தருமபுரம் ஆதீன அருங்காட்சியகம் மற்றும் ஞானரத யாத்திரையுடன் பவள விழா அரங்கத்தையும் தமிழ்நாடு ஆளுநர் துவங்கி வைக்கிறார்
திருக்கயிலாய பரம்பரைத் தருமபுரம் ஆதீன மடத்தின் பழமை பேசும் பல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் ஞானரத யாத்திரையுடன் பவள விழா அரங்கத்தையும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தருமை குருமகா சந்நிதானம் முன்னிலையில் துவங்கி வைக்கிறார் தருமையாதீன அருங்காட்சியகம்
தமிழர்களின் தொன்மையைப் பழமையைப் பறைசாற்றும் வகையில் தருமாபுரம் ஆதீனத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்டைய பொருட்கள் அடங்கிய அருங்காட்சியகம், மூன்றாம் நூற்றாண்டுகள் தொடங்கி பழமையான இசைக் கருவிகள் பல்லக்குகள், சிலைகள் சுடு மண்ணால் செய்யப்பட்ட நாதசுரம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன,
மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில், 16 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பழமையான சைவ ஆதீனத் திருமடம் பல நூற்றாண்டுகளாகப் பழமை வாய்ந்த பொருட்கள் உள்ளன. மாநிலத்தில் பண்டைய பொருட்கள் அருங்காட்சியகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தில் இதற்கு முந்தைய ஆதீனங்கள் பயன்படுத்திய பொருட்கள், வெள்ளி தந்தப் பல்லக்குகள், தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்திய 60 க்கும் மேற்பட்ட பழமையான வாத்திய இன்னிசைக் கருவிகள், தற்போது வழக்கத்திலில்லாத சாரங்கி, பிடிவீணை உள்ளிட்டவை, டி மண்ணால் செய்யப்பட்ட நாதஸ்வரம், சுருதி இசைக்கருவி, பலவகை தேர்ச் சிற்பங்கள், கலம்காரி வகை ஓவியங்கள், பல நூற்றாண்டுகள் பழமையான ஐம்பொன்னால் செய்யப்பட்ட சிலைகள், வெள்ளியினால் செய்யப்பட்ட குடங்கள் உள்ளிட்ட பல்வேறு வகை பயன்பாட்டுப் பொருட்கள் ஆகிய மூன்றாம் நூற்றாண்டு துவங்கி பயன்பாடுகளில் இருந்த பழமையான பொருட்கள் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் வி.என்.ரவி இதைத் திறந்து வைக்க உள்ள நிலையில், செய்தியாளர்களுக்கு அருங்காட்சியகத்தை விளக்கிக் கூறி, பழமையான இசைக் கருவிகளை தருமபுர ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வாசித்துக் காண்பித்தார்.
தமிழர்களின் பண்டைய நாகரிகத்தை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகளுக்கு இது ஒர் அரிய பொக்கிஷமாக விளங்கும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.தருமபுரம் ஆதீனம் (அ) தருமை ஆதீனம் என்பது சைவ மடங்களுள் ஒன்று தமிழ்நாட்டில் மயிலாடுதுறையிலுள்ளது. 1987 ஆம் ஆண்டு சுமார் 27 சிவாலயங்கள் இதனுடைய கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன.
சமயம் சார்ந்த பணிகளோடு, மயிலாடுதுறையில் மகப்பேறு நிலையம் சிங்கிப்பட்டி காசநோய் மருத்துவமனை, அடையார் புற்றுநோய் மருத்துவமனை( அடையாறு கான்சர் இன்ஸ்டிடியூட்) போன்ற பொது நிறுவனங்களுக்குப் பெருந்தொகை வழங்கியும், ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்க கட்டண உதவி புரிந்தும் சமூகப் பணிகளிலும் ஈடுபடுகிறது.
ஞானசம்பந்தம் என்ற மாத இதழையும் வெளியிடுகிறத தருமபுர ஆதீன பரம்பரையைத் 'திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம்' எனப் போற்றுகின்றனர்.
இதன் பரம்பரையில் வரும் முதல் நால்வரைப் அகச் சந்தான குரவரென்றும் கயிலாயவாசிகள் எனவும் இப்பரம்பரை அகச் சந்தான குரவர் புறச் சந்தானக் குரவர் மற்றும் சந்தானக் குரவர் என வரிசைப்படுத்தப்படுகிறது. இச் சூழ்நிலையில் ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்வானது நடக்கிறது .
தருமபுரம் ஆதீன நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் கலந்துகொள்ள எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், வி.சி கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழர் உரிமை இயக்கம்,உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கறுப்பு கொடி காட்டி போராட்டம் நடந்தது.
தருமபுர ஆதீன மடத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். ஆதின மடம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கறுப்புக்கொடி காட்ட முயன்ற 150 பேரைக் கைது செய்தனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றதில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய. தனது மனைவி லட்சுமியுடன் கோவிலுக்கு வந்தவருக்கு
கோவில் வாயிலில் தீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். பின்னர் மேள, தாளங்கள் முழங்க மாலை அணிவித்து கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். இன்று தருமபுர ஆதீனத்தின் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து தருமபுர ஆதீனத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
அதனை அடுத்து தருமபுர ஆதீனத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை ஆளுநர் திறந்து வைத்தார். கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதினம் மடாதிபதி மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றுப் பேசினார்கள். தொடர்ந்து தர்மபுர ஆதீனம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கரம் விழாவில் பங்கேற்பதற்கான யாத்திரையை ஆளுநர் துவக்கி வைத்தார்.
ஆளுநர் வருகையை முன்னிட்டு 1850 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள புஷ்கர விழாவில் பங்கேற்க மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தொன்மைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானம் இன்று ஞானரத யாத்திரை புறப்படுகிறார்.
இந்த யாத்திரையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடக்கி வைக்க வருகை புரிந்தார்.ஆளுநர் வருகைக்கு எதிராக மயிலாடுதுறையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திய 150 பேர் கைது செய்யப்பட்டனர். கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
வேனை வைத்து மறித்து கறுப்பு கொடி காட்ட விடாமல் தடுத்தையடுத்து ஆளுநரின் கார் கடந்து சென்றது. இதனையடுத்து ஆத்திரத்தில் கறுப்புக்கொடியை சாலைகளில் வீசினர். அதனை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அங்கு அவர் சாமி தரிசனம் செய்தார். பின்னர் தரிசனம் முடிந்த பிறகு கவர்னருக்கு தீட்சிதர்கள் பிரசாதங்கள் வழங்கியதையடுத்து கோவிலுக்குள்லுள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் சன்னதிக்கு சென்ற ஆளுநர் ரவி அங்கும் சாமி தரிசனம் செய்தார்.
கோவில் வாயிலில் தீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். பின்னர் மேள, தாளங்கள் முழங்க மாலை அணிவித்து கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். இன்று தருமபுர ஆதீனத்தின் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து தருமபுர ஆதீனத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
அதனை அடுத்து தருமபுர ஆதீனத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை ஆளுநர் திறந்து வைத்தார். கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதினம் மடாதிபதி மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றுப் பேசினார்கள். தொடர்ந்து தர்மபுர ஆதீனம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கரம் விழாவில் பங்கேற்பதற்கான யாத்திரையை ஆளுநர் துவக்கி வைத்தார்.
ஆளுநர் வருகையை முன்னிட்டு 1850 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள புஷ்கர விழாவில் பங்கேற்க மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தொன்மைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானம் இன்று ஞானரத யாத்திரை புறப்படுகிறார்.
இந்த யாத்திரையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடக்கி வைக்க வருகை புரிந்தார்.ஆளுநர் வருகைக்கு எதிராக மயிலாடுதுறையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திய 150 பேர் கைது செய்யப்பட்டனர். கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
வேனை வைத்து மறித்து கறுப்பு கொடி காட்ட விடாமல் தடுத்தையடுத்து ஆளுநரின் கார் கடந்து சென்றது. இதனையடுத்து ஆத்திரத்தில் கறுப்புக்கொடியை சாலைகளில் வீசினர். அதனை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அங்கு அவர் சாமி தரிசனம் செய்தார். பின்னர் தரிசனம் முடிந்த பிறகு கவர்னருக்கு தீட்சிதர்கள் பிரசாதங்கள் வழங்கியதையடுத்து கோவிலுக்குள்லுள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் சன்னதிக்கு சென்ற ஆளுநர் ரவி அங்கும் சாமி தரிசனம் செய்தார்.
கருத்துகள்