முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காவல்நிலையத்தில் 'சிசிடிவி' பதிவுகள் பாதுகாப்பு குறித்து டி.ஜி.பி.,க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

காவல்நிலையத்தில் 'சிசிடிவி' பதிவுகள் பாதுகாப்பு குறித்து  டி.ஜி.பி.,க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.


காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்புகீ கேமராக்களில் பதிவான காட்சிகளை ஓராண்டுக்கு அல்லது  பதினெட்டு மாதங்கள் வரை பாதுகாப்பதை உள்துறை செயலர், மற்றும் டி.ஜி.பி., உறுதி செய்ய வேண்டும். 

தவறினால் கீழ்நிலை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கஸ்துாரி நாயக்கன்பட்டி சரவண பாலகுருசாமி சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்:

ஒரு பிரச்னைக்காக  சிலருக்கு எதிராக வடமதுரை காவல் நிலையத்தில் புகார் செய்தேன்; வழக்குப் பதிய இலஞ்சம் கேட்டனர். நான் தரவில்லை. 


வழக்குப்  பதிவதற்கு பதிலாக என்னை சட்டவிரோதமாகக் காவலில் வைத்தனர். உடல் நலம் கருதி சிகிச்சை எடுக்கக்கூட அனுமதிக்கவில்லை.

என்னிடமிருந்த மொபைல் போன்களைப் பறித்து வைத்துக் கொண்டனர். சட்டவிரோதமாகக் காவலில் வைத்ததை உறுதி செய்ய காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்புக் கேமராவின் பதிவுகளைச் சரிபார்க்க வேண்டும்.

மனித உரிமை மீறல் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, திண்டுக்கல் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டுமென தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருந்தார்.

அந்த

மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில்:

காவல்நிலையத்தில் அல்லது வேறு எந்தத் துறையையும் அணுகினால், தங்களுக்கு தகுந்த தீர்வு கிடைக்குமென மக்கள் நினைக்க வேண்டும்.

 மாறாக ஊழல் புகார்களுக்கு வாய்ப்பளித்தால், பொது அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, இம்மாதிரியான மனுக்கள் உயர்நீதிமன்றத்திற்கு வரும்.

அரசுத்தரப்பு,     'மனுதாரர் மீது கிரிமினல் வழக்குபீ பதிவு செய்யப்பட்டதால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். 

இதனால் பணிப் பலன்களை இழந்தார்.

உள்நோக்கத்தில் செயல்பட்ட காவல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி இம்மனு தாக்கல் செய்துள்ளாரெனதீ, தெரிவித்தது. இதைப் புறந்தள்ள முடியாது.

கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தால் உண்மை வெளிவரும் என, மனுதாரர் கூறுகிறார்.

ஆனால், காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கீகேமரா பதிவுகள் 30 நாட்களுக்குப் பாதுகாக்கப்படும். 

பின் தானாகவே அழிந்து விடும். பதிவுகளை சரிபார்க்க வாய்ப்பில்லை' என, அரசு தரப்புக் கூறுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டு உத்தரவுப்படி காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை 18 மாதங்களுக்கு சேமித்துப் பாதுகாக்க வேண்டும்.

இதை தமிழக உள்துறைச் செயலாளர், மற்றும் டி.ஜி.பி., உறுதி செய்ய வேண்டும். மேலும் கீழ்நிலை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்

பொதுவாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமே போதாது. 

குற்றச்சாட்டுகளை மனுதாரர் நிரூபிக்கவில்லை. உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை அல்லது சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுக்குப் புகார் அளிக்கவில்லை. 

மனுதாரர் கோரும் நிவாரணம் நிராகரிக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த