"மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே.சென்னியது உன்பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே!
முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே.ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே.சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரைஎல்லாம்
வந்தரி; சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி; நீலி; அழியாத கன்னிகை; ஆரணத்தோன்
சுந்தரி; கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே." ...அபிராமி அந்தாதி பக்தி இலக்கியத்தில் முக்கியமான பதிகமிது.
'அவரவர் வினைவழி அவரவர் வந்தனர் ..... அவரவர் வினைவழி அவரவர் அனுபவம்....... எவரெவர்க்குதவினர் எவரெவர்க்குதவிலர்...... தவரவர் நினைவது தமையுணர் வதுவே.
திருக்கடவூர் அபிராமி ஆலயத்தில் கும்பாபிஷேகப் பெருவிழாவில்_இன்று தருமையாதீனம் இயற்கையான காலத்தை உருவாக்கி வைத்தவனே ஆண்டவனாகக் காட்சி தருகிறான். மனித உடம்பு என்கின்ற உருவத்தைப் படைத்தான்.
சில புண்ணியர்களுக்கு மட்டும் மகான் என்ற மகா உருவத்தையும் படைத்து அவர்கள் மகத்தான பல சாதனைகளைச் செய்ய இந்த மகான்களுக்கு சக்தியையும் கொடுத்தான்.
திருக்கடவூரில் இன்று பல லட்சம் அடியார்களுடன் குருமகா சந்நிதானத்துடன் பிற ஆதீனங்கள் கலந்து கொண்ட நிகழ்வு. திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில் சமயக் குரவோர் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களில் காவிரித் தென்கரைத் தலங்களில் சோழநாட்டின் 47ஆவது சிவத்தலமாகும். அமிர்தமே லிங்கமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இது குங்கிலியக்கலய நாயனார், காரி நாயனார் வாழ்ந்த ஸ்தலம். அபிராமி அந்தாதி பாடப்பட்டதும் இத்தலத்திலேயாகும். இத்தலத்தில் இறைவன் மார்க்கண்டேயருக்காக எமனை உதைத்தருளினார் என்பது தொன்மையான நம்பிக்கை இத் திருத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை -தரங்கம்பாடி செல்லும் சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையிலிருந்து 23 கி.மீ. தொலைவில் திருக்கடையூர் உள்ளது. சீர்காழியிலிருந்து 30 கி.மி. தொலைவில் சீர்காழி - நாகப்பட்டினம் செல்லும் சாலையில் உள்ளது. இங்குள்ள ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மன் அருள் தருகின்றனர். இங்கு அகத்தியர், புலஸ்தியர், துர்க்கை, வாசுகி, பூமி தேவி முதலானோர் வழிபட்ட திருத்தலமாகும். மார்க்கண்டேயர் வழிபட்ட சிவத்தலங்களுள் 108 வதான ஸ்தலம், அருகிலுள்ள திருக்கடவூர் மயானம் 107 வதாகவும் அமைகின்றன. மார்க்கண்டேயருக்காக சிவபெருமான் இயமனை உதைத்துத் தள்ளியதலமாதலால், மணிவிழா, பவளவிழா, சதாபிஷேகம் ஆகிய விழாக்களை இத்தலத்தில் பக்தர்கள் கொண்டாடுகின்றனர். திருமணம் திருமாங்கல்யம் கொண்டு திருப்பூட்டுதல் திருமண வாழ்வில் முப்பதாண்டு நிறைவில் மறு முறை திருமணம் புதுப்பிக்கப்பட்ட தாலி அணிவித்து நடத்தும் விழா நிகழ்வுகள் இங்கு அதிகம் நடைபெறும். ஒரு ஆலயத்தில் குடமுழுக்கு எப்படி 12 ஆண்டு நிறைவில் நடக்கிறதோ, அதுபோலவே திருமணமும் அதன் நிகழ்வு இந்து சமூகத்தில் 30 ஆண்டு நிறைவில் நடத்தப்படும் நிகழ்வாக அமையும். அதைத்தான் அறுபதாம் கல்யாணம் அல்லது மணிவிழா என அழைப்பது வழக்கம். முழு அமாவாசை திதியை அம்பிகையின் முக அழகை தரிசித்துக் கொண்டிருந்த அபிராமி பட்டர் பௌர்ணமி என்று தவறாக தஞ்சாவூர் ஆண்ட மராட்டிய சரபோஜி மன்னரிடம் வாய் தவறிச்சொல்ல, அதனால் கோபமுற்ற மன்னரிடமிருந்து காக்கும்படிக்கு அபிராமி அந்தாதி பாடியதில் அம்மன் அணிந்த நகை வானில் ஜொலிக்கும் படி நிகழ்வு அமாவாசையை பௌர்ணமியாக மன்னருக்கு மாற்றிக் காட்டிய அற்புதம் நிகழ்ந்த ஸ்தலம் இங்கு நவக்கிரக சந்நிதி இல்லாதது சிறப்பாகக் கூறப்படுகிறது. அப்படிச் சிறப்பு வாய்ந்த திருக்கடையூர் ஆலயத்தின் கும்பாபிஷேகம்
சுவாமி மற்றும் அம்பாள் சன்னதிகளின் தங்கக் கொடிமரம்
பரிவார தெய்வங்களின் சன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் இன்று அதி விமர்சையாக நடைபெற்றது
தருமபுரம் ஆதீனத்தின் நேரடி பராமரிப்பிலுள்ள திருக்கடையூர் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா மார்ச் மாதம் இருபத்தி மூன்றாம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது
மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 72 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு
எட்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன
இன்று அதிகாலை 8 ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று பூர்ண ஆகுதி மற்றும் மஹா தீபாராதனைகளும் செய்யப்பட்டது
தருமபுரம் ஆதீனம் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற விழா நிகழ்ச்சியில், திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி, பட்டம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மடாதிபதிகள், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்
தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கும்பாபிஷேகத்திற்கான கடம் புறப்பாடு நடைபெற்றது
யாகசாலையிலிருந்து ஊர்வலமாகப் புனிதநீர் எடுத்து வரப்பட்டு சுவாமி சன்னதியின் தங்கக் கொடிமரம், அம்பாள் சன்னதியின் தங்க கொடிமரம், மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதிகளில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதையடுத்து சுவாமி அம்பாள் காலசம்ஹாரமூர்த்தி வில்வவனநாதர் முருகன் விநாயகர் ஆகிய சன்னதிகளின் கருவறை விமானங்கள், ஐந்து நிலை ராஜ கோபுரங்கள் ஆகியவற்றிற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது
அதிகாலை முதலே திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்
விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் சரக காவல்துறை டிஐஜி கயல்விழி மேற்பார்வையில், 3 மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில், 1200 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்
கும்பாபிஷேகத்தில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்
திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்
குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் 46 ஆவது குருமகாசந்நிதானம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
சூரியனார் கோவில் ஆதீனம் 28வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்
வேளாக்குறிச்சி ஆதீனம் 18 ஆவது குருமகாசந்நிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்
தொண்டைமண்டல ஆதினம் 233வது திருச்சிற்றம்பல தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்,
செங்கோல் ஆதீனம்103வது குருமகா சன்னிதானம். மற்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் நிர்வாகி விமலேஷ்வரன் ஆகியோர்கள் கலந்து கொண்டு நடந்த விழாவில் சைவ ஆகமங்கள் முறையில் சிறப்பாக நடந்தது.
.
கருத்துகள்