முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

துடிப்புமிக்க ஜனநாயகம் சுதந்திரமான, அச்சமற்ற பத்திரிகை இல்லாமல் வாழ முடியாது: குடியரசுத் துணைத் தலைவர்

ஒரு வலுவான, துடிப்புமிக்க ஜனநாயகம் சுதந்திரமான, அச்சமற்ற பத்திரிகை இல்லாமல் வாழ முடியாது: குடியரசுத் துணைத் தலைவர்

சுதந்திரமான, தடையற்ற மற்றும் அச்சமற்ற பத்திரிகை இல்லாமல் வலுவான மற்றும் துடிப்பான ஜனநாயகம் வாழ முடியாது என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தினார். ஜனநாயகத்தின் வேர்களை வலுப்படுத்த நாட்டிற்கு ஒரு வலுவான, சுதந்திரமான, துடிப்பான ஊடகம் தேவை என்று பரிந்துரைத்த திரு நாயுடு, ஊடகங்களின்  மதிப்புகள் சிதைவது குருத்து எச்சரித்தார். பாரபட்சமற்ற மற்றும்  நடுநிலையான செய்திகளை வெளியிட அழைப்பு விடுத்தார்". 'செய்திகளில் சொந்தக் கருத்துகள் இடம் பெறக்கூடாது' என்று அவர் வலியுறுத்தினார்.

பத்திரிகையாளர் சங்கத்தின் 50-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், பெங்களூரு பிரஸ் கிளப்பில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், சுதந்திரமான மற்றும் நியாயமான பத்திரிகை, அரசியலமைப்பு சட்டத்தை வலுப்படுத்துவதற்கு உதவிடும் போது, சுதந்திரமான நீதித்துறையை நிறைவு செய்கிறது என்பதைக் கவனித்தார்.

கடந்த காலங்களில், இதழியல் தொழில்  புனிதமான பணியாக பத்திரிக்கை கருதப்பட்டதாக  குறிப்பிட்ட திரு நாயுடு, நல்ல பத்திரிகை நிகழ்வுகளை பாரபட்சமற்ற மற்றும் உண்மையாக செய்திகளை வெளியிடுவதையும், அவற்றை மக்களுக்கு நம்பகத்தன்மையுடன் அனுப்புவதையும் சார்ந்துள்ளது என்ற உண்மையை அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில், இதழியல் தொழில்  புனிதமான பணியாக பத்திரிக்கை கருதப்பட்டதாக  குறிப்பிட்ட திரு நாயுடு, நல்ல பத்திரிகை நிகழ்வுகளை பாரபட்சமற்ற மற்றும் உண்மையாக செய்திகளை வெளியிடுவதையும், அவற்றை மக்களுக்கு நம்பகத்தன்மையுடன் அனுப்புவதையும் சார்ந்துள்ளது என்ற உண்மையை அவர் சுட்டிக்காட்டினார்.

பழம்பெரும் செய்தி ஆசிரியர்களானகாசா சுப்பாராவ், ஃபிராங்க் மோரேஸ் மற்றும் நிகில் சக்ரவர்த்தி போன்றவர்களை பற்றிக் குறிப்பிட்ட குடியரசுத்துணைதலைவர், அவர்கள் ஒருபோதும் தங்கள் கருத்துக்கு வண்ணம் தீட்டவில்லை என்றும், செய்திகளுக்கும் கருத்துகளுக்கும் இடையே  உள்ள  லக்ஷ்மண் ரேகையை தாம் எப்போதும் மதிப்பதாகவும் அவர் கூறினார். சுதந்திரப் போராட்டக் காலத்திலும், அவசர நிலைக் காலத்திலும் மகத்தான பங்களிப்பை அளித்த  பத்திரிகைத் துறை ஆசிரியர்களிடம் இருந்து  செய்தி வல்லுநர்கள் உத்வேகம் பெற வேண்டும் என்று அவர் ஆலோசனை கூறினார்.


செய்திகள் கருத்துத் திணிப்புடன் இருக்கக் கூடாது என்று வலியுறுத்திய அவர், ஊடகவியலாளர்கள் உண்மைகளை ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள வேண்டாம் என்றும், அச்சமோ தயக்கமோ இல்லாமல் அவற்றை எப்போதும் முன்வைக்க வேண்டுமென்றும் அவர்  அறிவுறுத்தினார்.

பல ஆண்டுகளாக பத்திரிகைகளின் தரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்து கவலைவெளியிட்ட திரு நாயுடு, அண்மை காலமாக சமூக ஊடகங்களின் எழுச்சி மேலும் சேறும் சகதியுமாக உள்ளது என்றார். “இன்று, செய்திகள் தொடர்ந்து கருத்து திணிப்புடன்  இணைந்திருப்பதைக் காண்கிறோம். சில நேரங்களில் செய்தித்தாள்களோ அல்லது தொலைக்காட்சி சேனல்களோ சில நிகழ்வுகளின் துல்லியமான காட்சிகளை  வழங்க முடியாததை  உணர முடிவதாக  அவர் மேலும் கூறினார். சமூக ஊடகங்களில் வரும் போலிச் செய்திகள் குறித்து நாடாளுமன்றமும் அரசாங்கமும் ஆய்வு செய்து, அவற்றைக் கையாள்வதற்கான பயனுள்ள மற்றும் நம்பகமான வழிமுறைகளை  கொண்டு வர வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...