30 ஆயிரம் போதாது கூடுதல் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு வாங்கிய எம்.ரெட்டியபட்டி காவல்துறை சார்பு ஆய்வாளர் கைது
பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய எம்.ரெட்டியபட்டி காவல்துறை சார்பு ஆய்வாளர் கைது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் எம்.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணி புரியும் ராமநாதன் (வயது 30). இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் ராமசாமிபட்டியைச் சேர்ந்த தங்கமணி என்பவர் அடிதடி வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வந்துள்ளார். இராமசாமிபட்டி தங்கமணியின் நண்பர் சோலைக்குச் சொந்தமான இடத்தில் பெருநாழியைச் சேர்ந்த தங்கராஜ் பாண்டியன் என்பவர் 'ஊன்று கல்' நட்டதை உடைத்ததாகக் கூறி தும்முசின்னம்பட்டி கோவிந்தராஜ், தங்கராஜ் பாண்டியன் என்ற நபர் சோலை, மற்றும் ராமசாமிபட்டி தங்கமணி , முஸ்டக்குறிச்சி அய்யனார் ஆகியோர் மீது தங்கராஜ் பாண்டியன் எம்.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது நடவடிக்கை தொடர்பாக இந்த வழக்கிலிருந்து தங்கமணி பெயரை நீக்குவதற்கு எம்.ரெட்டியபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஏற்கனவே இராமநாதன் ரூ.30,000 லஞ்சம் பெற்றுக்கொண்டதாகவும், மேலும் பணம் போதவில்லை எனக் கூறி மீண்டும் மீண்டும் தங்கமணியிடம் சார்பு ஆய்வாளர் இராமநாதன் பணம் கேட்டு மிரட்டி தொந்தரவு செய்ததாகவும், இதனால், வேறு வழியின்றி தங்கமணி விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறைக்குத் தகவல் அளித்திருக்கிறார்.
அவர் தினமும் எம்.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட தங்கமணி, கடந்த 10 நாட்களாக காவல் நிலையத்தில் கையெழுத்து செய்ய ஆஜராகவில்லை. அதையறிந்த சார்பு ஆய்வாளர் இராமநாதன், தங்கமணி குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப் போவதாகவும் அதனால் ஜாமீன் இரத்தாகி சிறை செல்லும் நிலைமை வரும் என மிரட்டியுள்ளார். மேலும் அறிக்கை தாக்கல் செய்யாமல் இருக்கவும், வழக்கிலிருந்து விடுவிக்கப் படவும், வேண்டுமானால் தங்கமணியிடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
அதை விரும்பாத தங்கமணி விருதுநகர் மாவட்ட இலஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் தெரிவித்தார். ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர், பினாப்தலின் இரசாயனம் தடவிய ரூபாய் பத்தாயிரத்தை தங்கமணியிடம் கொடுத்தனர். அதனை எம்.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில், சார்பு ஆய்வாளர் இராமநாதனிடம் தங்கமணி அரசு தரப்பில் சாட்சி உடன் சென்று கொடுத்துள்ளார்.
கருத்துகள்