முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாமல்லபுரம் அகழாய்வில் பழங்கால முருகன் கோவில் கட்டுமானம் தொல்லியல் துறை கண்டறிந்தனர்

 "பார் வண்ண மட மங்கை*  பனி நல் மா மலர்க் கிழத்தி* 

நீர் வண்ணன் மார்வத்தில்*  இருக்கையை முன் நினைந்து அவன் ஊர்*

கார்வண்ண முது முந்நீர்க்*  கடல்மல்லைத் தலசயனம்* 

ஆர் எண்ணும் நெஞ்சு உடையார்*  அவர் எம்மை ஆள்வாரே".             


  எனும் ஆழ்வார் தமிழ் வேதம் கூறும். மாமல்லபுரம் பல்லவர்களின் துறைமுகம். மகேந்திரவர்மனின் மகன் நரசிம்மன் என்கிற மாமல்லன் (கி.பி.630 முதல்  668 வரை ). வாழ்ந்த நகரம். அவருக்கு முன் இந்த நகரத்திற்கு நீர்ப்பெயற்று, நீர்ப்பாயல், ஜலசயனம், கடல் மல்லை என பல பெயர்களில். மாமல்லன் வாழ்ந்த நகரம் என்பதால் மாமல்லபுரம் என்றானது.

மானவர்மன் எனும் இலங்கை மன்னன்  நாட்டை இழந்து மாமல்லன் உதவியை நாட  தன்னுடைய கடற்படையைக் கொடுத்து உதவியிருக்கிறார். அந்தக் கடற்படை மாமல்லபுரத்திலிருந்து சென்றது.

மாமல்லபுர சிற்பங்கள், கோயில்கள் அனைத்தும் பல்வேறு காலங்களில் பல்லவ மன்னர்களால் எழுப்பப்பட்டவை. அதில் முதலாம் மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், ராஜசிம்மன் குறிப்பிடத்தக்கவர்கள். உலகப்புகழ்ப்பெற்ற கடற்கரைக்கோயில் , ஐந்து ரதங்கள், குன்றில் குடையப்பட்ட கோயில்கள், புலிக்குகை உள்ளிட்ட 



கடற்கரையில் இன்னும் பல கோயில்கள் இருந்திருக்க வேண்டும். அது கடல் நீர் உட்புகுந்ததால் கடலுக்கு அடியில் அழிந்திருக்க வேண்டும். கடல் ஆய்வின் போது சிற்பத் துகள்களை நீருக்கு அடியில் இருந்து கண்டெடுத்து இருக்கிறார்கள் கடல் தொல்லியல் துறையினர்.மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலுக்கருகில் கடலில் விருந்து வெளிவந்துள்ள தூண்கள், செங்கற்கள்,

ஸ்தூபிகள் புதையுன்ட பல்லவர் காலத்து பழங்கால கோயிலின் பொருட்களா என்று ஆய்வு செய்வதற்காக தொல்லியல் துறையினர் எடுத்து சென்றனர். மேலும் கோவில் கட்டுமானப் பொருட்கள் வெளிவந்த இடத்தில் பழங்கால செப்பு நாணயம் ஒன்று மீனவர் கையில் சிக்கியது.


7 ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் காலத்தில் வடிவமைக்கப்பட்ட கடற்கரை கோவில் உள்ளிட்ட ஏராளமான புராதன சின்னங்கள் உள்ள நிலையில் கடற்கரைக் கோவிலருகில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் ஏற்பட்டு கடலரிப்பால் மணல் திட்டு ஏற்பட்ட போது பழங்கால கோவில்களின் டெரகோட்டா வகை 70 செங்கற்கள், 8 தூண்கள், கோவில் உச்சியில் அமைக்கப்படும் கருங்கல் ஸ்தூபிகளென கடலரிப்பின் போது பூமிக்கடியிலிருந்து வெளிவந்தன. மணல் திட்டாக காட்சியளித்த அப்பகுதி முழுவதும் இப்போது கோவில் கட்டுமானங்களைச் சேர்ந்த பழங்கால டெரகோட்டா வகையை சேர்ந்த சதுர வடிவு செங்கற்களாகவும் மற்றும் கருங்கற்களாவும் காட்சி அளிக்கிறது.

பல்லவ மன்னர்கள் மாமல்லபுரத்தை துறைமுகப்பட்டினமாகவும், காஞ்சிபுரத்தை தலைநகராகவும் கொண்டு ஆட்சி செய்த போது மாமல்லபுரத்தில் கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுணன் தபசு, புலிக்குகை உள்ளிட்ட கட்டுமானக் கோயில்களை அமைத்தனர்.  கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கோவாவிலிருந்து வந்த கடல் அகழாய்வு தொல்லியல் துறை அறிஞர்கள் குழுவினர் மாமல்லபுரம் கடற்கரையில் படகில் சென்று ஆய்வு செய்து பல வரலாற்றுத் தகவல்களைக் கண்டறிந்தனர்


கடலில் கட்டுமானங்கள்(கோவில்கள்), பொக்கிஷங்களாக  உள்ள நிலையில் தமிழக தொல்லியல் துறையின் அகழாராய்ச்சி பிரிவினர் 2005 ஆம் ஆண்டு புலிக்குகை புராதன சின்னம் பல பழங்கால கலை மூழ்கி இருப்பதாகவும் அவர்கள் தில்லியில் மத்திய தொல்லியல் துறைக்கு அறிக்கை அளித்தனர் அதன் படி கடற்கரையை ஒட்டி அகழாய்வு செய்த போது பூமியில் புதைந்து கிடந்த பழங்கால முருகன் கோவில் கட்டுமானத்தைக் கண்டுபிடித்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,