தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி, கடந்த சட்டமன்றக் கூட்ட மானியக்கோரிக்கையின் போது முதற்கட்டமாக பத்து திருக்கோவில்களில் சாமி தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும்
இத்திட்டத்தால், திருக்கோயில்களுக்கு வருகின்ற பக்தர்களுக்கு நாள் தோறும் 10000 முதல், திருவிழா காலங்களில் 25000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பிரசாதங்களைப் பெறுவார்கள். அதற்குத் தகுந்தார் போல் அந்தந்த திருக்கோயில்களில் தகுதியான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உணவுப் பொருட்கள் தரமாகத் தயார் செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல்.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டிலுள்ள 341 திருக்கோயில்களின் பிரசாதம் , நைவேத்யம், உணவு தொடர்பாக மத்திய அரசிடம் தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளதன்படி இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
‘உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர்.' என்பதற்கேற்ப பழநி, ஸ்ரீரங்கம், திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி போன்ற திருக்கோயில்களில் நாள் முழுதும் அன்னதானம் திட்டம் தொடங்கப்பட்டு 25000 மேற்ப்பட்ட பக்தர்கள் பயனைடைந்து வருகின்றனர். தங்கு தடையின்றி, இடர்களைக் கடந்து இந்தத் திட்டம் தொடர்கிறது.
இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறைச் செயலாளர் .சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன், சட்டமன்ற உறுப்பினகள் த.வேலு, தக்கர் ஆதிமூலம் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள்