விரைவு சக்தி சரக்கு முனையங்கள்
இரயில் சரக்குகளை கையாளுவதற்கு கூடுதல் முனையங்களை உருவாக்குவதில், தொழில் துறையிடம் இருந்து முதலீட்டை ஊக்குவிப்பதற்காக, புதிய விரைவுசக்தி பன்மாதிரி முனைய கொள்கை 15.12.2021 அன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முனையங்களை ஏற்படுத்துவதற்கான இடங்கள் தேவையின் அடிப்படையிலும், சரக்கு போக்குவரத்து அதிகமாக உள்ள இடங்களிலும் கண்டறியப்பட்டுள்ளன.
இதுவரை இத்தகைய ஆறு முனையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 74 இடங்கள் இந்த முனையங்களை அமைப்பதற்காக கண்டறியப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் 3 இடங்களில் முனையங்கள் அமையவுள்ளன.
அடுத்த 3 நிதியாண்டுகளுக்குள் 100 சரக்கு முனையங்களை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இதனைத் தெரிவித்தார்.
கருத்துகள்