முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குஜராத் மாநிலம் காந்திநகரில் தேசியப் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை பிரதமர் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்

குஜராத் மாநிலம் காந்திநகரில் தேசியப் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து, அதன் முதலாவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார்


மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்

2002 முதல் 2013 வரை , திரு நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது, சட்டம் ஒழுங்கை அவர் புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கத் தொடங்கினார்


குஜராத்தின் முதலமைச்சராக திரு மோடி பதவியேற்றபோது, அவர் மேற்கொண்ட முதல் நடவடிக்கை காவல்துறையை நவீனமாக்கியதுதான், அவரது தலைமையின் கீழ், குஜராத் கணினிமயமாக்கப்பட்ட காவல்நிலையங்களைக் கொண்ட முதல் மாநிலமாக ஆனது

காவல் நிலையங்களை இணைக்கும் நவீன மென்பொருளுக்கான தளத்தை திரு மோடி தயாரித்தார், அதன் மூலம், கணினியைக் கையாளும் திறன்பெற்றவர்கள் காவலர்களாக பணியமர்த்த முன்னுரிமை அளிக்கப்பட்டது, அவர்களுக்கு விரிவான பயிற்சி அளிக்கப்பட்டு, காவல்துறை முழுவதும் கணினிமயமாக்கப்பட்டது


நாட்டில் மிகச்சிறந்த சட்டப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவது, தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்துக்கான தொலைநோக்கு, உலகத்தரம் வாய்ந்த தடய அறிவியல் பல்கலைக்கழகத்தை குஜராத்தில் உருவாக்குவது ஆகிய மூன்று பெரிய முன்முயற்சிகளை திரு நரேந்திர மோடி

குஜராத் மாநிலம் காந்திநகரில் தேசிய பாதுகாப்புப்  பல்கலைக்கழகத்தைப்  பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து, அதன் முதலாவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்  துறை அமைச்சர் திரு அமித் ஷா தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். குஜராத் மாநில ஆளுநர் திரு ஆச்சார்ய தேவ விரத், முதலமைச்சர் திரு பூபேந்திர பட்டேல் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தமது உரையில், 2002 முதல் 2013 வரை , திரு நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது, சட்டம் ஒழுங்கை அவர் புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கத் தொடங்கியதாக குறிப்பிட்டார். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலிருந்து, சட்டம் ஒழுங்கை வெறும் பணியாக மட்டும் கருதுவது வழக்கமாக  இருந்து வந்தது. காவல் நிலையங்களை இணைக்கும் நவீன மென்பொருளுக்கான தளத்தை திரு மோடி தயாரித்தார், அதன் மூலம், கணினியைக் கையாளும் திறன்பெற்றவர்கள் காவலர்களாக பணியமர்த்த முன்னுரிமை அளிக்கப்பட்டது, அவர்களுக்கு விரிவான பயிற்சி அளிக்கப்பட்டு, காவல்துறை முழுவதும் கணினிமயமாக்கப்பட்டது.

அதன் பின்னர், தடயவியல் ஆய்வகங்களை சிறைகளுடன் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

குஜராத் மாநில முதலமைச்சராக திரு நரேந்திர மோடி இருந்தபோது, நாட்டில் மிகச்சிறந்த சட்டப்  பல்கலைக்கழகத்தை உருவாக்குவது, தேசிய பாதுகாப்புப்  பல்கலைக்கழகத்துக்கான தொலைநோக்கு, உலகத்தரம் வாய்ந்த தடய அறிவியல் பல்கலைக்கழகத்தை குஜராத்தில் உருவாக்குவது ஆகிய மூன்று பெரிய முன்முயற்சிகளை திரு நரேந்திர மோடி எடுத்தார் என்று திரு அமித் ஷா கூறினார். குஜராத்தில் திரு மோடி பெரும் அளவிலான மாற்றங்களைப்  படிப்படியாக மேற்கொண்டு, அதனை நாட்டின்  முன் மாதிரியாக வைத்தார>

மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பகுதியில் பயிற்சி அளிக்கப்பட்டால், அவர்கள் அதே பகுதியில் பங்களிக்க முன்வருவதற்கு வழி ஏற்படும். இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னர் குஜராத்தில் வெறும் மூன்றே ஆண்டுகளில், தண்டனை பெற்றுத்தரும் விகிதம் 22 சதவீதமாக உயர்ந்தது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, நிபுணர்கள், அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தயாரிக்கப்பட வேண்டும், இந்த அனைத்து அம்சங்களும் பிரதமரால் ஏற்படுத்தப்பட்டவையே என அவர் கூறினார்.

2014-ல், மக்கள் திரு மோடியைப்  பிரதமராக தேர்ந்தெடுத்து நாட்டுக்கு சேவை புரியும் வாய்ப்பை வழங்கியபோது, ஒவ்வொரு துறையிலும் ஏற்படுத்தப்பட்டிருந்த நடைமுறைகளை உடைத்து, காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை கொண்டுவரும் வேறுபட்ட அணுகுமுறையை  அவர் முயற்சித்தார் என்று மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். தேசிய பாதுகாப்புப்  பல்கலைக்கழகம் இதற்கு ஒரு உதாரணமாகும். தேசிய பாதுகாப்புப்  பல்கலைக்கழகம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல அமைப்புகளுடன் பணியாற்றி, அவற்றின் தேவையைப் பூர்த்தி செய்யுமளவுக்கு  பயனுள்ள வழிகாட்டுதலை வழங்குவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்று அவர் கூறினார்.

2018-ம் ஆண்டு முதல் 5 பிரிவுகளைச் சேர்ந்த 1,091 மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளதாக திரு அமித் ஷா கூறினார். இங்கு பட்டம் பெற்ற அனைவரும், ஏதாவது ஒரு வழியில் நாட்டுக்கு நிச்சயமாக பங்களிக்க முடியும் என்று கூற விரும்புவதாக  அவர் தெரிவித்தார். தேசிய பாதுகாப்புப்  பல்கலைக்கழக வளாகங்கள் நாடு முழுவதும் திறக்கப்படும் போது, பயிற்சி பெற்ற மாணவர்கள் பல்வேறு பகுதிகளில் காவல்துறை படைகளில் பணியாற்றும் போது, காவல்துறையின் ஒத்துழைப்பு பணிகளில் நிபுணர்களாக திகழும்போது, நாட்டில் காவல்துறை படைகளை ஒற்றுமை உணர்வுடன் நடத்தும் இலக்கை தேசிய பாதுகாப்புப்  பல்கலைக்கழகம் எட்டும் என்று அமித் ஷா கூறினார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த