இலுப்பூர் குர்சித் ஆலம் கான் உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ரூ 10,000 அபராதம்
2019-ஆம் ஆண்டு இலுப்பூர் நவம்பட்டியில் சமூக சேவகரும், வழக்கறிஞருமான, எஸ்.பழனிவேலுக்குச் சொந்தமான விவசாயத் தோட்டத்தில் வன்முறை நடத்திச் சேதம் விளைவித்தது தொடர்பாக, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் காவல்நிலையத்தில் குற்ற எண் 33-ன் படி வழக்கு குற்றவாளிகள் இலுப்பூர் குர்ஷித் ஆலம்கான், வீரப்பட்டி தங்கராஜ், சென்ட்ரிங் முருகேசன், இராப்பூசல் கணேசன், ராப்பூசல் சுப்பிரமணியன். ஆகிய குற்றவாளிகளுக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்ட பி சி ஆர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், குற்றவாளிகள் மீது புகார் கொடுத்த புகார்தாரர் தேரவூர் சுப்பிரமணியனை மிரட்டியோ அல்லது , கட்டாயப்படுத்தியோ சமதானம் ஆனதாக ஒத்துக்கொள்ள வைத்து, புதுக்கோட்டை மாவட்ட பி சி ஆர் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கை இரத்து செய்ய திட்டமிட்டு மோசடியாக சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு எண்.CRLOP 13720/2020, உண்மையை மறைத்து மோசடி செய்து தவறான தகவல்களை அளித்து உத்தரவு பெற முயற்சி செய்த விபரத்தை அறிந்து
சம்பந்தப்பட்ட மேற்கண்ட இழுப்பூர் குர்சித் ஆலம் கான் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு ரூபாய் 10,000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நீதியரசர் இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சம்பந்தப்பட்ட பி சி ஆர் வழக்கை தடை செய்ய மறுத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றத்த்தையே ஏமாற்றி உத்தரவு பெறத் துணிந்த குற்றவாளிகளுக்கு PCR வழக்கில் நேர்மையாக நடைபெற்றுத் தண்டனைகிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதே தற்போது பகுதி பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
கருத்துகள்