முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

30 ஆயிரம் போதாது கூடுதல் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு வாங்கிய எம்.ரெட்டியபட்டி காவல்துறை சார்பு ஆய்வாளர் கைது

பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய எம்.ரெட்டியபட்டி காவல்துறை சார்பு ஆய்வாளர் கைது.


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் எம்.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணி புரியும் ராமநாதன் (வயது 30). இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் ராமசாமிபட்டியைச் சேர்ந்த தங்கமணி என்பவர் அடிதடி வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வந்துள்ளார். இராமசாமிபட்டி தங்கமணியின்  நண்பர் சோலைக்குச் சொந்தமான இடத்தில் பெருநாழியைச் சேர்ந்த தங்கராஜ் பாண்டியன் என்பவர் 'ஊன்று கல்' நட்டதை உடைத்ததாகக் கூறி தும்முசின்னம்பட்டி கோவிந்தராஜ், தங்கராஜ் பாண்டியன் என்ற நபர் சோலை, மற்றும்  ராமசாமிபட்டி தங்கமணி , முஸ்டக்குறிச்சி அய்யனார் ஆகியோர் மீது தங்கராஜ் பாண்டியன் எம்.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் கொடுத்த  புகார் மீது நடவடிக்கை தொடர்பாக இந்த வழக்கிலிருந்து தங்கமணி பெயரை நீக்குவதற்கு எம்.ரெட்டியபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஏற்கனவே இராமநாதன் ரூ.30,000 லஞ்சம் பெற்றுக்கொண்டதாகவும், மேலும் பணம் போதவில்லை எனக் கூறி மீண்டும் மீண்டும்  தங்கமணியிடம் சார்பு ஆய்வாளர் இராமநாதன் பணம் கேட்டு மிரட்டி தொந்தரவு செய்ததாகவும், இதனால், வேறு வழியின்றி தங்கமணி விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறைக்குத் தகவல் அளித்திருக்கிறார்.


அவர் தினமும் எம்.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட தங்கமணி, கடந்த 10 நாட்களாக காவல் நிலையத்தில் கையெழுத்து செய்ய ஆஜராகவில்லை. அதையறிந்த சார்பு ஆய்வாளர் இராமநாதன், தங்கமணி குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப் போவதாகவும் அதனால் ஜாமீன் இரத்தாகி சிறை செல்லும் நிலைமை வரும் என  மிரட்டியுள்ளார். மேலும் அறிக்கை தாக்கல் செய்யாமல் இருக்கவும், வழக்கிலிருந்து விடுவிக்கப் படவும், வேண்டுமானால் தங்கமணியிடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

அதை விரும்பாத தங்கமணி விருதுநகர் மாவட்ட இலஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் தெரிவித்தார். ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர், பினாப்தலின் இரசாயனம் தடவிய ரூபாய் பத்தாயிரத்தை தங்கமணியிடம் கொடுத்தனர். அதனை எம்.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில், சார்பு ஆய்வாளர் இராமநாதனிடம் தங்கமணி அரசு தரப்பில் சாட்சி உடன் சென்று  கொடுத்துள்ளார்.





அப்போது அங்கு மறைந்திருந்த இலஞ்ச ஒழிப்புத் துறையினர், பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல்துறை சார்பு ஆய்வாளர் இராமநாதனை கையுடன் பிடித்து கைது செய்தனர்.காவல் நிலையத்திற்குள் வைத்து லஞ்சம் வாங்கிய சார்பு ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் வேகமாக பரவியது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...