நாகப்பட்டினத்தில் கஞ்சா கடத்தும் கும்பலுடன் பிரியாணி காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
கஞ்சா கடத்தும் கும்பலுடன் பிரியாணி காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.
நாகப்பட்டினத்தில் பல கோடி ரூ மதிப்பு கஞ்சா வழக்கில் கைதான கஞ்சா வியாபாரி வீட்டில் சோதனை நடத்திய நாகப்பட்டினம் நகர காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி, அதே கும்பலோடு அமர்ந்து பிரியாணி சாப்பிடும் புகைப்படம் வெளியாகி வைரலாக அது தற்போது சர்ச்சையான நிலையில் சில மாதங்களாக கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தும் குற்ற செயல்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெறுவதாகவும் இதனால் ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட கஞ்சா பொட்டலங்கள், விசைப்படகு மூலம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தவிருப்பதாக நாகப்பட்டினம் தனிப்படை காவல்துறையினருக்கு
ரகசியத் தகவல் வந்ததைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு நாகப்பட்டினம் துறைமுகத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட காவல்துறை சார்பு ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படையினர் நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள நானூறு கிலோ கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்ததுடன்.
கடத்தலில் தொடர்புடைய அக்கரைப்பேட்டை விசைப்படகு உரிமையாளர் மோகன், சிலம்பரசன், நிவாஸ், கீச்சாங்குப்பம் ஜெகதீசன், பாப்பாகோவில் சரவணன் உள்ளிட்ட ஐந்து பேரைப் பிடித்த தனிப்படை காவல்துறை கைது செய்த நிலையில் சிறையிலிருக்கும் இலங்கைக்கு கஞ்சா கடத்தும் கும்பலின் தலைவன் சிலம்பரசன் வீட்டில்
நாகப்பட்டினம் நகர காவல் ஆய்வாளர் பெரியசாமி தலைமயிலான சிறப்பு தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டதில் சிலம்பரசன் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது குறித்த சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும், தகவல் வந்த நிலையில் தற்போது கஞ்சா கடத்தல் கும்பலோடு காவல்துறை ஆய்வாளர் பிரியாணி சாப்பிடும் புகைப்படம் வெளியாகி வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சா கடத்தல் வழக்கில் சிறையிலிருக்கும் முக்கியக் குற்றவாளியான சிலம்பரசன் நண்பர்களோடு காவல் உடை அணிந்த நாகப்பட்டினம் நகர காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி பிரியாணி விருந்தில் பங்கேற்றுள்ளார். அதற்கு உடனடியாக நடவடிக்கை
காவல் ஆய்வாளர் பெரியசாமியை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கருத்துகள்