சென்னையில் உள்ள வெளிநாட்டு அஞ்சலக பார்சலில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவை சுங்கத் துறையினர் கைப்பற்றினர்
சென்னையில் உள்ள வெளிநாட்டு அஞ்சலக பார்சலில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவை சுங்கத் துறையினர் கைப்பற்றினர்
சென்னையில் உள்ள வெளிநாட்டு அஞ்சலக பார்சலில் 32 போதை மாத்திரைகள் மற்றும் 419 கிராம் கஞ்சாவை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் கைப்பற்றினர்.
நெதர்லாந்தில் இருந்து விஜயவாடா மற்றும் ஹைதராபாதை சேர்ந்த நபர்களின் முகவரியிட்ட இரண்டு பார்சல்களை சந்தேகத்தின் பேரில் திறந்தபோது அவற்றில் 32 போதை மருந்துகள் கண்டறியப்பட்டன.
இதேபோல், இன்னொரு பார்சலை திறந்த போது அதில் 419 கிராம் எடையுள்ள உலர்ந்த கஞ்சா இலைகள் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவின் மதிப்பு ரூ.1.61 லட்சம் என்றும், மேலும் விசாரணை நடைபெறுகிறது என்றும், சென்னை விமான நிலைய ஆணையரகத்தின் சுங்கத் துறை முதன்மை ஆணையர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது
கருத்துகள்