தேசிய துப்புரவு பணியாளர் ஆணையத்தின் தலைவர் எம் வெங்கடேசன் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஆய்வு செய்தார்
தேசிய துப்புரவு பணியாளர் ஆணையத்தின் தலைவர் எம் வெங்கடேசன் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இன்று ஆய்வு செய்தார். குறிப்பாக, மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடை செய்வது மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வு சட்டம்-2013 செயல்படுத்துவது குறித்து, விரிவாக ஆய்வு செய்தார்
தூய்மைப் பணியில் ஈடுபடும் பணியாளர்களுடன் உரையாடிய அவர், அவர்களுக்கான ஊதியம், வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர்களுக்கான ஆயுள் மற்றும் சுகாதாரக் காப்பீடு, பணியாளர் இழப்பீட்டுக் கொள்கை, ஒப்பந்த பணியாளர்களுக்கான நலத்திட்டங்கள் போன்றவை குறித்து தொழிலாளர்களுக்கு வெங்கடேசன் எடுத்துரைத்தார்.
அப்போது நாடுமுழுவதும் உள்ள அணுமின் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள், வளர்ச்சிப் பணிகள் குறித்து திரு வெங்கடேசனிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த ஆய்வுக்கூட்டத்தின் போது கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் தலைமை கண்காணிப்பாளர் திரு எம் செந்தாமரக்ஷன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் உடனிருந்தனர்
கருத்துகள்