ஈஸ்டரை முன்னிட்டு
குடியரசுத் தலைவரின் வாழ்த்து
ஈஸ்டரை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்
"ஈஸ்டர் நன்னாளை முன்னிட்டு அனைத்து மக்கள், குறிப்பாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வழங்கும் கிறித்தவ சமுதாயத்தினருக்கு, எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்பு, தியாகம் மற்றும் மன்னித்தலின் வழியை நாம் பின்பற்ற ஊக்கமளிக்கும் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை கொண்டாடும் பண்டிகையே ஈஸ்டர் ஆகும். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொண்டு ஒட்டுமொத்த மனித குலத்தின் நன்மைக்காக இணைந்து பணியாற்றுவோம்.
ஒற்றுமையின் முக்கியத்துவத்தை நமது மனங்களில் இந்த பண்டிகை மறுபடியும் விதைத்து, நமது நாட்டின் நலன் மற்றும் வளத்திற்கான நமது உறுதிக்கு வலுவூட்டட்டும்," என்று தமது வாழ்த்து செய்தியில் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, குடியரசு துணைத்தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு, நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
வாழ்த்துச் செய்தி வருமாறு :
இயேசுபிரான் உயிர்த்தெழுந்த புனித நாளான ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு எனது அன்பான, நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெறுப்பைவிட அன்பு வலிமை மிக்கது என்பதையும், அதன் மூலம், தீமைகளை வெல்லலாம் என்பதை, புனிதப் பண்டிகையான ஈஸ்டர் மக்களுக்கு நினைவூட்டுகிறது.
மனிதர்கள் அனைவரிடமும் கருணைகாட்டி, ஈஸ்டர் பண்டிகையை நாம் கொண்டாடுவோம். நமது வாழ்வில், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை இந்த நன்னாள் ஏற்படுத்தட்டும்.
கருத்துகள்