முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜிஐ குறியிடப்பட்ட முக்கிய வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் மத்திய அரசு கவனம்

 ஜிஐ குறியிடப்பட்ட முக்கிய வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது


உள்நாட்டில் பெறப்பட்ட புவிசார் குறியீடுகளின்   (ஜிஐ) அடிப்படையில் வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் முயற்சியில், புதிய தயாரிப்புகள் மற்றும் ஏற்றுமதிக்கான புதிய  இடங்களை அடையாளம் காண்பதில் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

 டார்ஜிலிங் தேயிலை மற்றும் பாசுமதி அரிசி ஆகிய இந்தியாவின் பிரபலமான புவிசார் குறியீடுகளைக் கொண்ட இரண்டு வேளாண்  பொருட்கள், உலகளவில் சந்தைகளைக் கொண்டுள்ளன. நாட்டின் பல்வேறு மூலைகளிலும் புவிசார் குறியிடப்பட்ட தயாரிப்புகள் சிறந்த வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கின்றன. அதிக எண்ணிக்கையிலான நுகர்வோரைச் சென்றடையும் வகையில் அவற்றைச்  சரியான முறையில் சந்தைப்படுத்த வேண்டும்.




 மாண்புமிகு பிரதமரின் 'உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்' மற்றும் 'சுயசார்பு இந்தியா' போன்ற தொலைநோக்குத் திட்டங்களுக்கு ஏற்ற வகையில், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) மூலம், கருப்பு உப்பு [Kala-Namak] போன்ற தயாரிப்புகள், நாகலாந்து மிளகாய் [Naga-Mircha], அசாம் காஜி நேமு, பெங்களூர் ரோஸ் ஆனியன், நாக்பூர் ஆரஞ்சு, புவிசார் குறியீடுகளைக் கொண்ட மாம்பழ  வகைகள், ஷாஹி லிச்சி, பாலியா கோதுமை, மதுரை மல்லி, பர்தமான் மிஹிதானா மற்றும் சிதாபோக், தஹானு கோல்வாட் சப்போட்டா, ஜல்கான் வாழை, வாழைக்குளம் அன்னாசி,  மற்றும்  மறையூர் வெல்லம் போன்ற பொருட்களுக்கு உலகளவில் புதிய சந்தைகளில் சோதனை அடிப்படையிலான ஏற்றுமதி எளிதாக்கப்பட்டுள்ளது. 

நாகாலாந்தில் இருந்து நாகா மிர்ச்சா (கிங் மிளகாய்), மணிப்பூர் மற்றும் அஸ்ஸாமில் இருந்து  கருப்பு அரிசி, ஆகியவற்றை இங்கிலாந்துக்கும், அஸ்ஸாம் எலுமிச்சை, மூன்று புவிசார் குறிப்பட்ட மாம்பழ வகைகள் ஆகியவை இங்கிலாந்து மற்றும் இத்தாலி நாடுகளுக்கும்  ஆகியவை 2021-ம்  ஆண்டில் குறிப்பிடத்தக்க புவிசார் குறியீடுகளைக் கொண்ட தயாரிப்புகளின் ஏற்றுமதியில் அடங்கும். லக்ஷ்மன்போக் மேற்கு வங்காளத்திலிருந்தும், சர்தாலு வகை மாம்பழம் பீகாரிலிருந்து பஹ்ரைன் மற்றும் கத்தார் நாடுகளுக்கும்   , மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் இருந்து  ஜாய்நகர் மோவாவின் மாதிரி ஏற்றுமதி கொல்கத்தா வழியாக பஹ்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

 புவிசார் குறியீடுகளைக் கொண்ட மாதிரி வேளாண் பொருட்களின்  ஏற்றுமதியைத் தொடர்ந்து, ஜாய்நகர் மோ-விற்கான கூடுதல் கொள்முதல் ஆணைகள் பஹ்ரைனில் இருந்து பெறப்பட்டன.

பீகாரில் இருந்து புவிசார் குறியிடப்பட்ட பொருட்களின் ஏற்றுமதிக்கு ஒரு முக்கிய உந்து சக்தியாக, 524 கிலோ எடை கொண்ட புவிசார் குறியீட்டுடன் கூடிய ஷாஹி லிச்சியின் முதல் ஏற்றுமதி, 2021-ம் ஆண்டு மே மாதம்  பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் இருந்து லண்டனுக்கு நடைபெற்றது. ஆந்திராவில் இருந்து தென் கொரியாவிற்கு புவிசார் குறியிடப்பட்ட பங்கனப்பள்ளி, நகனபள்ளே மாம்பழம் ஏற்றுமதி செய்யப்பட்டது.

வாரணாசியில் குறிப்பான  புவிசார்  குறியிடப்பட்ட வேளாண் பொருட்களுக்களுக்கான ஏற்றுமதி மையத்தை உருவாக்க, உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள் (FPOs), உணவு உற்பத்தி நிறுவனங்கள் (FPCs) மற்றும் ஏற்றுமதியாளர்களை சர்வதேச வணிக சமூகங்களுடன் இணைப்பதில் மத்திய அரசு  அதிக முக்கியத்துவம் அளித்துவருகிறது.

புவிசார் குறியிடப்பட்ட தயாரிப்புகளின்  விளம்பரத்தை உறுதி செய்யம் வகையில், வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் ஒரு முக்கிய இடம் கண்டறியப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு ஜூன் மாதத்தில், பருவத்தின் முதல் ஏற்றுமதியான 1048 கிலோ புவிசார் குறியிடப்பட்ட மலிஹபாடி துஸ்ஸேரி மாம்பழம் லக்னோவிலிருந்து இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

மணிப்பூர் கருப்பு அரிசி , மணிப்பூர் கச்சாய் எலுமிச்சை, மிசோ மிளகாய், அருணாச்சல ஆரஞ்சு, மேகாலயா காசி மாண்டரின், அஸ்ஸாம் காஜி நேமு, கர்பி ஆங்லாங் இஞ்சி, ஜோஹா ரைஸ் மற்றும் திரிபுரா குயின் அன்னாசிப்பழம் போன்ற வடகிழக்கு பிராந்தியத்தின் தனித்துவமான புவிசார் குறியீடுகளைக் கொண்ட தயாரிப்புகளை விளம்பரப்படுத்த, மத்திய அரசு வெள்ளி பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்  APEDA மூலம் வாங்குபவர்-விற்பவர் இடையேயான சந்திப்புகளை ஏற்பாடு செய்து வருகிறது.  வடகிழக்கு மண்டலங்களில் உள்ள  வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள சங்கங்கள் மற்றும் இந்தியன் ரயில்வே , வெளிநாட்டு வர்த்தகத்திற்கான தலைமை இயக்ககம்  உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டுப் பட்டறைகளை மத்திய அரசு நடத்தி வருகிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...