நீதிமன்ற விசாரணைகள் நேரலை ஒளிபரப்பு உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரலையாக ஒளிபரப்புவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க
உச்சநீதிமன்றத்தின் மின்னணு கமிட்டி குழு ஒன்றை அமைத்துள்ளது. இது தவிர உச்சநீதிமன்ற மின்னணு கமிட்டியின் வழிகாட்டுதலின்படி,
நேரலை ஒளிபரப்புக்கான மாதிரி விதிமுறைகளை வகுப்பதற்கான துணைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள் தெரிவிக்கும் விதிமுறைகள், உயர்நீதிமன்றங்களின் கணினி குழுக்களுக்கு அனுப்பப்பட்டு கருத்து கேட்கப்படும்.
முதற்கட்டமாக தேசிய மற்றும் அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் 3 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு பின்னர், கட்டமைப்பு வசதிகளுக்கேற்ப விரிவுபடுத்தப்படும்.
குஜராத், ஒரிசா, கர்நாடகா, ஜார்க்கண்ட், பாட்னா மற்றும் மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றங்கள், காணொலி வாயிலாக நடைபெறும் விசாரணைகளை நேரலையாக ஒளிபரப்புவதன் மூலம், ஊடகங்கள் மற்றும் விருப்பமுள்ளவர்களும் இதில் பங்கேற்க வகை செய்யப்பட்டுள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு.கிரண் ரிஜிஜூ இதனைத் தெரிவித்துள்ளார்
கருத்துகள்