முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

துடிப்புமிக்க ஜனநாயகம் சுதந்திரமான, அச்சமற்ற பத்திரிகை இல்லாமல் வாழ முடியாது: குடியரசுத் துணைத் தலைவர்

ஒரு வலுவான, துடிப்புமிக்க ஜனநாயகம் சுதந்திரமான, அச்சமற்ற பத்திரிகை இல்லாமல் வாழ முடியாது: குடியரசுத் துணைத் தலைவர்

சுதந்திரமான, தடையற்ற மற்றும் அச்சமற்ற பத்திரிகை இல்லாமல் வலுவான மற்றும் துடிப்பான ஜனநாயகம் வாழ முடியாது என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தினார். ஜனநாயகத்தின் வேர்களை வலுப்படுத்த நாட்டிற்கு ஒரு வலுவான, சுதந்திரமான, துடிப்பான ஊடகம் தேவை என்று பரிந்துரைத்த திரு நாயுடு, ஊடகங்களின்  மதிப்புகள் சிதைவது குருத்து எச்சரித்தார். பாரபட்சமற்ற மற்றும்  நடுநிலையான செய்திகளை வெளியிட அழைப்பு விடுத்தார்". 'செய்திகளில் சொந்தக் கருத்துகள் இடம் பெறக்கூடாது' என்று அவர் வலியுறுத்தினார்.

பத்திரிகையாளர் சங்கத்தின் 50-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், பெங்களூரு பிரஸ் கிளப்பில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், சுதந்திரமான மற்றும் நியாயமான பத்திரிகை, அரசியலமைப்பு சட்டத்தை வலுப்படுத்துவதற்கு உதவிடும் போது, சுதந்திரமான நீதித்துறையை நிறைவு செய்கிறது என்பதைக் கவனித்தார்.

கடந்த காலங்களில், இதழியல் தொழில்  புனிதமான பணியாக பத்திரிக்கை கருதப்பட்டதாக  குறிப்பிட்ட திரு நாயுடு, நல்ல பத்திரிகை நிகழ்வுகளை பாரபட்சமற்ற மற்றும் உண்மையாக செய்திகளை வெளியிடுவதையும், அவற்றை மக்களுக்கு நம்பகத்தன்மையுடன் அனுப்புவதையும் சார்ந்துள்ளது என்ற உண்மையை அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில், இதழியல் தொழில்  புனிதமான பணியாக பத்திரிக்கை கருதப்பட்டதாக  குறிப்பிட்ட திரு நாயுடு, நல்ல பத்திரிகை நிகழ்வுகளை பாரபட்சமற்ற மற்றும் உண்மையாக செய்திகளை வெளியிடுவதையும், அவற்றை மக்களுக்கு நம்பகத்தன்மையுடன் அனுப்புவதையும் சார்ந்துள்ளது என்ற உண்மையை அவர் சுட்டிக்காட்டினார்.

பழம்பெரும் செய்தி ஆசிரியர்களானகாசா சுப்பாராவ், ஃபிராங்க் மோரேஸ் மற்றும் நிகில் சக்ரவர்த்தி போன்றவர்களை பற்றிக் குறிப்பிட்ட குடியரசுத்துணைதலைவர், அவர்கள் ஒருபோதும் தங்கள் கருத்துக்கு வண்ணம் தீட்டவில்லை என்றும், செய்திகளுக்கும் கருத்துகளுக்கும் இடையே  உள்ள  லக்ஷ்மண் ரேகையை தாம் எப்போதும் மதிப்பதாகவும் அவர் கூறினார். சுதந்திரப் போராட்டக் காலத்திலும், அவசர நிலைக் காலத்திலும் மகத்தான பங்களிப்பை அளித்த  பத்திரிகைத் துறை ஆசிரியர்களிடம் இருந்து  செய்தி வல்லுநர்கள் உத்வேகம் பெற வேண்டும் என்று அவர் ஆலோசனை கூறினார்.


செய்திகள் கருத்துத் திணிப்புடன் இருக்கக் கூடாது என்று வலியுறுத்திய அவர், ஊடகவியலாளர்கள் உண்மைகளை ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள வேண்டாம் என்றும், அச்சமோ தயக்கமோ இல்லாமல் அவற்றை எப்போதும் முன்வைக்க வேண்டுமென்றும் அவர்  அறிவுறுத்தினார்.

பல ஆண்டுகளாக பத்திரிகைகளின் தரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்து கவலைவெளியிட்ட திரு நாயுடு, அண்மை காலமாக சமூக ஊடகங்களின் எழுச்சி மேலும் சேறும் சகதியுமாக உள்ளது என்றார். “இன்று, செய்திகள் தொடர்ந்து கருத்து திணிப்புடன்  இணைந்திருப்பதைக் காண்கிறோம். சில நேரங்களில் செய்தித்தாள்களோ அல்லது தொலைக்காட்சி சேனல்களோ சில நிகழ்வுகளின் துல்லியமான காட்சிகளை  வழங்க முடியாததை  உணர முடிவதாக  அவர் மேலும் கூறினார். சமூக ஊடகங்களில் வரும் போலிச் செய்திகள் குறித்து நாடாளுமன்றமும் அரசாங்கமும் ஆய்வு செய்து, அவற்றைக் கையாள்வதற்கான பயனுள்ள மற்றும் நம்பகமான வழிமுறைகளை  கொண்டு வர வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்