முள் மீது பூத்த ரோஜா கடந்த அரசியல் பயணம்
.2019 ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 2.5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மொத்த அமைச்சரவையும் மாற்றியமைக்கப்படும் என அறிவித்த நிலையில் தற்போது மாற்றப்பட்டது. 25 அமைச்சர்களில், முன்பிருந்த 11 அமைச்சர்களும், புதியதாய் நியமனமான 14 அமைச்சர்களும் பதவி பிரமாணம் எடுத்தனர்.
அதில் நடிகை ரோஜாவும் இடம்பெற்றிருந்தார். முதல் சுற்றில் அமைச்சர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் வாரியத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நடிகை ரோஜா - 1990 களில் இந்தப் பெயரை ஆந்திரா தமிழகத்தில் பிரபலம் இயக்குனர் ஆர்.கே செல்வமணியின் செம்பருத்தி மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமான ரோஜா, முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் முத்திரை பதித்தார். இயக்குநரான ஆர்.கே செல்வமணியை பின் நாளில் மணந்து 1999 ஆம் ஆண்டு அரசியல் பயணத்தை தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து துவங்குகி மகளிர் அணியான தெலுங்கு மகிளாவிற்கு தலைவரானார்
கட்சியில் சேர்ந்த ஆரம்பத்தில் பதவிகள் கொடுத்தாலும், தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியில் ரோஜாவிற்கு ஏதாவது ஒரு விதத்தில் அரசியல் இடைஞ்சல் வந்துக்கொண்டே இருந்தது.
அவரை பிரசாரம் செய்ய விடாமல் தடுப்பது, கட்சி பணிகளை செய்யவிடாமல் குறுக்கிடுவது. தன்னை இழிவுபடுத்தும் வகையில் நடந்துக்கொள்வது என்பன போன்ற பல குற்றசாட்டுகளை கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் முன் வைத்தார் ரோஜா. ஆனால் அது குறித்து அவர் எந்தவொரு பெரிய நடவடிக்கையுமே எடுக்கவில்லை 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பாக நகரியில் போட்டியிட்டு தோல்வியானார்.
அதன்பிறகு, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அங்குள்ள கோஷ்டிகள் மற்றும் பூசல் காரணமாக அங்கேயும் பெரியளவில் பங்காற்ற முடியாத நிலையில். அரசியலிலிருந்து விலகிவிட நினைத்த போது, 2011 ஆம் ஆண்டில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொடங்கப்படுகிறது. உடனடியாக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் ஜெகன் மோகன் தலைமையில் இணைந்தார்.
நகரியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . தற்போது இரண்டாம் சுற்று அமைச்சரவையில் 25 பேருக்குப் பதில் புதியவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் அவர்கள் இரண்டரை ஆண்டுகளுக்கு அமைச்சர்களாகச் செயல்படுவார்கள் என முன்னர் அறிவித்த நிலையில் அமைச்சரவை பதவியேற்று மூன்றாண்டாகும் நிலையில்
புதிய அமைச்சரவையை நியமனம் செய்ய முதல்வர் ஒய் எஸ் ஆர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்ததில் அமைச்சராக இருந்த கவுதம் ரெட்டி அண்மையில் மரணமடைந்ததையடுத்து 24 பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதுவரை சிறப்பாக பணியாற்றிய மற்றும் மூத்த அமைச்சர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்ட பின்னர் புதிதாக யாருக்கு வாய்ப்பு வழங்கலாமென ஆலோசிக்கப்பட்டதன்படி தற்போது பழைய அமைச்சர்கள் பட்டியலிலிருந்து 11 பேரும் புதிதாக 14 பேரும் தேர்வு செய்யப்பட்ட நிலையில்
பழைய அமைச்சர்களில் ஆதி மூலபு சுரேஷ், பெத்திரெட்டி ராம சந்திரா ரெட்டி, நாராயணசாமி, பி. சத்யநாராயணா, ராஜேந்திரநாத் ரெட்டி, விஸ்வரூப், அப்பல ராஜு, வேணுகோபால கிருஷ்ணா, அம்ஜத் பாஷா, தேனேட்டி வனிதா, கும்மனூர் ஜெயராமன், ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் நடிகை ரோஜா பதவிப் பிரமாணம் செய்து வைக்க அழைக்கப்படும் போது பலத்த கரகோஷம் எழுந்தது. அவரது தாய் மொழி தெலுங்கில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
கருத்துகள்