முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'டாணாக்காரன்' தமிழ் திரைப்படத்தில் பார்த்திராத புதிய களம்

டாணாக்காரன்


சென்னை வாழ் மக்கள் பேச்சில் (காவல்காரன்) திரைப்படம்

டிஸ்னி ஹாட் ஸ்டார். தமிழ் திரைப்படத்தில் பார்த்திராத புதிய களம் படம் பார்க்கும் ஆவலாக.

எல்லோரையும் அடிக்கலாம்,  மாமுல் வாங்கி செட்டிலாகலாம், ஊர்ல பொண்ணு தர்றேன்னு சொன்னாங்கய்யா, ஆர்ப்பாட்டம் நடத்தறவங்களையெல்லாம் சுட்டுத் தள்ளனும்யா, குடும்பத்தைக் காப்பாற்ற, அப்பாவின் ஆசையை நிறைவேற்றி ஒரு நல்ல Police ஆக வாழ என எத்தனையோ காரணங்களுக்காக Police வேலைக்கு வருபவர்கள், காவல் துறை பயிற்சி நிலையத்தில் படும் அவஸ்தையின் பாட்டை மிகவும் நுட்பமாக எடுத்துச் சொல்லும் திரைப்படம்.

Police ஆவதை லட்சியமாக, மற்றும் பெருங் கனவாகக் கொண்ட ஒருவன் நிறைய புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளப் போகிறோம் என்ற பரவசத்துடன் பயிற்சி நிலையத்துக்கு வருகிறான். ஆனால அங்கு அவன் பார்ப்பது நினைத்தற்கு நேரெதிரான காட்சிகளைத் தான். தன் காலில் விழுந்து அடிமையாக இருப்பவனுக்குத் தான் நல்லது நடக்கும். எதிர்த்து நியாயம் கேட்பவன் கடுமையான,கொடுமையான தண்டனைக்கு ஆளாகிச் சாக வேண்டியது தான் என்கிற நிசர்சனம் ஓங்கி அரைத்தபோது, அவன் என்ன செய்கிறான் என்பதை எவ்வளவு அழகாகச் சொல்கிறது இந்தத் திரைப்படம்.

இலஞ்சம்,சக மனிதனை அடிமையாக நடத்துதல்,கேள்வி கேட்க முடியாத இடத்தில் இருப்பவனை உச்சபட்சமாக அவமானப்படுத்துதல், என நமது நாட்டின்,நமது வாழ்வின் ஒரு மாதிரிதானே காவல்துறை பயிற்சி நிலையமும்

82 வருடம் தேர்வாகி ஆட்சி மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களினால் பாதிக்கப்பட்டு,நீதிமன்ற ஆணையால் மிகவும் தாமதமாகப் பணி ஆணை வழங்கப்பட்டு பணியில் சேர்ந்த 40 களில் இருப்பவர்கள், இப்போது தேர்வான இளைஞர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறுவதும், அவமானப்படுவதும்  இயல்பாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

இங்க யாருக்காவது குறையிருக்கா? என்ற அதிகாரியின் கேள்விக்கு, இங்க நிறைய பேர் இருக்கோம். ஆறு டாய்லட் தான் குடுத்துருக்காங்க. இன்னும் நாலு குடுக்கச் சொல்லுங்கய்யா என்று கேட்டதும்,இங்க நீங்க உங்க பொண்டாட்டியோட ஹனிமூனுக்கு வரல. அஞ்சு டாய்லட் குடுங்க என்றதும், அதன் பிறகு யாருக்கும் குறைகளேயில்லாமல் போய் விடுகிறது. இனி நிகழப் போகும் கொடுமைகளை இந்த ஆரம்பக் காட்சி நமக்கு உணர்த்தி விடுகிறது.

அந்த பில்டிங்க நகர்த்தி வையுங்க என்று சொன்னதும் ஒருவனைத் தவிர எல்லோரும் நகர்த்த முயலும் காட்சி,நம்மை  23 வருடங்களுக்குப் பின் நகர்த்தியது தான் உணர்வு.

உயரதிகாரிங்க அந்த மலைய நகர்த்துன்னு சொன்னா,அதெப்படி சார் முடியும்னு எதிர்க் கேள்வி கேட்கக் கூடாது. அதுவே கீழ்படிதல் . சரிங்கய்யான்னு சொல்லிட்டுப் போய் ஒரு டீ சாப்பிட்டு வந்து, அய்யா தள்ளிப் பாத்தங்கய்யா நகர மாட்டேங்குதுன்னு சொல்லணும் என நமக்கு வேண்டிய அலுவலக அதிகாரி ஒருவர் சொன்னது நினைவுக்கு வந்தது.

அதிகாரி உத்தரவுன்னு ஆடு மாடு மேயாமல் இருப்பதற்காகப் போடப்பட்ட கார்டை, மரம் வளர்ந்த பின்னும் மாறாமல் நிற்க வைக்கும் காட்சி, பயிற்சி நிலையத்தின் இறுகிப் போன அபத்தத்தை அவ்வளவு அழகாகச் சொல்கிறது.

என்ன ஆளுகளே? என்று ஜாதியைக் கேட்டு சொல்ல மறுப்பவனை வெறியுடன் தாக்குவது, பயிற்சிக்கு வந்தவர்களை மிருகத்தனமாக அடித்து நொறுக்குவது, தவறு செய்பவர்களுக்கான கொடுந் தண்டனையான  ஒரு மணி ஈடியில் தாக்குப் பிடித்தவனைக் கண்டு அதிர்வது,  பரேடில் உத்தரவுகளைத் தொடர முடியாமல் தடுமாறுவது, தோற்றும் வென்றதாகத் தரப்பட்ட மெடலை குற்றவுணர்வோடு ஏற்றுக் கொள்வது என லால் அசத்துகிறார் என ஒருவரை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது, படத்தின் அத்தனை கதாபாத்திரங்களும் ஒரு சிறு குறையும் சொல்ல முடியாதபடி அத்தனை இயல்பாக அத்தனை சிறப்பாக நடித்து வாழ்ந்திருக்கிறார்கள்.

நீ என் கால ந.......யிருந்தேன்னு வைய்யி,உன்னை எங்கயோ கொண்டு போயிருப்பேன். ஆனா நீ என் முஞ்சிய ந.......ற

ஈஸ்வரமூர்தியும் என் பையனும் நின்னு,       என் பையன் ஜெயிச்சிருந்தாக் கூட நான் ஈஸ்வரமூர்த்தியத்தான் ஜெயிக்க வைப்பேன். ஏன்னா,ஈஸ்வரமமூர்த்திங்கறது ஒரு ஆள் இல்ல. He is part of the system

இப்படி இயல்பான எதார்த்தமான கூர்மையான வசனங்கள்.காட்சிகளை அழுத்தமாக நம்முள் பதிய வைக்கின்றன.

திரைப்படம் முடிந்ததும் ஒரே சமயத்தில் பலர் இது நல்ல படம் என்கிறார்கள் பிறகு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலர் உறக்கம் வராமல் யோசிக்க .படமும் காட்சிகளும் கண்முன்னே நிகழ்ந்து கொண்டேயிருந்தன,

பாலைவனத்தில் ஒற்றை ரோஜா போல ஒரு மெல்லிய காதலும் கதையின் போக்கில் உறுத்தாமல் சொல்லப்பட.

 ஒரு பயிற்சி நிலையத்தில் ஆளையே கொல்லுமளவு இத்தனை கொடுமைகள் நடக்குமா என்ற கேள்வியும் எழாமலில்லை.

படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்,படத்தில் நாயகன் என்று தனியாக யாரையுமே குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்பது தான். நடிகர் விக்ரம் பிரபுவையோ, நடிகர் பாஸ்கரையோ , நடிகர் லாலையோ இன்னும் யாரையோ சொல்லி விட முடியாதபடி அத்தனை பேருக்கும் சரியான பங்கு தரப்பட்டிருப்பதும், அத்தனை பேரும் அந்தப் பாத்திரத்தை மிகச் சரியாகச் செய்திருப்பதும் பாராட்டுக்குரிய அம்சம்.

அதிகம் மலையாளத் திரைப்படங்களைப்  பார்க்கும் போது இப்படி தமிழ்ப்படங்கள் வருவதில்லையே என ஆதங்கமாய் நினைத்த காலங்கள் உண்டு.

வித்தியாசமான ஒரு கதைக்களத்தைத் தேர்வு செய்து நகைச்சுவை, பாடல் காட்சிகள்,சண்டைக் காட்சிகள் என வழக்கமான தமிழ் சினிமாவில் லாஜிக் குறைத்து இவை ஏதுமில்லாமல்,ஒரு காட்சியைக் கூட நீக்க முடியாதபடி அத்தனை இறுக்கமான கட்டமைப்பில் ஒரு நல்ல திரைப்படத்தைத் தந்த படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

தமிழ் திரைப்படத்தில் முக்கியமான இந்தப் படத்தில் சென்னை, விளையாட்டை மையமாகக் கொண்ட படங்களின் வரிசையில் புதிதாக வந்துள்ள படம் டாணாக்காரன். 1997 ஆம் ஆண்டு Police பயிற்சியின் போது நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படத்தை பார்க்கிறவர்களுக்கு நல்ல உணர்வை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்த தமிழ் தான் இந்த திரைப்படத்தை எழுதி, இயக்கியுள்ளார். Potential Studios தயாரித்துள்ள இந்தத் திரைப்படம்  நேரடியாக ஓடிடி.,யில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Police பயிற்சி, அங்கு நடக்கும் பரைடு (Parade) நடக்கும் நிகழ்வுகள், பல வித பிரச்சனைகள், இடைஞ்சல்கள், போராட்டங்களைத் தாண்டி ஒரு இளைஞன் எப்படி Police ஆகிறான் என்பது தான் படத்தின் கதை. காவல் பயிற்சி மையத்தில் ஒரு டீம் தலைவராக ஈஸ்வர மூர்த்தி என்ற பாத்திரத்தில் லால் அசல் police ஆகவே மாறியுள்ளார். மற்றொரு டீமுக்குத் தலைவராக எம்.எஸ்.பாஸ்கரும் நடித்துள்ளார். இத்தனை போராட்டங்களையும் தாண்டி ஹீரோவான நடிகர் விக்ரம் பிரபு கடைசியில் Police ஆகிறாரா இல்லையா என்பது தான் டாணாக்காரன் படத்தின் கதை. இரண்டு Police அணிகள் இடையேயான பரேடில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது தான் படத்தின் கதை.காவல பயிற்சி மையத்தில் என்னவெல்லாம் நடக்கிறது, எப்படி எல்லாம் கடுமையான பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது என்பதை அதன் ஆணி வேரைத் தோண்டியே எடுத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குனர். Police தொடர்பான சின்னச் சின்ன விஷயங்களைக் கூட மிக அழகாக, தெளிவாக தொட்டு சென்றுள்ளார் இயக்குனர். காவல் பயிற்சியின் கடுமையின் உச்சத்தைக் காட்டுவதாக, வயதில் மூத்தவரான ஒருவர் எப்படியும் police ஆக வேண்டும் என்ற வெறியுடன் பயிற்சிக்கு வருகிறார். ஆனால் கடுமையான பயிற்சிகள் காரணமாக அவர் உயிரிழக்கிறார். ஒரு மெல்லிய சோகம், ட்விஸ்ட் ஆகியவற்றுடன் இடைவைளை இதற்கிடையில் இத்தனை கஷ்டங்களையும் தாண்டி police ஆக வேண்டும் என நடிகர் விக்ரம் பிரபு ஏன் விடாபிடியாக இருக்கிறார் என்பதற்கு ஒரு  ஃபிளாஷ்பேக் லிவிங்ஸ்டன் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் மிக அழுத்தமான நடிப்பை வெளியிப்படுத்துகிறார். அஞ்சலி நாயரும் காக்கிச் சட்டையில் தனக்கு கீழ் உள்ளவர்களை உருட்டி மிரட்டும் காட்சிகளில் க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்ட திரைப்படமாக இருந்தாலும் ED (EXTRA DRILL) என்ற விஷயத்தை மிக அழுத்தமாக, தெள்ள தெளிவாக காட்டியுள்ளார் இயக்குனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த