முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காவல்நிலையத்தில் 'சிசிடிவி' பதிவுகள் பாதுகாப்பு குறித்து டி.ஜி.பி.,க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

காவல்நிலையத்தில் 'சிசிடிவி' பதிவுகள் பாதுகாப்பு குறித்து  டி.ஜி.பி.,க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.


காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்புகீ கேமராக்களில் பதிவான காட்சிகளை ஓராண்டுக்கு அல்லது  பதினெட்டு மாதங்கள் வரை பாதுகாப்பதை உள்துறை செயலர், மற்றும் டி.ஜி.பி., உறுதி செய்ய வேண்டும். 

தவறினால் கீழ்நிலை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கஸ்துாரி நாயக்கன்பட்டி சரவண பாலகுருசாமி சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்:

ஒரு பிரச்னைக்காக  சிலருக்கு எதிராக வடமதுரை காவல் நிலையத்தில் புகார் செய்தேன்; வழக்குப் பதிய இலஞ்சம் கேட்டனர். நான் தரவில்லை. 


வழக்குப்  பதிவதற்கு பதிலாக என்னை சட்டவிரோதமாகக் காவலில் வைத்தனர். உடல் நலம் கருதி சிகிச்சை எடுக்கக்கூட அனுமதிக்கவில்லை.

என்னிடமிருந்த மொபைல் போன்களைப் பறித்து வைத்துக் கொண்டனர். சட்டவிரோதமாகக் காவலில் வைத்ததை உறுதி செய்ய காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்புக் கேமராவின் பதிவுகளைச் சரிபார்க்க வேண்டும்.

மனித உரிமை மீறல் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, திண்டுக்கல் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டுமென தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருந்தார்.

அந்த

மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில்:

காவல்நிலையத்தில் அல்லது வேறு எந்தத் துறையையும் அணுகினால், தங்களுக்கு தகுந்த தீர்வு கிடைக்குமென மக்கள் நினைக்க வேண்டும்.

 மாறாக ஊழல் புகார்களுக்கு வாய்ப்பளித்தால், பொது அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, இம்மாதிரியான மனுக்கள் உயர்நீதிமன்றத்திற்கு வரும்.

அரசுத்தரப்பு,     'மனுதாரர் மீது கிரிமினல் வழக்குபீ பதிவு செய்யப்பட்டதால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். 

இதனால் பணிப் பலன்களை இழந்தார்.

உள்நோக்கத்தில் செயல்பட்ட காவல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி இம்மனு தாக்கல் செய்துள்ளாரெனதீ, தெரிவித்தது. இதைப் புறந்தள்ள முடியாது.

கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தால் உண்மை வெளிவரும் என, மனுதாரர் கூறுகிறார்.

ஆனால், காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கீகேமரா பதிவுகள் 30 நாட்களுக்குப் பாதுகாக்கப்படும். 

பின் தானாகவே அழிந்து விடும். பதிவுகளை சரிபார்க்க வாய்ப்பில்லை' என, அரசு தரப்புக் கூறுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டு உத்தரவுப்படி காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை 18 மாதங்களுக்கு சேமித்துப் பாதுகாக்க வேண்டும்.

இதை தமிழக உள்துறைச் செயலாளர், மற்றும் டி.ஜி.பி., உறுதி செய்ய வேண்டும். மேலும் கீழ்நிலை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்

பொதுவாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமே போதாது. 

குற்றச்சாட்டுகளை மனுதாரர் நிரூபிக்கவில்லை. உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை அல்லது சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுக்குப் புகார் அளிக்கவில்லை. 

மனுதாரர் கோரும் நிவாரணம் நிராகரிக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...