முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடிகர் சூரியின் மோசடிப் புகாரில் காவல்துறை ஓய்வு அதிகாரி ரமேஷ் குடவாலாவுக்கு சம்மன்

நடிகர் சூரியின் மோசடிப் புகாரில் காவல்துறை ஓய்வு அதிகாரி ரமேஷ் குடவாலாவுக்கு சம்மன். சென்னை சிறுசேரி பகுதியில் நிலம் வாங்கி தருவதாக கூறி தன்னிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ஆகியோர் மீது நடிகர் சூரி புகார் அதை விஷ்ணு விஷால் மறுத்திருக்கிறார்.

2015 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த  'வீர தீர சூரன்' என்ற திரைப்படத்தில் நடிக்க நடிகர் சூரியும் ஒப்பந்தம் செய்தனர். அந்தப் படத்தில் அவருக்கு 40 லட்ச ரூபாய் சம்பள பாக்கியுள்ளதாக நடிகர் சூரி தரப்பு தகவல்.

 உள்ள நிலையில், திரைப்படத் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும் விஷாலின் தந்தையான காவல்துறையில் பணியாற்றிய வட மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ரமேஷ் குடவாலாவும்  நடிகர் சூரியை அணுகி, மேலும் 2.70 கோடி ரூபாய் கொடுத்தால் நிலம் வாங்கித்தருவதாகக் கூறியதன்படி நடிகர் சூரி பணம் கொடுத்ததாகவும், ஆனால் நிலம் ஏவாங்கித்தரவில்லை என்பதால் பணத்தைத் திரும்பக் கேட்டபோது, நாற்பது லட்ச ரூபாய் மட்டுமே தந்துவிட்டு, ரூ. 2.70 கோடியை தரவில்லை என நடிகர் சூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக 2018 ஆம் ஆண்டு நடிகர் சூரி சென்னை அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயன்றதாகவும் அது முடியாததால், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடிகர் சூரியின் புகாரைப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டதற்குப் பின்னர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த நடிகர் சூரி  புகாரின் அடிப்படையில் அடையாறு காவல்நிலையத்தில் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், ரமேஷ் குடவாலா ஆகியோர் மீது 406, 420, 465, 468, 471 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

ஆனால், அப்போது நடிகர் சூரியின் புகார் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்தார்.

இதற்காக அறிக்கை  வெளியிட்டிருக்கும் நடிகர் விஷ்ணு விஷால், "என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பற்றிப் படித்த போது மிகுந்த அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது.

உண்மையில் சூரி தான், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸுக்கு ஒரு அட்வான்ஸ் பணத்தைத் திரும்பத் தர வேண்டும். "கவரிமான் பரம்பரை" என்ற படத்திற்காக 2017 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட பணமது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. சட்டத்தின் மீதும் நீதித் துறையின் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. எல்லாம் தெளிவான பிறகு சட்டப்படி சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன்" என்று கூறினார்.

2009 ஆம் ஆண்டில் வெளியான வெண்ணிலா கபடிக் குழு திரைப்படத்தின் மூலம் தான் விஷ்ணு விஷாலும், நடிகர் சூரியும் அறிமுகமாகினர். விஷ்ணு விஷால், தமிழ்நாடு காவல்துறை ADGP ரமேஷ் குடவ்லா-வின் மகன் எம்.பி.ஏ முடித்தவர்,  TNCA லீக் ஆட்டங்களில் விளையாடி, ஒரு கிரிக்கெட் வீரராக இருந்த போது ஒரு காலில் காயம்  ஏற்ப்படவே கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. பின்னர் திரைப்பட நடிகரானார். அதற்குப் பிறகு, குள்ளநரிக் கூட்டம், கதாநாயகன், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் ஆகிய படங்களில் சூரியும் இவரும் ஒன்றாகவே நடித்தனர் 

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா, தமிழக காவல்துறையில்  டிஜிபி அந்தஸ்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். காவல்துறையில் உயர் பொறுப்பில் இருந்ததால் அவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கத் தயங்கியதாக நடிகர் சூரி தரப்பில் கூறப்படுவதைத் தொடர்ந்தே அவர் நீதிமன்றத்தை அணுகியிருப்பதாக அவரது தரப்பு கூறுகிறது.     




    சென்னை அடையாறு காவல் நிலையத்தில் நடிகர் சூரி புகார் அளித்த  பின்னர், தன்னுடைய புகார் குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி விசாரணையை, சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம், கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளதால் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி ஆறு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது..மொத்­தம் ரூ.2.70 கோடி பெற்­றுக்­கொண்டு தம்மை ஏமாற்­றி­விட்­ட­தாக சூரி எழுப்­பி­யுள்ள புகாரை ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ரமேஷ் குட­வாலா மறுத்­துள்­ளார்.

 புகார் தொடர்­பாக சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு காவல்­து­றை­யி­னர் உரிய விசா­ரணை நடத்தி ஆறு மாதங்­க­ளுக்­குள் அறிக்கை தாக்­கல் செய்ய சென்னை உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டதை­ய­டுத்து நடிகர் சூரி­யி­டம் இரண்­டு முறை விசா­ரணை நடத்­திய காவல்­துறை அதி­கா­ரி­கள், தேவைப்­பட்­டால் மீண்­டும் அழைப்­ப­தா­கக் கூறி­யுள்­ள­னர்.   சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள மத்திய குற்றப்பிரிவில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.





இந்த விசாரணையில் வழக்கு தொடர்பாக கேட்கப்பட்ட 110 கேள்விகளுக்கு நடிகர் சூரி பதிலளித்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.  மேலும், நடிகர் சூரி குறிப்­பிட்ட சிறு­சேரி பகு­திக்­குச் சென்று காவல்துறை விசா­ரணை மேற்­கொண்­ட­தா­கத் தெரி­கிறது.

, நடிகர் சூரிக்குத் தர வேண்­டிய தொகை­யில் ரூ.1.30 கோடி ஏற்­கெ­னவே கொடுக்­கப்­பட்டு­ விட்­ட­தா­க­வும் மீத­முள்ள தொகை ரூ.1.40 கோடி­தான் என்­றும் கூறப்படும் சூழ்நிலையில் அடுத்த ­கட்­ட­மாக முன்­னாள் டிஜிபி ரமேஷ் குட­வாலா, அன்­பு­வேல் ராஜன் ஆகிய இரு­வ­ரி­ட­மும் விரி­வான விசா­ரணை நடத்­தப்­பட உள்­ள­தாக காவல்­துறை தரப்­பில் தகவல்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த