முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புனே சிம்பயாசிஸ் பல்கலைக்கழகத்தின் பொன்விழா கொண்டாட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

புனே சிம்பயாசிஸ் பல்கலைக்கழகத்தின் பொன்விழா கொண்டாட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்


சிம்பயாசிஸ் ஆரோக்கிய வளாகத்தையும் துவக்கி வைத்தார்

‘’ ஞானம் அகன்று விரிவடைய வேண்டும், உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக இணைக்கும் ஊடகமாக அறிவு திகழ வேண்டும், இதுதான் நமது கலாச்சாரம். நம் நாட்டில் இன்னும் இந்த பாரம்பரியம் உயிர்ப்புடன் இருப்பதைக் கண்டு நான் மகிழ்கிறேன்’’

‘’ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா போன்ற இயக்கங்கள் உங்களது விருப்பங்களைப் பிரதிபலிக்கின்றன. இன்றைய இந்தியா புதுமையானது, முன்னேறுவது, உலகம் முழுவதிலும் செல்வாக்கு கொண்டது’’


‘’ முந்தைய தற்காப்பு மற்றும் சார்பு உளவியலின் தீங்கு விளைவிக்கும் தாக்கத்தால் பாதிக்கப்படாத உங்களது தலைமுறை ஒருவகையில் அதிருஷ்டமானது. இந்த பெருமை எல்லாம் உங்கள் அனைவரையும், எங்கள் இளைஞர்களையும் சாரும்’’

‘’ நாட்டின் இன்றைய அரசு, நாட்டின் இளைஞர்களின் ஆற்றலை நம்புகிறது. அதனால்தான், ஒன்றன்பின் ஒன்றாக துறைகளை உங்களுக்காக நாங்கள் திறந்து விடுகிறோம்’’


‘’ வளர்ந்து வரும் இந்தியாவின் செல்வாக்கால், நாங்கள் ஆயிரக்கணக்கான மாணவர்களை யுக்ரைனில் இருந்து தாய்நாட்டுக்கு திரும்ப அழைத்து வந்துள்ளோம்’’

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புனேயில் சிம்பயாசிஸ் பல்கலைக் கழகத்தின் பொன்விழா கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். சிம்பயாசிஸ் ஆரோக்கிய வளாகத்தையும் அவர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு. பகத் சிங் கோஷ்யாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்களை பாராட்டிய பிரதமர், ‘ வசுதேவ குடும்பகம்’ என்னும் நிறுவனத்தின் குறிக்கோளைக் குறிப்பிட்டார். பல்வேறு நாடுகளின் மாணவர்கள் வடிவத்தில், இந்த நவீன நிறுவனம், இந்தியாவின் தொன்மையான பாரம்பரியத்தை பிரிதிபலிக்கிறது என்று அவர் கூறினார். ‘’ ஞானம் அகன்று விரிவடைய வேண்டும், உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக இணைக்கும் ஊடகமாக அறிவு திகழ வேண்டும், இதுதான் நமது கலாச்சாரம். நம் நாட்டில் இன்னும் இந்த பாரம்பரியம் உயிர்ப்புடன் இருப்பதைக் கண்டு நான் மகிழ்கிறேன்’’ என்று அவர் கூறினார்.

புதிய இந்தியாவின் நம்பிக்கையை வலியுறுத்திய பிரதமர், உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று, உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட் அப் சூழலை அது கொண்டுள்ளது என்றார். ‘’ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா போன்ற இயக்கங்கள் உங்களது விருப்பங்களைப் பிரதிபலிக்கின்றன. இன்றைய இந்தியா புதுமையானது, முன்னேறுவது, உலகம் முழுவதிலும் செல்வாக்கு கொண்டது’’ என்று அவர் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி திட்டத்தில், இந்தியா எவ்வாறு உலகிற்கு தனது ஆற்றலை நிரூபித்தது என்பதை புனேவாசிகளுக்கு  நன்கு தெரியும் என்று பிரதமர் கூறினார்.

இந்தியாவின் செல்வாக்கு குறித்து எடுத்துக்காட்டிய அவர், யுக்ரைன் போர் பிராந்தியத்தில் இருந்து ஆபரேஷன் கங்கா மூலம் இந்தியா தனது மக்களை பாதுகாப்பாக கொண்டு வந்துள்ளது என்று தெரிவித்தார். ‘’ உலகின் பெரிய நாடுகள் இதில் கஷ்டப்படும் நிலையில், வளர்ந்து வரும் இந்தியாவின் செல்வாக்கால், நாங்கள் ஆயிரக்கணக்கான மாணவர்களை யுக்ரைனில் இருந்து தாய்நாட்டுக்கு திரும்ப அழைத்து வந்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

நாட்டின் மனநிலை மாறிவிட்டதை பிரதமர் சுட்டிக்காட்டினார். ‘’ முந்தைய தற்காப்பு மற்றும் சார்பு உளவியலின் தீங்கு விளைவிக்கும் தாக்கத்தால் பாதிக்கப்படாத உங்களது தலைமுறை ஒருவகையில் அதிருஷ்டம் கொண்டதாகும். இந்த பெருமை எல்லாம் உங்கள் அனைவரையும், எங்கள் இளைஞர்களையும் சாரும்’’ என்று அவர் தெரவித்தார்.

ஒரு காலத்தில் எட்ட முடியாது என்று நினைத்திருந்த துறைகளில் எல்லாம் இப்போது இந்தியா உலகத் தலைமைத்துவம் வாய்ந்த நாடாக மாறியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். மொபைல் உற்பத்தியில் இந்தியா உலகின் இரண்டாவது பெரிய நாடாக மாறியுள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 2 மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் இருந்தன. இன்று இந்தப் பணியில், 200-க்கும் மேற்பட்ட அலகுகள் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பாதுகாப்பு துறையில், உலகின் மிகப்பெரிய இறக்குமதி நாடாக கருதப்பட்ட இந்தியா தற்போது ஏற்றுமதி நாடாக உயர்ந்துள்ளதாக பிரதமர் கூறினார். இன்று, இரண்டு பெரிய பாதுகாப்பு வழித்தடங்கள் வரவுள்ளன, அங்கு மிகப்பெரிய நவீன ஆயுதங்கள் நாட்டின் பாதுகாப்பு தேவைக்காக தயாரிக்கப்படவுள்ளன என்று அவர் கூறினார்.

பல்வேறு பிரிவுகள் திறக்கப்பட்டுள்ளதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், ஜியோ-ஸ்பேசியல் சிஸ்டம், ட்ரோன்கள், செமி-கண்டக்டர்கள், விண்வெளி தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்யப்பட்டுள்ள சமீபத்திய சீர்திருத்தங்களை சுட்டிக்காட்டினார். ‘’ நாட்டின் இன்றைய அரசு, நாட்டின் இளைஞர்களின் ஆற்றலை நம்புகிறது. அதனால்தான், ஒன்றன்பின் ஒன்றாக துறைகளை உங்களுக்காக நாங்கள் திறந்து விடுகிறோம்’’ என்று அவர் தெரிவித்தார்.

‘’ நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும், உங்கள் வாழ்க்கைத் தொழிலுக்காக இலக்குகளை நீங்கள் நிர்ணயிக்கும் விதத்தில்,நாட்டுக்காகவும் சில குறிக்கோள்களை வைத்திருக்க வேண்டும்’’ என திரு. மோடி கேட்டுக்கொண்டார். உள்ளூர் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண வேண்டும் என்று அவர்களை பிரதமர் வலியுறுத்தினார். உடல் தகுதியைப் பராமரித்து, மகிழ்ச்சியாகவும், துடிப்புடனும் திகழுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.’’ நமது இலக்குகள் தனிப்பட்ட வளர்ச்சியில்  இருந்து, நாட்டின் வளர்ச்சிக்காக செல்லும் போது, நாட்டு கட்டமைப்பில் பங்கேற்கிறோம் என்ற உணர்வு மேம்படும்’’ என்று திரு. மோடி கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் கருப்பொருள்களை தேர்வு செய்து, அவற்றை தேசிய மற்றும் உலக தேவைக்காக மனதில் இருத்தி, செயல்பட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். முடிவுகள் மற்றும் எண்ணங்கள் ஆகியவற்றை பிரதமர் அலுவலகத்திலும் பகிர்ந்து கொள்ளலாம் என அவர் கூறினார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...