முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அசாமில் ஏழு புற்றுநோய் மருத்துவமனைகளை நாட்டிற்கு அர்ப்பணித்த பிரதமர்

அசாமில் ஏழு புற்றுநோய் மருத்துவமனைகளை நாட்டிற்கு அர்ப்பணித்த பிரதமர், ஏழு புதிய புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டினார்


அசாமில் அமைக்கப்படும் புற்றுநோய் மருத்துவமனைகள் வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமின்றி தெற்காசியாவில் சுகாதார சேவைகளை மேம்படுத்தும்

‘ஆரோக்கியத்தின் சப்தரிஷிகள்’ சுகாதார சேவை தொலைநோக்கின் ஏழு தூண்களாவர்

“மத்திய அரசு திட்டங்களின் பலன்களை நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு கிடைக்கச்செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது, நாட்டின் எந்த பகுதியாக இருந்தாலும் எவ்வித கட்டுப்பாடும் இல்லை. இதுதான் ஒரே தேசம் ஒரே சுகாதாரம் என்ற உணர்வு

“தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசும், அசாம் அரசும் அக்கறையுடன் பாடுபட்டு வருகின்றன’

திப்ருகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அசாமில் அமைக்கப்பட்டுள்ள ஏழு புற்றுநோய் மருத்துவமனைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த புற்றுநோய் மருத்துவமனைகள் திப்ருகர், கோக்ரஜார், பார்பேடா, தரங், தேஜ்பூர், லக்கிம்பூர், ஜோர்ஹாட் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. திப்ருகரில் புதிய மருத்துவமனை வளாகத்தை இன்று காலை பார்வையிட்ட பிரதமர், இந்த மருத்துவமனையை நாட்டிற்கு அர்ப்பணித்தார். இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக துப்ரி, நல்பாரி, கோல்பாரா, நகோன், சிவசாகர், தீன்சுக்யா, கோலாகாட் ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ள ஏழு புதிய புற்றுநோய் மருத்துவமனைகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். அசாம் ஆளுநர் திரு ஜகதீஷ் முகி, அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர்கள் திரு சர்பானந்த சோனாவால், திரு ராமேஷ்வர் தெலி, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு ரஞ்சன் கோகோய், பிரபல தொழிலதிபர் திரு ரத்தன் டாடா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பண்டிகைகால உணர்வுகளை  ஏற்றுக்கொள்ளும் விதமாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தலைச்சிறந்த புதல்வர்கள் மற்றும் புதல்விகளுக்கு அஞ்சலி செலுத்தி தமது உரையை தொடங்கினார்.  அசாமில் கட்டப்பட்டு இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட புற்றுநோய் மருத்துவமனைகளும், புதிதாக கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவமனைகளும், வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமின்றி தெற்காசியா முழுவதும் சுகாதார சேவை திறன்களை அதிகரிக்கும்  என்றார்.  புற்றுநோய், அசாமில் மட்டுமின்றி வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் பெரும் பிரச்சனையாக உள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், “நமது பரமஏழைகள், நடுத்தர குடும்பங்கள்  இதனால் மோசமாக பாதிக்கப்படுகின்றனர்” என்று தெரிவித்தார். சில ஆண்டுகளுக்கு முன்புவரை புற்றுநோய்க்கு சிகிச்சை பெற நோயாளிகள் பெரிய நகரங்களுக்கு செல்லவேண்டியிருந்ததால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தியது. அசாமில் நீண்டகாலமாக நிலவிவந்த இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக அசாம் முதலமைச்சர் திரு சர்மா, மத்திய அமைச்சர் திரு சோனாவால் ஆகியோரையும் டாடா அறக்கட்டளையையும் பிரதமர் பாராட்டினார். வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கான பிரதமரின் முன் முயற்சி திட்டத்திற்கு, இந்த ஆண்டு பட்ஜெட்டில் 1500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.  இந்த திட்டத்திலும் புற்றுநோய் சிகிச்சைக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டிருப்பதுடன் குவஹாத்தியிலும் இந்த வசதியை ஏற்படுத்த வகை செய்யப்பட்டுள்ளதாக  பிரதமர் மோடி தெரிவித்தார்.

சுகாதார கவனிப்புத் துறைக்கான அரசின் தொலைநோக்கு திட்டம் குறித்து விவரித்த பிரதமர், நோய் என்பது தாமாக  உருவாவதில்லை.  எனவே, நமது அரசு நோய் தடுப்பு சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.  இதற்காக  யோகா, உடல் தகுதி தொடர்பான திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.  ஒருவேளை நோய் ஏற்பட்டால் அதனை தொடக்கத்திலேயே கண்டறிய வேண்டும்.  இதற்காக நாடுமுழுவதும் லட்சக்கணக்கான பரிசோதனை மையங்கள் கட்டப்பட்டுள்ளன.  அடுத்ததாக, மக்கள் முதலுதவி வசதி பெற அவர்களின் வீடுகளுக்கு அருகிலேயே இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  ஆரம்ப சுகாதார மையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.  நான்காவது முயற்சியாக சிறந்த மருத்துவமனையில் கட்டணமின்றி சிகிச்சை பெற ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.  இதன்மூலம் ரூ.5 லட்சம் வரை சிகிச்சைக்காக மத்திய அரசால் வழங்கப்படுகிறது.  என்று பிரதமர் கூறினார். புற்றுநோய் சிகிச்சைக்கு அதிக செலவு என்பது மக்கள் மனங்களில் பெரிய தடையாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.  குடும்பத்தை கடனிலும், சிரமத்திலும் தள்ளிவிடக்கூடாது என்பதற்காக குறிப்பாக பெண்கள் சிகிச்சையை தவிர்க்கிறார்கள்.  எனவே, புற்றுநோய்க்கான பல மருந்துகளின் விலையை ஏறத்தாழ பாதி அளவுக்கு அரசு குறைத்துள்ளது.  இதனால், நோயாளிகளின் ரூ.1,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.  மக்கள் மருந்தக மையங்களில் 900-க்கும் அதிகமான மருந்துகள் குறைந்த விலையில் தற்போது கிடைக்கின்றன என்று அவர் தெரிவித்தார். 

ஆயுஷ்மான் பாரத் மற்றும் நல்வாழ்வு மையங்கள் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதை உறுதி செய்கின்றன.  நாடுமுழுவதும் 15 கோடிக்கும் அதிகமானோர் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று பிரதமர் தெரிவித்தார்.  அசாம் மாநிலத்தில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக அரசை பாராட்டிய பிரதமர், ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி அமைப்பது என்ற மத்திய அரசின் உறுதிமொழியை  செயல்படுத்துவதில் முதலமைச்சரும், அவரது அணியினரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்று குறிப்பிட்டார். 

தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கை சிறக்க மத்திய அரசும், அசாம் மாநில அரசும் நன்கு பணியாற்றி வருகின்றன. தற்போது பொதுமக்களின் நல்வாழ்வு நோக்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.   தற்போதைய நிலையில் கடந்த நூற்றாண்டின் கருத்துக்கள் கைவிடப்பட்டு புதிய போக்குவரத்து தொடர்புகள் உருவாக்கப்படுகின்றன. அசாமில் சாலை, ரயில், விமான போக்குவரத்து விரிவாக்கம் கண்கூடாக தெரிகிறது.  இது ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் கைவிடப்பட்டோர் மற்றும் பழங்குடி சமூகங்களுக்கு புதிய வாய்ப்புகளை  உருவாக்கியுள்ளது.

அசாம் அரசின் அசாம் புற்றுநோய் சிகிச்சை அறக்கட்டளையும், டாடா அறக்கட்டளையும் இணைந்த கூட்டு முயற்சியின் மூலம் தெற்காசியாவின் மிகப்பெரிய குறைந்த செலவிலான புற்றுநோய் சிகிச்சை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  இதற்காக இந்த மாநிலத்தில் பரவலாக  17 புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன.  இந்த திட்டத்தின் முதலாவது கட்டத்தின் 10 மருத்துவமனைகளில் 7 மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.  எஞ்சிய 3 மருத்துவமனைகளின் கட்டுமானம் பல்வேறு நிலைகளில் உள்ளது.  2 –ஆவது கட்டத்தில் 7 புதிய மருத்துவமனைகள் கட்டப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த