பேருந்தில் குளிர்சாதனங்கள் இயங்காததால் பயணிக்கு ரூ.15,000 இழப்பீடு.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு: குளிர் சாதனப் பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு, அதிக கட்டணம் செலுத்தி, பயணச்சீட்டு வாங்கியும், பயணத்தின் போது குளிர் சாதனம் செயல்படாததால், இரவு முழுவதும் தொந்தரவை அனுபவித்த பயணிக்கு, 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கும் படி, நுகர்வோர் நீதித் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது
பெங்களூரு, மாரத்தஹள்ளியில் வசிக்கும் துவாரகீஷ் , 2017 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதியில், தனது குடும்பத்தினருடன் பெங்களூரிலிருந்து, கூட்லகிக்கு புறப்பட்டவர், 2,795 ரூபாய் கட்டணம் செலுத்தி, கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் குளிர் சாதன படுக்கை வசதி கொண்ட பேருந்தில் பயணச் சீட்டு வாங்கியிருந்தார்.
பயணத்தின் போது, தன் இருக்கையிலிருந்த குளிர் சாதனம்' செயல்படாததைக் கவனித்த துவாரகீஷ், அது குறித்து நடத்துனரின் கவனத்துக்குக் கொண்டு சென்றும் உரிய பதில் இல்லை மேலும் பயனில்லை. வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டும் மின் அஞ்சல் மூலமாகப் புகார் செய்து, மாற்று ஏற்பாடு செய்து தரும்படி கேட்டும் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி
இதற்கு நிவாரணம் உரிய நுகர்வோர் நீதிமன்றத்தில் கோரியதில், பதில் மனு தாக்கல் செய்த பேருந்து நிர்வாகம் 524 ரூபாயைத் திருப்பித் தருவதாக கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் சார்பில் தெரிவித்தது. அதை ஏற்காத துவாரகேஷ், கூடுதல் நிவாரணம் கோரி, கே.எஸ்.ஆர்.டி.சி.,க்கு உத்தரவிடும்படி, நுகர்வோர் நீதிமன்றத்தில், மனுத்தாக்கல் செய்தார்.
விசாரணையின் போது, இவரது குற்றச்சாட்டை மறுத்த கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் தரப்பில் கூறியதாவது:
பேருந்தில் 'குளிர் சாதனங்கள்'சரியாகத் தான் செயல்பட்டது. மற்ற பயணிகள் எந்தப் புகாரும் தெரிவிக்கவில்லை. தொழில் நுட்பக் கோளாறால் புகார்தாரரின் இருக்கையில், கூலிங் இருக்க வில்லை. இதனால் பேருந்தில் காலியாக இருந்த, 11 ஆம் எண் இருக்கைகளில் அமரும்படி பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்தும், புகார்தாரர் அதற்குச் சம்மதிக்கவில்லை. கூடுதல் நிவாரணம் பெறும் நோக்கில், பொய்யான புகார் அளித்துள்ளார். இவருக்கு அபராதம் விதித்து, இவரது மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.
கே.எஸ்.ஆர். டி.சி., வாதத்தை ஏற்காத நீதிமன்றம், பயணிக்கு ஏற்பட்ட தொந்தரவுக்காக 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், வழக்கு செலவாக 5,000 ரூபாயும் வழங்கும் படி, கே.எஸ்.ஆர்.டி.சி.,க்கு, உத்தரவிட்டது. அது குறித்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது.
கருத்துகள்