியில் துப்பியுள்ளார். ஆனால் அந்த மைனர் சிறுமி சிறிதளவு எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளார் . பின்னர் அச்சிறுமியின் உடல்நிலை சரியில்லாமல் போகவே அங்கிருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் எலி மருந்து சாப்பிட்டதைச் சொல்லாமல்  சிகிச்சை பெற்றுள்ளனர்.                                           தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த போது அவருக்கு கையில் டிரிப் ஏற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு உடல்நிலை மேலும் சரியில்லாமல் போகவே ஈரோட்டிலிருந்து நாகூர் ஹனிபா அந்தச் சிறுமியை தும்பைப்பட்டி அழைத்து வந்து தன்னுடைய தாயார் மதினாவிடம் 2.3.2022 ஆம் தேதி இரவு சிறுமியின் தாயாரிடம் ஒப்படைக்குமாறு கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

பின்னர் காலையில் நாகூர் ஹனிபா தாயார் மதினா பேகம் சிறுமியின் தாயார் சபரியிடம்  ஒப்படைத்துள்ளார். தற்போது சிறுமி எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளார் என்ற விவரம் தெரிந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறுமி உயிரிழந்ததாகத் தெரிகிறது. மேலும் மருத்துவ அதிகாரிகளின் அறிக்கையில் மேற்படி சிறுமி வேறு எந்த விதமான கூட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகப் படவில்லை என்றும் சிறுமியின் உடலில் காயங்கள் ஏதுமில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இவ்வழக்கில் காவல்துறையினர் தன்னைக் கைது செய்து விடுவார்கள் என்று ஈரோடு பள்ளிபாளையத்தில் தலைமறைவாக இருந்த நாகூர் ஹனிபா என்பவரை தனிப்படையினர் கைது செய்தனர். மேலும் அவருக்கு உதவியாக இருந்த அவருடைய நண்பர் மதுரையைச் சேர்ந்த பிரகாஷ், பெருமாள் கிருஷ்ணன், ராஜாமுகமது மற்றும் திருப்பூரைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரை பல்லடத்தில் வைத்தும் கைது செய்து மேலூர் கொண்டு வந்துள்ளனர்.

அதேபோல் நாகூர் ஹனிபாவின் தாயார் மதினா பேகம், தாய்மாமாவின் மனைவி ரம்ஜான் பேகம் என்ற கண்ணம்மாள் மற்றும் அவரது உறவினர் ராஜாமுகமது ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மொத்தம் உள்ள 10 குற்றவாளிகளில் 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் இவ் வழக்கில் எதிரிக்கு உதவிய 2 நபர்களைக் கைது செய்ய தனிப்படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியுடன் நாகூர் ஹனிபா பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதால் இவ்வழக்கின் சட்டப்பிரிவுகள் போக்சோ சட்டத்தின்படி மாற்றப்பட்டுள்ளது. 


நாகூர் கனி (வயது 29) சுல்தான் (வயது 50 ) அப்பாஸ்  (வயது 45) சாகுல்  (வயது 32) இரம்ஜான் (வயது 25) மதீனா (வயது 50)  ரகுமான் (வயது 35) தற்போதைய நிலையில் உள்ள தகவலாகும்                                                      நாம் தும்பைப்பட்டி சார்ந்த சமூகத்தின் அந்தஸ்து உள்ள பலர் மூலம் சேகரிப்பு செய்த உண்மை நிலவரம் இதுவே.                                இதுகுறித்து பாஜக வின் முன்னணி பிரமுகர் எச் ராஜா கண்டனம் தெரிவித்து உள்ளார் அதில்

மேலூர் சிறுமியின் தாயார் தன் மைனர் மகள் காணவில்லை என மேலூர் காவல் நிலைய ஆய்வாளர் சார்லசிடம் 15/2/22 ல்  புகார் செய்தும் காவல்துறையின் மெத்தனத்தால் இன்று அச்சிறுமி இறந்துள்ளார். இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. செயல்படாத காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் .  இந்த மோசமான செயலை கண்டித்தும், அச்சிறுமிக்கு நியாயம் கேட்டும் போராடும் மக்களுக்கு எதிராக தடியடி நடத்தும் காவல் துறையின் அத்துமீறிய ஒருதலைப் பட்சமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.. ஆனால் இது மைனர் பெண் விவகாரத்தில் அந்த இஸ்லாமிய இளைஞர் செய்த குற்றம்



அவர் மைனர் அல்லாத மேஜர் என்றால் இது இவ்வளவு பெரிய விவகாரத்தில் வந்திருக்காது என்பதே உண்மை.  தனக்கு திருமணம் பேசுவது அறிந்த அந்த மைனர் பெண் தன் காதலனை தேடி ஈரோடு சென்ற தகவல் தான் நாம் விசாரணை செய்த நிலையில் பலர் கூறிய நிகழ்வு.பாஜக அரசியல் காரணங்களுக்காக அந்த ஊர் முக்குலத்தோர் மக்கள் உண்மை நிலை தெரிய வந்ததன் பின்னர் ஒத்துழைப்பு இல்லை என்பதால் எச். இராஜா கூற்று எடுபடவில்லை என்பது தெரிகிறது. சிறுமியின் மரண வழக்கு போஸ்கோ சட்டத்தில் பதியப்பட்டிருக்கும் நிலையில் சட்டப் படி அந்தச் சிறுமியோட புகைப்படத்தையும் பெயரையும் பொதுத் தளத்தில் பதிய கூடாது. என்ற நிலையில் இருக்கும் போது பலர் புகைப்படங்கள் பதிவு செய்வது அவர்கள் அறியாமையா சட்டப்படி கூட வேணாம் குறைந்த பட்ச மனிதாபிமான அடிப்படையிலாவது இறந்த சிறுமியின் பெயரை புகைப்படத்தை பரப்புவதை நிறுத்துங்கள். இது கடந்த காலத்தில் நிர்பயா வழக்கில் பெயர் மாற்றம் செய்தே வெளியிடப்பட்ட நிலையில் தற்போது பலரும் சட்ட விதி மீறல்கள் செய்வது குற்றம் எனத் தெரிந்தா அல்லது தெரியாமலா என்பது தான் எழு வினா ?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...