முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குஜராத் மாநிலம் காந்திநகரில் தேசியப் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை பிரதமர் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்

குஜராத் மாநிலம் காந்திநகரில் தேசியப் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து, அதன் முதலாவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார்


மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்

2002 முதல் 2013 வரை , திரு நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது, சட்டம் ஒழுங்கை அவர் புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கத் தொடங்கினார்


குஜராத்தின் முதலமைச்சராக திரு மோடி பதவியேற்றபோது, அவர் மேற்கொண்ட முதல் நடவடிக்கை காவல்துறையை நவீனமாக்கியதுதான், அவரது தலைமையின் கீழ், குஜராத் கணினிமயமாக்கப்பட்ட காவல்நிலையங்களைக் கொண்ட முதல் மாநிலமாக ஆனது

காவல் நிலையங்களை இணைக்கும் நவீன மென்பொருளுக்கான தளத்தை திரு மோடி தயாரித்தார், அதன் மூலம், கணினியைக் கையாளும் திறன்பெற்றவர்கள் காவலர்களாக பணியமர்த்த முன்னுரிமை அளிக்கப்பட்டது, அவர்களுக்கு விரிவான பயிற்சி அளிக்கப்பட்டு, காவல்துறை முழுவதும் கணினிமயமாக்கப்பட்டது


நாட்டில் மிகச்சிறந்த சட்டப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவது, தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்துக்கான தொலைநோக்கு, உலகத்தரம் வாய்ந்த தடய அறிவியல் பல்கலைக்கழகத்தை குஜராத்தில் உருவாக்குவது ஆகிய மூன்று பெரிய முன்முயற்சிகளை திரு நரேந்திர மோடி

குஜராத் மாநிலம் காந்திநகரில் தேசிய பாதுகாப்புப்  பல்கலைக்கழகத்தைப்  பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து, அதன் முதலாவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்  துறை அமைச்சர் திரு அமித் ஷா தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். குஜராத் மாநில ஆளுநர் திரு ஆச்சார்ய தேவ விரத், முதலமைச்சர் திரு பூபேந்திர பட்டேல் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தமது உரையில், 2002 முதல் 2013 வரை , திரு நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது, சட்டம் ஒழுங்கை அவர் புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கத் தொடங்கியதாக குறிப்பிட்டார். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலிருந்து, சட்டம் ஒழுங்கை வெறும் பணியாக மட்டும் கருதுவது வழக்கமாக  இருந்து வந்தது. காவல் நிலையங்களை இணைக்கும் நவீன மென்பொருளுக்கான தளத்தை திரு மோடி தயாரித்தார், அதன் மூலம், கணினியைக் கையாளும் திறன்பெற்றவர்கள் காவலர்களாக பணியமர்த்த முன்னுரிமை அளிக்கப்பட்டது, அவர்களுக்கு விரிவான பயிற்சி அளிக்கப்பட்டு, காவல்துறை முழுவதும் கணினிமயமாக்கப்பட்டது.

அதன் பின்னர், தடயவியல் ஆய்வகங்களை சிறைகளுடன் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

குஜராத் மாநில முதலமைச்சராக திரு நரேந்திர மோடி இருந்தபோது, நாட்டில் மிகச்சிறந்த சட்டப்  பல்கலைக்கழகத்தை உருவாக்குவது, தேசிய பாதுகாப்புப்  பல்கலைக்கழகத்துக்கான தொலைநோக்கு, உலகத்தரம் வாய்ந்த தடய அறிவியல் பல்கலைக்கழகத்தை குஜராத்தில் உருவாக்குவது ஆகிய மூன்று பெரிய முன்முயற்சிகளை திரு நரேந்திர மோடி எடுத்தார் என்று திரு அமித் ஷா கூறினார். குஜராத்தில் திரு மோடி பெரும் அளவிலான மாற்றங்களைப்  படிப்படியாக மேற்கொண்டு, அதனை நாட்டின்  முன் மாதிரியாக வைத்தார>

மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பகுதியில் பயிற்சி அளிக்கப்பட்டால், அவர்கள் அதே பகுதியில் பங்களிக்க முன்வருவதற்கு வழி ஏற்படும். இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னர் குஜராத்தில் வெறும் மூன்றே ஆண்டுகளில், தண்டனை பெற்றுத்தரும் விகிதம் 22 சதவீதமாக உயர்ந்தது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, நிபுணர்கள், அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தயாரிக்கப்பட வேண்டும், இந்த அனைத்து அம்சங்களும் பிரதமரால் ஏற்படுத்தப்பட்டவையே என அவர் கூறினார்.

2014-ல், மக்கள் திரு மோடியைப்  பிரதமராக தேர்ந்தெடுத்து நாட்டுக்கு சேவை புரியும் வாய்ப்பை வழங்கியபோது, ஒவ்வொரு துறையிலும் ஏற்படுத்தப்பட்டிருந்த நடைமுறைகளை உடைத்து, காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை கொண்டுவரும் வேறுபட்ட அணுகுமுறையை  அவர் முயற்சித்தார் என்று மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். தேசிய பாதுகாப்புப்  பல்கலைக்கழகம் இதற்கு ஒரு உதாரணமாகும். தேசிய பாதுகாப்புப்  பல்கலைக்கழகம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல அமைப்புகளுடன் பணியாற்றி, அவற்றின் தேவையைப் பூர்த்தி செய்யுமளவுக்கு  பயனுள்ள வழிகாட்டுதலை வழங்குவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்று அவர் கூறினார்.

2018-ம் ஆண்டு முதல் 5 பிரிவுகளைச் சேர்ந்த 1,091 மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளதாக திரு அமித் ஷா கூறினார். இங்கு பட்டம் பெற்ற அனைவரும், ஏதாவது ஒரு வழியில் நாட்டுக்கு நிச்சயமாக பங்களிக்க முடியும் என்று கூற விரும்புவதாக  அவர் தெரிவித்தார். தேசிய பாதுகாப்புப்  பல்கலைக்கழக வளாகங்கள் நாடு முழுவதும் திறக்கப்படும் போது, பயிற்சி பெற்ற மாணவர்கள் பல்வேறு பகுதிகளில் காவல்துறை படைகளில் பணியாற்றும் போது, காவல்துறையின் ஒத்துழைப்பு பணிகளில் நிபுணர்களாக திகழும்போது, நாட்டில் காவல்துறை படைகளை ஒற்றுமை உணர்வுடன் நடத்தும் இலக்கை தேசிய பாதுகாப்புப்  பல்கலைக்கழகம் எட்டும் என்று அமித் ஷா கூறினார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...