பாபு ஜகஜீவன்ராமின் 115-வது பிறந்ததினம்
முன்னாள் துணை பிரதமர் பாபு ஜகஜீவன்ராமின் 115-வது பிறந்ததினம், சென்னை துறைமுகத்தின் சார்பில் சேப்பாக்கம் எழிலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சென்னை துறைமுகத்தின் துணைத் தலைவர் திரு.எஸ்.பாலாஜி அருண் குமார் மற்றும் மூத்த அதிகாரிகள் அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதன் தொடர்ச்சியாக சென்னை துறைமுகத்தின் மூத்த அதிகாரிகள் தண்டையார்பேட்டை வீட்டுவசதி காலனியில் உள்ள விளையாட்டு வளாகத்தில் அமைந்திருக்கும் பாபு ஜகஜீவன்ராமின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். முன்னாள் பாரத துணை பிரதமர் மறைந்த பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்தநாளில், பாராளுமன்றத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும் (பொறுப்பு தெலுங்கானா) விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தார்கள்.
கருத்துகள்