முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜிஐ குறியிடப்பட்ட முக்கிய வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் மத்திய அரசு கவனம்

 ஜிஐ குறியிடப்பட்ட முக்கிய வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது


உள்நாட்டில் பெறப்பட்ட புவிசார் குறியீடுகளின்   (ஜிஐ) அடிப்படையில் வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் முயற்சியில், புதிய தயாரிப்புகள் மற்றும் ஏற்றுமதிக்கான புதிய  இடங்களை அடையாளம் காண்பதில் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

 டார்ஜிலிங் தேயிலை மற்றும் பாசுமதி அரிசி ஆகிய இந்தியாவின் பிரபலமான புவிசார் குறியீடுகளைக் கொண்ட இரண்டு வேளாண்  பொருட்கள், உலகளவில் சந்தைகளைக் கொண்டுள்ளன. நாட்டின் பல்வேறு மூலைகளிலும் புவிசார் குறியிடப்பட்ட தயாரிப்புகள் சிறந்த வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கின்றன. அதிக எண்ணிக்கையிலான நுகர்வோரைச் சென்றடையும் வகையில் அவற்றைச்  சரியான முறையில் சந்தைப்படுத்த வேண்டும்.




 மாண்புமிகு பிரதமரின் 'உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்' மற்றும் 'சுயசார்பு இந்தியா' போன்ற தொலைநோக்குத் திட்டங்களுக்கு ஏற்ற வகையில், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) மூலம், கருப்பு உப்பு [Kala-Namak] போன்ற தயாரிப்புகள், நாகலாந்து மிளகாய் [Naga-Mircha], அசாம் காஜி நேமு, பெங்களூர் ரோஸ் ஆனியன், நாக்பூர் ஆரஞ்சு, புவிசார் குறியீடுகளைக் கொண்ட மாம்பழ  வகைகள், ஷாஹி லிச்சி, பாலியா கோதுமை, மதுரை மல்லி, பர்தமான் மிஹிதானா மற்றும் சிதாபோக், தஹானு கோல்வாட் சப்போட்டா, ஜல்கான் வாழை, வாழைக்குளம் அன்னாசி,  மற்றும்  மறையூர் வெல்லம் போன்ற பொருட்களுக்கு உலகளவில் புதிய சந்தைகளில் சோதனை அடிப்படையிலான ஏற்றுமதி எளிதாக்கப்பட்டுள்ளது. 

நாகாலாந்தில் இருந்து நாகா மிர்ச்சா (கிங் மிளகாய்), மணிப்பூர் மற்றும் அஸ்ஸாமில் இருந்து  கருப்பு அரிசி, ஆகியவற்றை இங்கிலாந்துக்கும், அஸ்ஸாம் எலுமிச்சை, மூன்று புவிசார் குறிப்பட்ட மாம்பழ வகைகள் ஆகியவை இங்கிலாந்து மற்றும் இத்தாலி நாடுகளுக்கும்  ஆகியவை 2021-ம்  ஆண்டில் குறிப்பிடத்தக்க புவிசார் குறியீடுகளைக் கொண்ட தயாரிப்புகளின் ஏற்றுமதியில் அடங்கும். லக்ஷ்மன்போக் மேற்கு வங்காளத்திலிருந்தும், சர்தாலு வகை மாம்பழம் பீகாரிலிருந்து பஹ்ரைன் மற்றும் கத்தார் நாடுகளுக்கும்   , மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் இருந்து  ஜாய்நகர் மோவாவின் மாதிரி ஏற்றுமதி கொல்கத்தா வழியாக பஹ்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

 புவிசார் குறியீடுகளைக் கொண்ட மாதிரி வேளாண் பொருட்களின்  ஏற்றுமதியைத் தொடர்ந்து, ஜாய்நகர் மோ-விற்கான கூடுதல் கொள்முதல் ஆணைகள் பஹ்ரைனில் இருந்து பெறப்பட்டன.

பீகாரில் இருந்து புவிசார் குறியிடப்பட்ட பொருட்களின் ஏற்றுமதிக்கு ஒரு முக்கிய உந்து சக்தியாக, 524 கிலோ எடை கொண்ட புவிசார் குறியீட்டுடன் கூடிய ஷாஹி லிச்சியின் முதல் ஏற்றுமதி, 2021-ம் ஆண்டு மே மாதம்  பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் இருந்து லண்டனுக்கு நடைபெற்றது. ஆந்திராவில் இருந்து தென் கொரியாவிற்கு புவிசார் குறியிடப்பட்ட பங்கனப்பள்ளி, நகனபள்ளே மாம்பழம் ஏற்றுமதி செய்யப்பட்டது.

வாரணாசியில் குறிப்பான  புவிசார்  குறியிடப்பட்ட வேளாண் பொருட்களுக்களுக்கான ஏற்றுமதி மையத்தை உருவாக்க, உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள் (FPOs), உணவு உற்பத்தி நிறுவனங்கள் (FPCs) மற்றும் ஏற்றுமதியாளர்களை சர்வதேச வணிக சமூகங்களுடன் இணைப்பதில் மத்திய அரசு  அதிக முக்கியத்துவம் அளித்துவருகிறது.

புவிசார் குறியிடப்பட்ட தயாரிப்புகளின்  விளம்பரத்தை உறுதி செய்யம் வகையில், வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் ஒரு முக்கிய இடம் கண்டறியப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு ஜூன் மாதத்தில், பருவத்தின் முதல் ஏற்றுமதியான 1048 கிலோ புவிசார் குறியிடப்பட்ட மலிஹபாடி துஸ்ஸேரி மாம்பழம் லக்னோவிலிருந்து இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

மணிப்பூர் கருப்பு அரிசி , மணிப்பூர் கச்சாய் எலுமிச்சை, மிசோ மிளகாய், அருணாச்சல ஆரஞ்சு, மேகாலயா காசி மாண்டரின், அஸ்ஸாம் காஜி நேமு, கர்பி ஆங்லாங் இஞ்சி, ஜோஹா ரைஸ் மற்றும் திரிபுரா குயின் அன்னாசிப்பழம் போன்ற வடகிழக்கு பிராந்தியத்தின் தனித்துவமான புவிசார் குறியீடுகளைக் கொண்ட தயாரிப்புகளை விளம்பரப்படுத்த, மத்திய அரசு வெள்ளி பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்  APEDA மூலம் வாங்குபவர்-விற்பவர் இடையேயான சந்திப்புகளை ஏற்பாடு செய்து வருகிறது.  வடகிழக்கு மண்டலங்களில் உள்ள  வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள சங்கங்கள் மற்றும் இந்தியன் ரயில்வே , வெளிநாட்டு வர்த்தகத்திற்கான தலைமை இயக்ககம்  உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டுப் பட்டறைகளை மத்திய அரசு நடத்தி வருகிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த