சிவ்குமார் பரீக் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நீண்ட கால உதவியாளர் திரு சிவ்குமார் பரீக் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
‘’ திரு சிவ்குமார் பரீக்ஜியின் மறைவால் வேதனை அடைந்துள்ளேன். எங்கள் கட்சியின் சித்தாந்தத்தில் உறுதியான தீவிர நம்பிக்கை கொண்ட அவர், சேவையிலும், நாட்டு நிர்மாணத்திலும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். அடல்ஜியுடன் நெருங்கி பணியாற்றியவர். பல ஆண்டுகளாக அவருடன் மேற்கொண்ட உரையாடல்களை நினைத்து மரியாதை செலுத்துவேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி’
கருத்துகள்