சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் ரூ.2.3 கோடி மதிப்பிலான மெத் கிறிஸ்டல் போதைப் பொருளைக் கைப்பற்றினார்கள்
ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட இருந்த ரூ.2.3 கோடி மதிப்பிலான மெத் கிறிஸ்டல் போதைப் பொருளை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் கைப்பற்றினார்கள்
ஆஸ்திரேலியாவுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து சென்னை விமான நிலையத்தில் பார்சல் ஒன்றை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் துணிகள், புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு கீழே மரப்பெட்டி ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. அதை திறந்து பார்த்ததில் பிளாஸ்டிக் பை ஒன்றில் 920 கிராம் எடையிலான மெத் கிறிஸ்டல் போதை பொருள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் 2.3 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த மெத் கிறிஸ்டல் போதை பொருளை கைப்பற்றினார்கள். இது குறித்த விசாரணையையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தகவலை சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறையின் முதன்மை ஆணையர் தெரிவித்துள்ளது.
கருத்துகள்