நடிகர் சூரியின் மோசடிப் புகாரில் காவல்துறை ஓய்வு அதிகாரி ரமேஷ் குடவாலாவுக்கு சம்மன். சென்னை சிறுசேரி பகுதியில் நிலம் வாங்கி தருவதாக கூறி தன்னிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ஆகியோர் மீது நடிகர் சூரி புகார் அதை விஷ்ணு விஷால் மறுத்திருக்கிறார்.
2015 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த 'வீர தீர சூரன்' என்ற திரைப்படத்தில் நடிக்க நடிகர் சூரியும் ஒப்பந்தம் செய்தனர். அந்தப் படத்தில் அவருக்கு 40 லட்ச ரூபாய் சம்பள பாக்கியுள்ளதாக நடிகர் சூரி தரப்பு தகவல்.
உள்ள நிலையில், திரைப்படத் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும் விஷாலின் தந்தையான காவல்துறையில் பணியாற்றிய வட மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ரமேஷ் குடவாலாவும் நடிகர் சூரியை அணுகி, மேலும் 2.70 கோடி ரூபாய் கொடுத்தால் நிலம் வாங்கித்தருவதாகக் கூறியதன்படி நடிகர் சூரி பணம் கொடுத்ததாகவும், ஆனால் நிலம் ஏவாங்கித்தரவில்லை என்பதால் பணத்தைத் திரும்பக் கேட்டபோது, நாற்பது லட்ச ரூபாய் மட்டுமே தந்துவிட்டு, ரூ. 2.70 கோடியை தரவில்லை என நடிகர் சூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக 2018 ஆம் ஆண்டு நடிகர் சூரி சென்னை அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயன்றதாகவும் அது முடியாததால், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடிகர் சூரியின் புகாரைப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டதற்குப் பின்னர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த நடிகர் சூரி புகாரின் அடிப்படையில் அடையாறு காவல்நிலையத்தில் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், ரமேஷ் குடவாலா ஆகியோர் மீது 406, 420, 465, 468, 471 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
ஆனால், அப்போது நடிகர் சூரியின் புகார் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்தார்.
இதற்காக அறிக்கை வெளியிட்டிருக்கும் நடிகர் விஷ்ணு விஷால், "என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பற்றிப் படித்த போது மிகுந்த அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது.
உண்மையில் சூரி தான், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸுக்கு ஒரு அட்வான்ஸ் பணத்தைத் திரும்பத் தர வேண்டும். "கவரிமான் பரம்பரை" என்ற படத்திற்காக 2017 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட பணமது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. சட்டத்தின் மீதும் நீதித் துறையின் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. எல்லாம் தெளிவான பிறகு சட்டப்படி சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன்" என்று கூறினார்.
2009 ஆம் ஆண்டில் வெளியான வெண்ணிலா கபடிக் குழு திரைப்படத்தின் மூலம் தான் விஷ்ணு விஷாலும், நடிகர் சூரியும் அறிமுகமாகினர். விஷ்ணு விஷால், தமிழ்நாடு காவல்துறை ADGP ரமேஷ் குடவ்லா-வின் மகன் எம்.பி.ஏ முடித்தவர், TNCA லீக் ஆட்டங்களில் விளையாடி, ஒரு கிரிக்கெட் வீரராக இருந்த போது ஒரு காலில் காயம் ஏற்ப்படவே கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. பின்னர் திரைப்பட நடிகரானார். அதற்குப் பிறகு, குள்ளநரிக் கூட்டம், கதாநாயகன், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் ஆகிய படங்களில் சூரியும் இவரும் ஒன்றாகவே நடித்தனர்
நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா, தமிழக காவல்துறையில் டிஜிபி அந்தஸ்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். காவல்துறையில் உயர் பொறுப்பில் இருந்ததால் அவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கத் தயங்கியதாக நடிகர் சூரி தரப்பில் கூறப்படுவதைத் தொடர்ந்தே அவர் நீதிமன்றத்தை அணுகியிருப்பதாக அவரது தரப்பு கூறுகிறது.
சென்னை அடையாறு காவல் நிலையத்தில் நடிகர் சூரி புகார் அளித்த பின்னர், தன்னுடைய புகார் குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி விசாரணையை, சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம், கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளதால் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி ஆறு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது..மொத்தம் ரூ.2.70 கோடி பெற்றுக்கொண்டு தம்மை ஏமாற்றிவிட்டதாக சூரி எழுப்பியுள்ள புகாரை ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ரமேஷ் குடவாலா மறுத்துள்ளார்.
புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி ஆறு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து நடிகர் சூரியிடம் இரண்டு முறை விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள், தேவைப்பட்டால் மீண்டும் அழைப்பதாகக் கூறியுள்ளனர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள மத்திய குற்றப்பிரிவில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
இந்த விசாரணையில் வழக்கு தொடர்பாக கேட்கப்பட்ட 110 கேள்விகளுக்கு நடிகர் சூரி பதிலளித்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. மேலும், நடிகர் சூரி குறிப்பிட்ட சிறுசேரி பகுதிக்குச் சென்று காவல்துறை விசாரணை மேற்கொண்டதாகத் தெரிகிறது.
, நடிகர் சூரிக்குத் தர வேண்டிய தொகையில் ரூ.1.30 கோடி ஏற்கெனவே கொடுக்கப்பட்டு விட்டதாகவும் மீதமுள்ள தொகை ரூ.1.40 கோடிதான் என்றும் கூறப்படும் சூழ்நிலையில் அடுத்த கட்டமாக முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா, அன்புவேல் ராஜன் ஆகிய இருவரிடமும் விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல்..
கருத்துகள்