முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அயல்நாட்டு தொழிலாளிகளின் இக்கட்டான நேரங்களில் உதவும் வெள்ளை பாஸ்போர்ட்

மலேசியாவில் ஐந்து லட்சத்திற்கும் மேலான தமிழர்கள்  உணவகம் தங்கும் விடுதிகள் மற்றும் கார் சர்வீஸ் மற்றும் சுத்தம் செய்வதில் தான் பணிபுரிகிறார்கள் 


இது போன்ற இடங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் கடவுச்சீட்டு அல்லது பாஸ்போர்ட்டை  அந்த சிறு நிறுவனங்களின் உரிமையாளர்கள் வாங்கி வைத்துக்கொள்வது அங்கு வழக்கமான ஒன்று. ஆனால், வேலை பார்த்தது போதும் உடல்நலம் ஒத்துழைக்கவில்லை, மற்றும் சொந்த நாட்டிலுள்ள ஊருக்கு கட்டாயம் திரும்ப வேண்டும் என்ற நிலை வரும் போது இந்த நிறுவன உரிமையாளர்கள் அவர்களது பாஸ்போர்ட்டைத் தர மறுக்கிறார்கள் இதுவும் இங்கு வழக்கமான ஒன்றாகவே தான் பார்க்கப்படுகிறது. இது போன்ற தொழிலாளிகளின் இக்கட்டான நேரங்களிள் தங்களுடைய பாஸ்போர்ட் எண் (Paasport pin number)  தெரிந்தாலே போதும் அவர்கள் வெள்ளை பாஸ்போர்ட் எடுத்துவிடலாம் (White pasport)



இதனை 8 நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் அதனைக்கொண்டு மலேசிய உள்ளிட்ட அயல் நாட்டு  அரசாங்கத்திடம்   அபதாரம் கட்டி அவர்கள் அந்த நாட்டிலிருந்து வெளியாகலாம், இது தற்போது மிகக் குறைந்த விலையில் இந்தியத் தூதரகம் நடைமுறப்படுத்தியுள்ளதனால் தனியார் ஏஜனட்டுகளிடம் 2000 ரிங்கிட் (வெள்ளி) அவசர அவசரமாக 5000 மலேசியா ரிங்கிட் கொடுத்து ஏமாற வேண்டாம் என அறிக.


இந்த வெள்ளை பாஸ்போர்ட்டின் உன்மை விலை வெறும் Rm 77  அதாவது (77 Ringit) தான்


விவரங்களுக்கு மலேஷியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் அமைந்துள்ள இந்தியத் தூதரகம் (INDIAN EMBAASY) அலுலகத்தில் தெரிந்துகொள்ளலாம் இல்லையெனில் புத்ர ஜெயாவில் PUTRA JAYA அமைந்துள்ள மலேசிய பாஸ்போர்ட் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் 

பல வருடங்களாக சொந்த நாட்டிலுள்ள ஊருக்குச் செல்ல முடியாமல் தவிக்கும்  தமிழர்களுக்கு சாதாரண பாஸ்போர்ட் (அடர் நீல அட்டை) விடுமுறை, சுற்றுலா, படிப்பு மற்றும் வணிகப் பயணங்கள் (36 அல்லது 60 பக்கங்கள்) போன்ற தனிப்பட்ட பயணங்களுக்காக சாதாரண குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது. இது ஒரு "வகை P" பாஸ்போர்ட் ஆகும், இதில் P என்பது தனிப்பட்டது .

 உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு (வெள்ளை அட்டை)  வெளிநாட்டில் நிலைகொண்டுள்ள இந்திய ஆயுதப்படை உறுப்பினர்கள் உட்பட, உத்தியோகபூர்வ வணிகத்தில் இந்திய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது . இது "வகை S" பாஸ்போர்ட், S என்பது சேவையைக் குறிக்கிறது .  2021 ஆம் ஆண்டு முதல், வழங்கப்பட்ட அனைத்து அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட்டுகளும் e-Passports ஆகும், ஆவணத்தில் தரவு சிப் உட்பொதிக்கப்பட்டுள்ளது.



 இராஜதந்திர பாஸ்போர்ட் (மெரூன் கவர்) இந்தியத் தூதர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் , மத்திய அமைச்சர்கள் குழு உறுப்பினர்கள் , சில உயர்மட்ட அரசு அதிகாரிகள் மற்றும் தூதரக கூரியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. கோரிக்கையின் பேரில், உத்தியோகப் பூர்வ வணிகத்தில் பயணிக்கும் உயர்நிலை மாநில அளவிலான அதிகாரிகளுக்கும் இது வழங்கப்படலாம். இது ஒரு "டைப் டி" பாஸ்போர்ட், டி என்பது டிப்ளமேட்டிக் என்பதைக் குறிக்கிறது . 2008 ஆம் ஆண்டு முதல், அனைத்துத் தூதரக கடவுச்சீட்டுகளும்.             e-Passports ஆகும், ஆவணத்தில் தரவு சிப் உட்பொதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்திய குடிமக்களுக்குப் பயன்படுத்தப்படும் பல விசா தேவைகள் தூதரக பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படுகின்றன.

கூடுதலாக, மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் இந்தியர்களுக்கு வழக்கமான இந்தியா-வங்காளதேச பாஸ்போர்ட் , தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியா-இலங்கை பாஸ்போர்ட் ஆகியவற்றை வழங்குவதற்கு இந்தியாவிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மற்றும் ராட்கிளிஃப் கோட்டின் மறுபுறத்தில் மூதாதையர் வீடுகள் இருக்கும் இந்திய குடிமக்களுக்கான இந்தியா-பாகிஸ்தான் பாஸ்போர்ட் . இந்த மூன்று கடவுச்சீட்டுகளும் முறையே பங்களாதேஷ் , இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டன மட்டுமே மற்ற வெளிநாடுகளுக்கு பயணம் செல்லுவதற்குச் செல்லாது. 2013  ஆம் ஆண்டில் இந்தியா - வங்காளதேசக் கடவுச்சீட்டை வழங்குவதை இந்தியா நிறுத்தியது. குறிப்பிடத்தக்கது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த