மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை தனியாருக்கு பதிவு செய்த மோசடிப் புகாரின் பதிவுத் துறை சார் பதிவாளர் மீது ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
முதல் தகவல் அறிக்கையில் கண்ட விபரம் வருமாறு:- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை தனியாருக்கு பதிவு செய்ததாக எழுந்த புகார் மதுரையைச் சேர்ந்தவர் பாலமுருகன்.
2019-ஆம் ஆண்டில் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பத்திரப்பதிவுத் துறை அலுவலகத்தில் சார்பதிவாளராகப் பணி செய்த போது, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, தனது அதிகார வரம்புக்கு வெளியே உள்ள நிலம் உள்ளிட்ட பல சொத்துக்களை கோவில் அதிகாரிகளிடம் தடையில்லா சான்றிதழ் பெறாமல் தனியாருக்கு ஆதரவாக பதிவு செய்து கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில்
மதுரை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தியதில் சார் பதிவாளர் பாலமுருகன் கோவில் சொத்துக்களை தனியாருக்கு பதிவு செய்து கொடுத்தது தெரிய வந்ததனால் தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறைக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்ததைத்.
தொடர்ந்து பாலமுருகன் மீது ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால்
தற்போது குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் நிர்வாக மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
பாலமுருகன் அவர் மீது மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக்கள் சேர்த்ததாக முன்பே ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
கருத்துகள்