முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷன் விருது

ஜனவரி மாதம் இராணுவ உலங்கு வானூர்தி விபத்தில் மறைந்த இந்திய முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத்துக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விபூஷன் விருதை அவரது மகளிடம் வழங்கிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 


 ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் பிபின் ராவத்தின் மகள்கள் கிருத்திகா மற்றும் தாரிணி ஆகியோர் பங்கேற்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையால் பத்ம விபூஷன் விருதினைப் பெற்றுக்கொண்டனர். மறைந்த ராதேஷ்யாம் கெம்காவிற்கு இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் அறிவிக்கப்பட்ட பத்மவிபூஷன் விருதினை அவரது மகன் பெற்றுக்கொண்டார்.

வீர மரணமடைந்த மூப்படைத் தளபதி பிபின் ராவத்திற்கு பத்ம விபூஷன்; விருதை பெற்றுக் கொண்ட மகள்கள்.       



    இந்தியாவின் உயரிய விருது பத்ம ஸ்ரீ விருது.  கலை, சமூகப்பணி, பொதுநலன், அறிவியல், பொறியியல், வர்த்தகம், விளையாட்டு, குடிமைப் பணிகள், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி என பல்வேறு துறைகளில் சிறந்து விளக்குபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு, பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்படுகிறது.

இந்க ஆண்டு 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டதில், 34 பேர் பெண்கள், 13 பேருக்கு அவர்களது இறப்பிற்கு பின்னர் விருதுகள் அறிவிக்கப்பட்டன. பத்ம விபூஷன் விருது 4 பேருக்கும் பத்ம பூஷன் 17 பேருக்கும் பத்மஸ்ரீ 107 பேருக்கும் அறிவிக்கப்பட்டது .   கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யாஜி, உள்ளிபட 17 பேருக்கு பத்ம பூ‌ஷன் விருது அறிவிக்கப்பட்டது.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் தேதி பத்ம விருது பெறறுவோருக்கான பட்டியல் வெளியான நிலையில், டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கிக் கெளரவித்தார். 2 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன், 54 பத்ம ஸ்ரீ விருதுகளை மட்டுமே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கியுள்ளார்.

பிபின் ராவத்திற்கு பத்மவிபூஷன்; விருதை பெற்றுக்கொண்ட மகள்கள்:

2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி அன்று, குன்னூர் நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். குரூப் கேப்டன் வருண் சிங் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

 

இராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் பிபின் ராவத்தின் மகள்கள் கிருத்திகா மற்றும் தாரிணி ஆகியோர் பங்கேற்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையால் பத்ம விபூஷன் விருதினை பெற்றுக்கொண்டனர். இதேபோல், மறைந்த ராதேஷ்யாம் கெம்காவிற்கு இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் அறிவிக்கப்பட்ட பத்மவிபூஷன் விருதினை அவரது மகன் பெற்றுக்கொண்டார்.

மறைந்த குர்மீத் பாவாவிற்கு அறிவிக்கப்பட்டிருந்த கலைத்துறைக்கான பத்ம பூஷன் விருது அவரது மகளிடம் ஒப்படைக்கப்பட்டது.வர்த்தக-தொழில் பிரிவில் அவருக்கு இந்திய அரசால் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளதுகடின உழைப்பை இதயத்திலிருந்து செய்தால், அதன் பலனும் இனிமையாக இருக்கும், உயரத்தை அடைவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறப்படுகிறது. ஆல்பாபெட் (கூகுள்) சிஇஓ சுந்தர் பிச்சை இத்தகைய கடின உழைப்பு மற்றும் உயரங்களை எட்டுவதற்கு பெயர் பெற்றவர். சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார், மேலும் கூகுளை மேம்படுத்துவதற்காக இரவு பகலாக தனது குழுவினருடன் கடுமையாக உழைத்து வருகிறார்.அவர்களின் உழைப்பும் யாருக்குத் தெரியாது? இதுவரை தனது வாழ்நாளில் பல பெரிய மைல்கற்களை அடைந்து தொடர்ந்து வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருக்கிறார். இந்த எபிசோடில், சுந்தர் பிச்சையின் பெயருடன் மற்றொரு நாட்டின் சிறந்த விருது இணைக்கப்பட்டுள்ளது. உண்மையில், வர்த்தக-தொழில் பிரிவில் அவருக்கு இந்திய அரசால் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. உள்ளடக்கியதுஇந்த சிறந்த விருதைப் பெற்ற 17 நபர்களில் சுந்தர் பிச்சையும் ஒருவர். 2015 ஆம் ஆண்டு உலகின் முன்னணி ஐடி நிறுவனமான கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியானார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடிமக்கள் வரிசையில் , கூகிளில்  பெரிய பொறுப்பைப் பெற்றவர். தமிழ்நாட்டில் பிறந்த சுந்தர் பிச்சையின் பெயர் சுந்தரராஜன் ஆகும் 1972 ஆம் ஆண்டு மதுரையில்  பிறந்தார்.  ​​சென்னையில் வளர்ந்தார்.     .1993  ஆம் ஆண்டில், பிச்சாய் ஐஐடி காரக்பூரில் பிடெக் படித்து அதே ஆண்டில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான உதவித்தொகை பெற்றார். இங்கிருந்து பொறியியலில் முதுகலைப் பட்டமும், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் எம்பிஏ பட்டமும் பெற்றார். 1995 ஆம் ஆண்டு படிப்பிற்காக அமெரிக்கா சென்றார்.  ஒரு நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராக இருந்தது. சுந்தர் பிச்சை கூகுளில் சேர்வதற்கு முன்பு அப்ளைடு மெட்டீரியல்ஸ் மற்றும் மேலாண்மை ஆலோசனை நிறுவனமான மெக்கென்சியில் பணியாற்றினார்.சுந்தர் பிச்சை ஏப்ரல் 2004 ஆம் ஆண்டு கூகுளில் சேர்ந்தார். தயாரிப்பு மேலாண்மை மற்றும் கண்டுபிடிப்பு கிளையில் . கூகுளின் தேடல் கருவியை மேம்படுத்துவது மற்றும் பிற உலாவிகளைப் பயன்படுத்துபவர்களை கூகுளுக்குக் கொண்டுவரும் பணி  வழங்கப்பட்ட சூழ்நிலையில், சுந்தர் பிச்சை நிறுவனம் தனது உலாவியைத் தொடங்க பரிந்துரைத்தார்.  இப்படி  கடின உழைப்பையும், அவரது பணி முறையையும் கண்டு 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியானார். தொடர் வளர்ச்சியால், ஜூலை 2017 ஆம் ஆண்டில் ஆல்பாபெட்டின் இயக்குநர்கள் குழுவில் சேர்ந்தார். கடந்துவந்த 15 வருடங்களில் கூகுளில் பணிபுரிந்து பல சிறந்த தயாரிப்புகளை உருவாக்கியுள்ளார்.

ஆகவே விருதுக்கு தகுதி பெற்றார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், பொது விவகாரத் துறையில் பத்ம பூஷன் விருதைப் பெற்றார். பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியா, வர்த்தம் மற்றும் தொழில்துறை பிரிவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) நிர்வாக இயக்குனர் சைரஸ் பூனவல்லாவிற்கு பத்ம பூஷன் விருது பெற்றார்இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்ட அறிக்கையில், ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் விழாவில், குடியரசுத்தலைவர் 2 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 54 பத்மஸ்ரீ விருதுகளை வழங்குவார் என்றும் மற்ற விருதுகள் வருகிற 28 ஆம் தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு பத்ம விருதுகளை வழங்கினார். மேலும் 125 வயதான யோகா பயிற்சியாளர் சுவாமி சிவானந்தா அவர்களுக்கு யோகா துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருது பெற்றார். சிவானந்தா நாட்டின் வரலாற்றில் பத்ம விருது வென்றவர்களில் மிக வயதானவரான இவர் 'யோக் சேவக்' என்று வர்ணிக்கப்படுகிறார். இந்நிலையில் டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், 125 வயதான யோகா ஆசிரியரான சுவாமி சிவானந்தா திடீரென பிரதமர் நரேந்திர மோடியின் காலில் திடீரென விழுந்து வணங்கிய நிலையில், பிரதமரும் அவரது காலில் விழுந்து வணங்கினார். மேலும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவையில் இருந்த அணைவரையும் வணங்கும் வகையில் தரையில் முழங்காலிட்டு சுவாமி சிவானந்தா வணங்கினார்.சுவாமி சிவானந்தா பெஹல்லாவில் பிறந்தவர். சுவாமி சிவானந்தாவின் பாஸ்போர்ட் மற்றும் ஆதார் அட்டையில் உள்ளபடி அவரது வயது 125. ஆனால் அவர் கன்னங்களில் தோல் சுருக்கத்தைக் காணமுடியவில்லை. அவர் 50 ஆண்டுகள் இளையவராய்த் தெரிகிறார். உண்மையில், அவர் அப்போது கின்னஸ் சாதனைக்குச் சொந்தக்காரராக இருந்த ஜப்பான் நாட்டின் ஜிரொமோன் கிமுரா விடச் சுமார் ஐந்து ஆண்டுகள் மூத்தவர் ஆவார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த