பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரைச் சந்தித்த நிலையில்,
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது,’முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர் எனது மூன்றாவது டெல்லி பயணமிது. உடனடியாக நேரம் ஒதுக்கி என்னைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றிகள்.
14 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்தேன். கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். பிரமருடனான சந்திப்பு மகிழ்ச்சி தருவதாகவும், மன நிறைவளிப்பதாகவும் அமைந்திருந்தது எனத் தெரிவித்தார்.
டெல்லியில் பள்ளியைப் பார்வையிட்டபோது, அங்கு மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் Business Blasters முன்னெடுப்பைக் கண்டு மகிழ்ந்தேன். மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களது அன்பால் என்னை நனையச் செய்துவிட்டனர். தலைவர் கலைஞரின் ஓவியத்தை ஆசிரியை ஒருவர் வழங்கியபோது, நெகிழ்ந்தேன்' என்று பதிவிட்டுள்ளார்.
ஆசிரியை தந்த கலைஞர் மு. கருணாநிதியின் அந்த ஓவியத்தையும் ட்வீட்டில் ஷேர் செய்துள்ளார் முதல்வர். அதேபோல, மகிழ்ச்சி வகுப்பு எனும் ஹேப்பி கிளாஸ் குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார்
.. டெல்லியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளிகளில் வாரம் ஒருமுறை இந்த மகிழ்ச்சி வகுப்புகள் எடுக்கப்படும். மாணவர்கள் பள்ளிக்கு அன்றைய தினம் புத்தகமே கொண்டு வர மாட்டார்கள்.. இந்த ஒரு நாளில், மாணவர்களின் மன அழுத்தங்களைப் போக்கும் வகையில், இசை, யோகா உள்ளிட்டவை கற்பிக்கப்படுகிறது.. இதுதான் அந்த ஹேப்பி கிளாஸ்.. இதை பற்றி டில்லியில் முதல்வர் கெஜ்ரிவாலிடம் கேட்டறிந்தார்.. பிறகு பள்ளி மாணவ, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.. இந்த பள்ளி நம் முதல்வருக்கு பிடித்து விட்டது செய்தியாளர்களிடம் பேசும்போது, டெல்லியில் உள்ள மாதிரி பள்ளி எப்படி நடந்து கொண்டிருக்கிறதோ, அதேபோலவே ஒரு பள்ளியை தமிழ்நாட்டில் கூடிய சீக்கிரம் நாங்களும் உருவாக்கப் போகிறோம்..
அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது அந்தப் பணிகள் முடிந்து, பள்ளியை திறக்கிற நேரத்தில் கண்டிப்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலையும் அழைப்போம் அவரும் வருவார், வரவேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் நான் கேட்டுக் கொள்கிறேன்' என்று நெகிழ்ந்தார். இந்தப் பள்ளியில் உள்ளே நுழையும்போது மாணவிகள் தந்த வரவேற்பு முதல் ஒவ்வொரு நிகழ்வையும் தன்னுடைய ட்வீட்டிலும் முதல்வர் பகிர்ந்துள்ளார்..
கருத்துகள்