இரயில்வே பிரத்யேக சரக்கு வழித்தட திட்டம்
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
சரக்குக் கட்டணங்களை போட்டித்தன்மையுடையதாக மாற்றுவதற்கு பல முயற்சிகள் / நடவடிக்கைகளை இந்திய ரயில்வே எடுத்துள்ளது. தாராளமயமாக்கப்பட்ட தானியங்கி சரக்கு தள்ளுபடி கொள்கை, கட்டண தள்ளுபடி முதலியன இதில் அடங்கும்.
ரயில் சரக்குகளைக் கையாள்வதற்கான கூடுதல் முனையங்களை மேம்படுத்துவதில் தொழில்துறையின் முதலீட்டை அதிகரிக்க, புதிய 'கதி சக்தி பல்முனை சரக்கு முனைய (ஜிசிடி) கொள்கை 15.12.2021 அன்று தொடங்கப்பட்டது. அடுத்த மூன்று நிதியாண்டுகளுக்குள் 100 கதி சக்தி சரக்கு முனையங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சரக்கு சந்தையில் ரயில்வேயின் பங்கை மேம்படுத்தவும், மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்றவும், சரக்கு நடவடிக்கைகளில் விரிவான கணினிமயமாக்கல் போன்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதிக திறன் கொண்ட இன்ஜின்கள் மற்றும் பெட்டிகள், டிராக் மற்றும் சிக்னலில் முன்னேற்றம், புதிய தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நடைமுறைகளை பின்பற்ற பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பயிற்சி போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இரண்டு பிரத்யேக சரக்கு வழித்தடங்களின் கட்டுமானப் பணிகளை ரயில்வே அமைச்சகம் தற்போது மேற்கொண்டுள்ளது. கிழக்கு அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடத்திலும் (1337 கிமீ) மேற்கு அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடத்திலும் (1506 கிமீ) பணிகள் நடைபெற்று வருகின்றன.
கருத்துகள்