எம் எல் எம் மூலம் ஆம்வே நிறுவனம் பிரமிட் மோசடி மக்களிடம் ஏமாற்றிய ரூ.758 கோடி சொத்துக்கள் முடக்கம் சட்டவிரோதப் பணப் பரிமாற்றச் சட்டத்தில் ஆம்வே இந்தியா நிறுவனத்தின் 758 கோடி ரூபாய் மதிப்பு சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
அமெரிக்காவில் தலைமையிடம் செயல்படும் ஆம்வே நிறுவனம் இந்தியா உள்ளிட்ட உலகில் பல நாடுகளில் தங்கள் கிளைகளை நிறுவி. (அமெரிக்க வழி விற்பனை என்பதன் சுருக்கமே ஆம்வே). அழகுசாதனப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், மருத்துவம் சார்ந்த பொருட்கள் தயாரித்து விற்பனை செய்கிறது. சதுரங்க வேட்டை திரைபடத்தில் வருவதுபோல் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்ற இந்த நிறுவனத்தின் பொருட்களை விலை கொடுத்து வாங்கி உறுப்பினராக சேர்ந்தால் விரைவில் பணக்காரர் ஆகலாம் என்று ஆசை வார்த்தைகளைத் தூண்டி கோடிக் கணக்கான மக்களை ஏமாற்றி அவர்களது நிறுவனத்தில் உறுப்பினர்களாக இணைத்த
நிறுவனம் பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி மண்டபங்களில் கூட்டங்கள் நடத்தி கிராமத்தில் வாழும் பொதுமக்களை ஆசை காட்டி மூளைச்சலவை செய்து அதன்மூலம் சங்கிலி தொடர் போல் உறுப்பினர்களைச் சேர்த்து மோசடியில் நீண்ட காலமாக ஈடுபட்டு் வந்தது . புதிய உறுப்பினர்கள் தங்கள் சொந்த உபயோகத்திற்காக தயாரிப்புகளை வாங்காமல், உறுப்பினர்களாக சேர்வதன் மூலம் திடீர் பணக்காரர்களாக வேண்டுமென்ற ஆசையில் பத்து ரூபாய் பெறாத பொருட்களை நூறு ரூபாய் என அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இதனால் பல நூறு கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதை ஆந்திரப் பிரதேச சிஐடி காவல்துறை கண்டுபிடித்துடன் 2012-ஆம் ஆண்டு ஆம்வே நிறுவனத்தின் இந்தியக் கிளை சிஇஒ வில்லியம் பிங்கேனே மற்றும் இரண்டு இயக்குநர்களையும் கைது செய்தனர்.
இந்நிறுவனத்தின் மீது 1978-ஆம் ஆண்டு பரிசு சீட்டு மற்றும் தடை செய்யப்பட்ட பண சுழற்சி பரிவர்த்தனைத் திட்டம் சட்டத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத் துறையினர் சட்டவிரோதப் பணபரிமாற்றச் சட்டத்தின் கீழ் கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். ஆம்வே நிறுவனம், தங்கள் நிறுவனப் பொருட்களை நேரடி விற்பனை செய்யாமல், மல்டி-லெவல் மார்க்கெட்டிங் நெட்வொர்க் என்ற எம் எல் எம் எனும் இமாலய மோசடி செய்திருப்பதை அமலாக்கத்துறை கத்து காலதாமதமாகவே தெரிந்தது அதை கண்டுபிடித்து. அந்நிறுவனம் வழங்கும் பெரும்பாலான தயாரிப்புகளின் விலை மலிவானவை எனவும், உண்மைகளை அறியாத பொதுமக்கள், நிறுவனத்தில் வர்த்தக உறுப்பினர்களாகச் சேர தூண்டப்பட்டு, அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்குவதாக கண்டு அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
பிரமிடு திட்டம் மற்றும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் அடிப்படையில் ஒருவர் தனக்கு கீழ் உறுப்பினர்களை சேர்க்கும் எண்ணிக்கையின் அடிப்படையில் சில்வர், கோல்டு, பிளாட்டினம், டைமண்ட் என அவர்களே பெயர் வைக்கும் மோசடி திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள்.
இதில் முதல் நிலை உறுப்பினர்கள் இரு பிரிவுகளாக பல்வேறு உறுப்பினர்களை சேர்த்து அதன் மூலம் கமிஷனாக கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்ததாக கூறி ஏமாற்றி கூட்டங்கள் நடத்தி பொதுமக்களை ஆசை காட்டியதன் மூலம், சுமார் ஐந்து லட்சத்திற்கு மேலாக உறுப்பினர்களை இந்த நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர். ஆம்வே தன் சொந்தத் தயாரிப்பு என தெரிவித்து விநியோகித்த பொருட்கள் தரமற்றவையாக இருப்பதுடன், வணிக நிறுவனமாக பதிவு செய்து கொண்ட ஆம்வே நிறுவனம், ஆட்களை சேர்த்து மோசடி செய்வதில் முக்கியத்துவம் காட்டியது தான் தற்போது விசாரணையில் அம்பலமானது. ஆக இதுவரை இந்த நிறுவனம் மக்களை ஏமாற்றி வந்த நிலையில் தற்போது நடவடிக்கை பாய்ந்தது, இதுபோன்ற பல நிறுவனங்கள் இந்தியாவில் தற்போது கடை விரித்து இதே முறையில் வர்த்தகம் செய்வததை ஆந்திரப் பிரதேசம் போல் தமிழ்நாட்டில் நடக்குமா என்பதே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கருத்துகள்