காகிதம் விலை இரு மடங்கு உயர்வு காரணமாக பாதிப்புகளுக்கு உள்ளாகும் அச்சு இதழ்கள் மற்றும் செய்தி ஊடகங்கள்
காகிதம் விலை இரு மடங்கு உயர்வு; ஏப்ரல் .1 ஆம் தேதி முதல் கட்டணம் அதிகரிப்பு - காகிதம் விலை ஒரே ஆண்டில் இரு மடங்கு உயர்ந்துள்ள நிலையில் வேதிப் பொருட்கள் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வால் ஏப்ரல். 1 ஆம் தேதி முதல் 'ஆப்செட் பிரின்டிங்' பணிகளுக்கு 40 சதவீத கட்டணம் அதிகரிப்பு செய்யும் முடிவு அச்சகத்தில் தினசரி வார மற்றும் மாத இதழ்கள் பாதிப்புகளைச் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது..
சேலம் மாவட்ட பேப்பர் (காகிதம்) அலாய்டு விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் விஸ்வநாதன் தெரிவித்தாவது: வெளிநாட்டிலிருந்து பேப்பர் (காகிதம்) தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டதைக் காரணம் காட்டி பேப்பர் (காகிதம்) விலை 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில் .
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற காகித ஆலைகளான டி.என்.பி.எல்., எனும் தமிழ் நாடு காகித ஆலை ,சேசஷாய், பலார்பூர் ஜெ.கே. வேஸ்ட் கோர்ட்ஸ், ஆந்திரா பேப்பர் ஆலை ஆகியவற்றுக்கு தேவையான மூலப்பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து வந்த நிலையில். அவைகள் தற்போது முற்றிலுமாக நின்று போனது..
காகித ஆலைகள் தங்களது தயாரிப்பு பேப்பர் உள்ளிட்டவற்றின் விலையை ஜனவரி. 15 ஆம் தேதி முதல் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இரண்டு மாதத்தில் பேப்பர் (காகிதம் )விலை டன் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இது கடந்த 2021 மார்ச் மாதத்தில் 'நியூஸ் பிரின்ட்' டன் 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது படிப்படியாக உயர்ந்து நேற்று 70 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிராப்ட் பேப்பர் 36 ஆயிரம் ரூபாய் விற்றது 80 ஆயிரம் ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. டூ பிளஸ் 4 பேப்பர் டன் 52 ஆயிரம் ரூபாயிலிருந்து 70 ஆயிரம் ரூபாயாகவும் மேப்லித்தோ டன் 75 ஆயிரம் ரூபாயிலிருந்து 86 ஆயிரம் ரூபாயாகவும் ஹார்ட் பேப்பர் 99 ஆயிரம் ரூபாயிலிருந்து 1.20 லட்சம் ரூபாயாகவும் உயர்ந்துள்ள விலையில் இன்று முதல் ஏப்ரல். 1 ஆம் தேதிக்குள் மேலும் டன்னுக்கு 4000 முதல் 7500 ரூபாய் வரை விலை உயர உள்ளதாக காகித ஆலைகள் முன் கூட்டியே சுற்றறிக்கை அனுப்பி உள்ளன.
பேப்பர்(காகிதம்) விலை உயர்வால் திருமண அழைப்பிதழ் நோட்டீஸ் போஸ்டர் மாணவ - மாணவியர் பயன்படுத்தும் நோட்டுப் புத்தகங்கள் ஆகியவற்றின் விலையை உயர்த்த தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனை வியாபாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர் எனத் தெரிவித்தார்.
சேலம் மாவட்ட ஆப்செட் பிரின்டர்ஸ் அசோசியேஷன் செயலர் சீனிவாசன் தெரிவித்த தகவல். காகித ஆலைகள் பேப்பர் விலையை கடந்த ஆண்டு இதே காலத்தில் விற்பனை செய்த விலையை விட இரண்டு மடங்காக விலையை உயர்த்தியுள்ளன. அச்சுமைக்கு இடையே கெமிக்கல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் இந்த தொழிலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொழிலைத் தொடர வேறு வழியின்றி வரும் ஏப்ரல். 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அச்சகங்களிலும் பிரின்டிங் வேலைகளுக்கு 40 சதவீதம் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக.தெரிவித்தார் .
கருத்துகள்