முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரதமர்களின் அருங்காட்சியகத்தை நாளை துவக்கி வைக்கும் பிரதமர்

பிரதமர்களின் அருங்காட்சியகத்தை ஏப்ரல் 14 அன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார்

தேசக் கட்டமைப்பை நோக்கிய இந்தியாவின் அனைத்து பிரதமர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்த பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையுடனான கருத்துருவாக்கத்தில் இந்த அருங்காட்சியகம் அமைகிறது

இந்தியாவின் அனைத்து பிரதமர்களுக்கும் புகழ் சேர்ப்பதாக இந்த அருங்காட்சியகம் இருக்கும்; இந்திய பிரதமர்களின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகள் மூலம் சுதந்திரதத்திற்குப் பிந்தைய இந்தியாவின் வரலாற்றை இது எடுத்துரைக்கும்

தேசத்தையும், ஜனநாயகத்தையும் அடையாளப்படுத்தும் வகையில், தர்மசக்கரத்தை இந்திய மக்கள் கைகளில் தாங்கியிருப்பது போல் அருங்காட்சியகத்தின் இலச்சினை இருக்கும்

கலந்துரையாடுவது மற்றும் ஈடுபாட்டுடன் கவனிக்கும் உள்ளடக்கத்தை வழங்க தொழில்நுட்ப அடிப்படையில் அருங்காட்சியகம் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும்பிரதமர்களின் அருங்காட்சியகத்தை (சங்ரஹாலயா) ஏப்ரல் 14 அன்று காலை 11 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி  தொடங்கிவைப்பார்.  சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவின் போது தொடங்கி வைக்கப்படும் இந்த அருங்காட்சியகம், இந்திய பிரதமர்களின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகள் மூலம் சுதந்திரதத்திற்குப் பிந்தைய இந்தியாவின் வரலாற்றை எடுத்துரைக்கும்.

தேசக் கட்டமைப்பை நோக்கிய இந்தியாவின் அனைத்து பிரதமர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்த பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையுடனான கருத்துருவாக்கத்தில் அமையவிருக்கும்  இந்த அருங்காட்சியகம் சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் பிரதமர்களின்  சித்தாந்தம் அல்லது பதவி வகித்த காலத்தைக் கணக்கில் கொள்ளாமல் அனைவருக்கும் புகழ் சேர்ப்பதாக இருக்கும். பிரதமர் திரு நரேந்திர மோடியின்  அனைவரையும் உள்ளடக்கும்  முயற்சியான இது, நமது பிரதமர்கள் அனைவரின் தலைமை, தொலைநோக்குப் பார்வை, சாதனைகள் பற்றி இளம் தலைமுறையினருக்கு தெரிவிப்பதையும்,  ஊக்கப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கும்.

பழமையையும், புதுமையையும் கலந்து பிரதிநிதித்துவம் செய்யும் இந்த அருங்காட்சியகம், பிளாக் -1 என வடிவமைக்கப்பட்ட முந்தைய தீன் மூர்த்தி பவனையும், பிளாக்-2 என வடிவமைக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தையும் இணைப்பதாக இருக்கும். இந்த இரண்டு பிளாக்குகளின் மொத்த பரப்பு, 15,600 சதுர மீட்டராகும்.

இந்த அருங்காட்சியக கட்டடத்தின் வடிவமைப்பு எழுச்சிபெறும் இந்தியாவின் வரலாற்றால் ஈர்க்கப்பட்டு அதன் தலைவர்களின் கைகளால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகும். இதன் வடிவமைப்பு நீடிக்கவல்ல மற்றும் எரிசக்தி சேமிப்பு நடைமுறைகளைக் கொண்டது.  இந்தப் பணியின்போது மரங்கள் எதுவும் வெட்டப்படவில்லை அல்லது வேறு இடத்தில் மாற்றி நடப்படவில்லை. தேசத்தையும், ஜனநாயகத்தையும்  அடையாளப்படுத்தும் வகையில், தர்மசக்கரத்தை இந்திய மக்கள் கைகளில் தாங்கியிருப்பது போல் அருங்காட்சியகத்தின் இலச்சினை இருக்கும்.இந்த அருங்காட்சியகத்துக்கான  தகவல்கள்,  பிரசார் பாரதி,  தூர்தர்ஷன்,  திரைப்படப்பிரிவு, சன்சாத் டிவி, பாதுகாப்பு அமைச்சகம், ஊடக இல்லங்கள் (இந்தியா மற்றும் வெளிநாடு), வெளிநாட்டு செய்தி முகமைகள் போன்ற தரவுகள், தகவல் களஞ்சியங்கள் மூலம் திரட்டப்பட்டவை. பொருத்தமான ஆவணப்பயன்பாடு (தொகுப்பு நூல்கள், இலக்கிய படைப்புகள், முக்கியமான கடிதப் போக்குவரத்துகள்), சில தனிப்பட்ட  பொருட்கள், பரிசுகள் மற்றும்  நினைவுப் பொருட்கள், (பாராட்டுக்கள், கவுரவிப்புகள், விருதுகள், நினைவு அஞ்சல் தலைகள்,  நாணயங்கள் இன்னபிற) பிரதமர்களின் உரைகள், சித்தாந்தங்களின்  பிரதிபலிப்பான  கருத்துக்கள், பிரதமர்களது வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள், மையப்பொருள்களாக இதில் எதிரொலிக்கும்.

உள்ளடகத்தில் பலவகையான விஷயங்களைக் கொண்டுவர நவீன தொழில்நுட்ப அடிப்படையில் இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சுழலும் காட்சி அமைப்பு,  முப்பரிமாண வடிவமைப்பு, மெய்நிகர் காட்சிகள், தொடுதிரைகள்,  பல்வகை ஊடகம், கலந்துரையாடும் அரங்குகள், கணினிமாயமாக்கப்பட்ட இயங்கும் சிற்பங்கள், திறனறி பேசிகளின் (ஸ்மார்ட் ஃபோன்கள்) பயன்பாடுகள் போன்றவற்றுடன் கண்காட்சியின் உள்ளடக்கம், உயர் தொழில்நுட்பம் கொண்டதாக இருக்கும்.

இந்த அருங்காட்சியகத்தில் 43 காட்சிக் கூடங்கள் உள்ளன. விடுதலைப் போராட்டம் குறித்த காட்சி பதிவுகளில் தொடங்கி, அரசியல் சட்டத்தை வடிவமைத்தல் உட்பட நமது பிரதமர்கள் பல்வேறு சவால்களை  எதிர்கொண்டு நாட்டின் அனைத்துவகை முன்னேற்றத்தை எவ்வாறு உறுதி செய்திருக்கிறார்கள் என்ற வரலாற்றை இந்த அருங்காட்சியகம் வெளிப்படுத்தும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...