கோயமுத்தூர் சேர்ந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ரூ.300 கோடி வரை மோசடி செய்த புகார் எழுந்த நிலையில் அது குறித்து விசாரணை தீவிரமாகிறது.
கோயமுத்தூர் விமல் குமார் , Mr. Money எனும் யூடியூப் சேனல் நான்கு ஆண்டுகளாக நடத்தி வந்ததன் மூலம் அன்னியச் செலாவணி, பங்குச் சந்தை, க்ரிப்டோகரன்சி ஆகியவற்றில் முதலீடு செய்வது தொடர்பாக பொதுமக்களுக்கு கல்வியும், பயிற்சியும் வழங்குவதாக தெரிவித்த காரணமாக பண ஆசை கொண்ட உழைக்காமல் சம்பாதிக்க ஆசைப்பட்ட பலர் இவரது யூடியூப் சேனலை 1,53,000 பின் தொடர்ந்துள்ளனர்.
அதன் மூலம் Mr. Money மற்றும் Alphaforexmarket என்கிற இரண்டு திட்டங்களில் முதலீடு செய்ய மக்களிடமிருந்து கடந்து சென்ற நான்கு ஆண்டுகளாக ரூ.300 கோடி வரை வாங்கி விட்டு உறுதியளித்த படி லாபத்தையும் முதலீட்டையும் மக்களுக்குத் திருப்பித் தராமல் ஏமாற்றி வருவதாக தமிழ்நாடு முழுவதும் பலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் அளித்தனர்
கோயமுத்தூர் மாவட்டம் காளப்பட்டியில் இயங்கிய விமலின் அலுவலகம் தற்போது மூடப்பட்டிருப்பதாகவும் கடந்த நான்கு மாதங்களாக அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லையென்றும் அவரால் பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்க்வே விமல் குமாரும் அவருடைய மனைவி ராஜேஷ்வரியும் தான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் புகார் செய்தார்கள்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் மக்களை நேரில் சந்தித்தும் இணையம் மூலமாகவும் விமல் குமார் பணத்தை வசூல் செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான புகைப்படம் மற்றும் வங்கிக் கணக்கு ஆதாரங்களையும் முன்வைக்கின்றனர்.
இண்ட்ரோ ப்ரோ எனப்படும் அறிமுக புரோக்கர்களை நியமித்து மாதம் 50 ஆயிரம் ரூபாய் வரை அந்த நபர்களுக்கு மகாநதி திரைப்படக் கதையில் வருவது போல் ஊதியம் விமல் கொடுத்துள்ளார். 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது என ஆர்வத்துடன் பணியாற்றியவர்கள் மாநிலம் முழுவதும் சுமார் 300 பேரை திரட்டி ஒரு லட்சம் ரூபாய் வரை வாங்கி செலுத்தியுள்ளனர். அதிகமான பணம் கைக்கு கிடைத்ததை அடுத்து வேலையில் அமர்த்தியவர்களுக்கு சம்பளம் வழங்காத மிஸ்டர்.மணி எனப்படும் டுபாக்கூர் நிறுவனம் நடத்திய விமல் குமார், முதலீட்டாளர்களுக்கு ஒரு ரூபாய் கூட தராமல் நீண்ட காலம் கடத்தி இழுத்தடித்து வந்ததையடுத்து ஊழியர்களும் பாதிக்கப்பட்டோரும் மிஸ்டர் மணி எனும் விமல் குமாரையும் அவரது மனைவியையும் பலமுறை தொடர்புகொள்ள முயன்றும் முடியாததையடுத்து தங்களிடம் பணம் பெற்ற நபர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அதுவும் தோல்வியில் முடிந்ததால் கோபமடைந்த, மதுரை தூத்துக்குடி, கோயமுத்தூர் உள்ளிட்ட பல மாவட்ட மக்கள் கோயமுத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு வந்து புகார் கொடுத்ததோடு போராட்டத்திலும் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியரிடம் அவர்களிடம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி அளித்ததாக தெரிகிறது.
கருத்துகள்