கோயமுத்தூர் ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த பாலதண்டபாணி. டிராவல்ஸ் நிறுவனம் நடத்துகிறார். ஆலாந்துறையிலுள்ள தன் விவசாய நிலத்தை, 2013- ஆம் ஆண்டில் விற்பனை செய்த போது . 60 ஏக்கர் அளவிலுள்ள நிலத்தை ரூ.10 கோடிக்கு விற்றதற்காக, சில ஆண்டுகளுக்கு முன் பாலதண்டபாணி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் வரி ஏய்ப்பு சோதனை நடத்தினர்.
அப்போது, “அரசின் வழிகாட்டி மதிப்பு முறையைப் பின்பற்றவில்லை எனவும் நிலத்தை விற்பனை செய்த பணத்துக்கு உரிய வருமான வரி செலுத்த வேண்டும்” என கோயமுத்தூர் வருமான வரித்துறை துணை ஆணையர் டேனியல் ராஜ் கூறிய நிலையில் பாலதண்டபாணி தான் முறைப்படிதான் வரி செலுத்தியதாக பதில் அளித்துள்ளார். டேனியல் ராஜ் அவரைத் தன் அலுலகத்துக்கு வரவழைத்து, “முறையாக வரிகட்டுங்கள். இல்லையேல் எனக்கு ரூ. ஐந்து லட்சம் இலஞ்சமாகக் கொடுங்கள் ” எனக் கூறிய நிலையில் இரு தரப்பினரும் பேசி முடித்து, இறுதியாக ரூ.2.5 லட்சம் இலஞ்சத்துக்கு உடன்பாடு ஆன நிலையில் ஆடிட்டர் ஶ்ரீதரன் என்பவர் தான் இடைத்தரகராக அல்லது புரோக்கராகச் செயல்பட்டது குறித்து பாலதண்டபானி சி.பி.ஐ அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். சி.பி.ஐ அதிகாரிகள் அறிவுறுத்தலின் படி வருமான வரித்துறை அலுவலகத்துக்குச் சென்ற பாலதண்டபாணி. பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய ரூ.50 லட்சம் பணமாகவும், ரூ. இரண்டு லட்சத்துக்கு வங்கிக் காசோலையாகவும் டேனியலிடம் வழங்கியபோது அங்கு மறைந்திருந்த சி.பி.ஐ அதிகாரிகள் டேனியலையும் புரோக்கர் ஸ்ரீதரனையும் கைது செய்தனர். டேனியல் தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகளிடம் கூறியதனால், கோயமுத்தூர் அரசினர் மருத்துவமனையில் சோதனை செய்தனர். அங்கு அவருக்கு உடல்நலக் குறைவு இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டதையடுத்து இருவரையும் சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதுடன் பதினைந்து நாட்கள் சிறையில் அடைக்கவும் உத்தரவு.
கைதுசெய்யப்பட்ட இருவருக்கும் வருகின்ற ஏப்ரல் 6- ஆம் தேதிவரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு டேனியல் மற்றும் ஶ்ரீதரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.5.75 லட்சம் பணமும், குற்றச்சாட்டு சம்பந்தப்பட்ட சில ஆவணங்களுடன் பறிமுதல் செய்யப்பட்டன” என சி.பி.ஐ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
கருத்துகள்