முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அசாமில் 1971 போர்வீரர்களைப் பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார்

அசாமில் 1971 ஆம் ஆண்டு போர்வீரர்களைப் பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார்; முன்னாள் ராணுவத்தினர் தேசத்தின் முக்கியமான சொத்துக்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

அசாமின் குவஹாத்தியில் 2022 ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 1971ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் போது பங்கேற்ற ராணுவ வீரர்களைப் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத்சிங் பாராட்டினார்.



300க்கும் அதிகமான ராணுவ வீரர்கள், போரில் உயிர் நீத்த வீரர்களின் மனைவியர், அவர்களின் குடும்பத்தினர் இந்தப் பாராட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 1971ஆம் ஆண்டுப் போரின் வெற்றியை உறுதிப்படுத்த எதிரிகளோடு போராடும் துணிச்சல் மிக்க மன உறுதியையும், வீரத்தையும், அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் பாராட்டுவதற்காக அசாம் அரசு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.



1971ஆம் ஆண்டுப் போரின்போது பங்களாதேஷின் ராணுவ வீரராக இருந்த, பத்மஸ்ரீ விருது பெற்ற லெப்டினன்ட் கர்னல் (ஓய்வு) க்வாசி சஜ்ஜத் அலி ஜாஹிரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 1965 ஆம் ஆண்டுப் போரில் பங்கேற்ற சில வீரர்களும் இதில் பங்கேற்றனர்.

போர் வீரர்களையும் உயிரிழந்த வீரர்களின் மனைவியரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவதாக திரு ராஜ்நாத்சிங் தமது உரையில் குறிப்பிட்டார். தேசத்தின் சேவைக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு அவர் புகழஞ்சலி செலுத்தினார். ஒவ்வொரு இந்தியருக்கும் உந்துசக்தியாக இருக்கும் தேசத்தின் முக்கிய சொத்துக்கள் ராணுவ வீரர்கள் என்று அவர் குறிப்பிட்டார். தற்போது சேவையில் இருக்கும் வீரர் இந்தியாவின் பலம் என்றும் ராணுவத்தில் ஏற்கனவே பணியாற்றியவர்கள் அந்த பலத்தோடு நீடித்த ஊக்கத்தை அளிப்பவர்கள் என்றும் அவர் கூறினார்.


வடகிழக்குப் பகுதிகள் பலவற்றில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கப்பட்டதற்குக் காரணம் அந்தப் பகுதியில் நீடித்த அமைதியும் நிலைத்தன்மையும் ஏற்பட்டதுதான் என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

முன்னாள் ராணுவ வீரர்களின் நல்வாழ்வையும் திருப்தியையும் உறுதிப்படுத்துவது அரசின் கடமை என்பதை வலியுறுத்திய திரு ராஜ்நாத் சிங், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவியும் செய்யப்படும் என்று உறுதி அளித்தார். முன்னாள் ராணுவ வீரர்களின் நலனை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டிருப்பதாக அவர் கூறினார். தற்போது ராணுவத்தில் உள்ள ஒவ்வொரு வீரரும் நாளை மதிக்கத்தக்க முன்னாள் வீரர்களாக இருப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

'1971ன் துணிச்சல் மிக்க வீரர்கள்' என்ற புத்தகத்தையும் இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டார். அசாம் ஆளுநர் பேராசிரியர் ஜெகதீஷ் முக்கி, முதலமைச்சர் டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோரும் இந்தப் பாராட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...