மதுரை சிறைக் கைதிகளுக்கு செல்போன் கஞ்சா விநியோகம் இரு காவலர்கள் டிஸ்மிஸ் செய்து நடவடிக்கை!
மதுரை மத்திய சிறைச்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் குற்ற வழக்குகளில் தண்டணை பெற்று சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில் சிறைவாசிகள் சிலருக்குத் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதைப் பொருட்களை விநியோகம் செய்ததாக எழுந்த புகாரைத்
தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் சிறை வளாகம் முழுவதும் சிறைத்துறை காவல் அதிகாரிகள் தீவிர சோதனைகள் நடத்தியதில் சிறைக்காவலர்கள் விஷ்ணுகுமார் மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவரும் ஏழு கைதிகளுக்கு, கஞ்சா மற்றும் செல்போன் வழங்கி உதவிவந்தது தெரிய வந்ததையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன், சிறைக்காவலர்கள் விஷ்ணுகுமார் மற்றும் செந்தில்குமாரை சஸ்பெண்ட் செய்தது சிறைத்துறை காவல்.
அதன்பின், சிறைவாசிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 5 மாதங்களாக சட்டவிரோதமாக அவர்களுக்கு போதைப் பொருட்கள் மற்றும் செல்போன் வழங்கி வந்ததும். செல்போனில் 113 முறை பேச வைத்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலும் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த விசாரணைக்குப் பின்னர், ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்யப்பட சிறைக்காவலர்கள் விஷ்ணுகுமார் மற்றும் செந்தில்குமாரை தற்போது பணிநீக்கம் செய்து சிறைத்துறை காவல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
கருத்துகள்