மறுமலர்ச்சி திமுகவின் தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ தமிழகத்தின் சட்டம் நீதிததுறை அமைச்சர் எஸ்.ரகுபதியுடன் சந்திப்பு
ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் கடந்த முப்பது ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. கொடுமுடியில் சார்பு நீதிமன்றம் அமைத்திட சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை தமிழக அரசுக்கு அனுப்பி அது தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது.
கொடுமுடியில் சார்பு நீதிமன்றம் அமைத்திடத் தேவையான கட்டமைப்பு வசதிகள் உள்ளதாக தெரிகிறது.
கொடுமுடியில் சார்பு நீதிமன்றம் அமைய உதவிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோவின் பரிந்துரைக் கடிதத்தை நேரில் வழங்கி அமைச்சரிடத்தில் விளக்கி எடுத்து கூறியதுடன்.
உடன் மதிமுக ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் குழந்தைவேலு மற்றும் கட்சி நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள்