காவல்நிலையத்தில் 'சிசிடிவி' பதிவுகள் பாதுகாப்பு குறித்து டி.ஜி.பி.,க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.
காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்புகீ கேமராக்களில் பதிவான காட்சிகளை ஓராண்டுக்கு அல்லது பதினெட்டு மாதங்கள் வரை பாதுகாப்பதை உள்துறை செயலர், மற்றும் டி.ஜி.பி., உறுதி செய்ய வேண்டும்.
தவறினால் கீழ்நிலை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கஸ்துாரி நாயக்கன்பட்டி சரவண பாலகுருசாமி சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்:
ஒரு பிரச்னைக்காக சிலருக்கு எதிராக வடமதுரை காவல் நிலையத்தில் புகார் செய்தேன்; வழக்குப் பதிய இலஞ்சம் கேட்டனர். நான் தரவில்லை.
வழக்குப் பதிவதற்கு பதிலாக என்னை சட்டவிரோதமாகக் காவலில் வைத்தனர். உடல் நலம் கருதி சிகிச்சை எடுக்கக்கூட அனுமதிக்கவில்லை.
என்னிடமிருந்த மொபைல் போன்களைப் பறித்து வைத்துக் கொண்டனர். சட்டவிரோதமாகக் காவலில் வைத்ததை உறுதி செய்ய காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்புக் கேமராவின் பதிவுகளைச் சரிபார்க்க வேண்டும்.
மனித உரிமை மீறல் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, திண்டுக்கல் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டுமென தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருந்தார்.
அந்த
மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில்:
காவல்நிலையத்தில் அல்லது வேறு எந்தத் துறையையும் அணுகினால், தங்களுக்கு தகுந்த தீர்வு கிடைக்குமென மக்கள் நினைக்க வேண்டும்.
மாறாக ஊழல் புகார்களுக்கு வாய்ப்பளித்தால், பொது அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, இம்மாதிரியான மனுக்கள் உயர்நீதிமன்றத்திற்கு வரும்.
அரசுத்தரப்பு, 'மனுதாரர் மீது கிரிமினல் வழக்குபீ பதிவு செய்யப்பட்டதால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இதனால் பணிப் பலன்களை இழந்தார்.
உள்நோக்கத்தில் செயல்பட்ட காவல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி இம்மனு தாக்கல் செய்துள்ளாரெனதீ, தெரிவித்தது. இதைப் புறந்தள்ள முடியாது.
கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தால் உண்மை வெளிவரும் என, மனுதாரர் கூறுகிறார்.
ஆனால், காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கீகேமரா பதிவுகள் 30 நாட்களுக்குப் பாதுகாக்கப்படும்.
பின் தானாகவே அழிந்து விடும். பதிவுகளை சரிபார்க்க வாய்ப்பில்லை' என, அரசு தரப்புக் கூறுகிறது.
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டு உத்தரவுப்படி காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை 18 மாதங்களுக்கு சேமித்துப் பாதுகாக்க வேண்டும்.
இதை தமிழக உள்துறைச் செயலாளர், மற்றும் டி.ஜி.பி., உறுதி செய்ய வேண்டும். மேலும் கீழ்நிலை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்
பொதுவாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமே போதாது.
குற்றச்சாட்டுகளை மனுதாரர் நிரூபிக்கவில்லை. உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை அல்லது சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுக்குப் புகார் அளிக்கவில்லை.
மனுதாரர் கோரும் நிவாரணம் நிராகரிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
கருத்துகள்