"பார் வண்ண மட மங்கை* பனி நல் மா மலர்க் கிழத்தி*
நீர் வண்ணன் மார்வத்தில்* இருக்கையை முன் நினைந்து அவன் ஊர்*
கார்வண்ண முது முந்நீர்க்* கடல்மல்லைத் தலசயனம்*
ஆர் எண்ணும் நெஞ்சு உடையார்* அவர் எம்மை ஆள்வாரே".
எனும் ஆழ்வார் தமிழ் வேதம் கூறும். மாமல்லபுரம் பல்லவர்களின் துறைமுகம். மகேந்திரவர்மனின் மகன் நரசிம்மன் என்கிற மாமல்லன் (கி.பி.630 முதல் 668 வரை ). வாழ்ந்த நகரம். அவருக்கு முன் இந்த நகரத்திற்கு நீர்ப்பெயற்று, நீர்ப்பாயல், ஜலசயனம், கடல் மல்லை என பல பெயர்களில். மாமல்லன் வாழ்ந்த நகரம் என்பதால் மாமல்லபுரம் என்றானது.
மானவர்மன் எனும் இலங்கை மன்னன் நாட்டை இழந்து மாமல்லன் உதவியை நாட தன்னுடைய கடற்படையைக் கொடுத்து உதவியிருக்கிறார். அந்தக் கடற்படை மாமல்லபுரத்திலிருந்து சென்றது.
மாமல்லபுர சிற்பங்கள், கோயில்கள் அனைத்தும் பல்வேறு காலங்களில் பல்லவ மன்னர்களால் எழுப்பப்பட்டவை. அதில் முதலாம் மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், ராஜசிம்மன் குறிப்பிடத்தக்கவர்கள். உலகப்புகழ்ப்பெற்ற கடற்கரைக்கோயில் , ஐந்து ரதங்கள், குன்றில் குடையப்பட்ட கோயில்கள், புலிக்குகை உள்ளிட்ட
கடற்கரையில் இன்னும் பல கோயில்கள் இருந்திருக்க வேண்டும். அது கடல் நீர் உட்புகுந்ததால் கடலுக்கு அடியில் அழிந்திருக்க வேண்டும். கடல் ஆய்வின் போது சிற்பத் துகள்களை நீருக்கு அடியில் இருந்து கண்டெடுத்து இருக்கிறார்கள் கடல் தொல்லியல் துறையினர்.மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலுக்கருகில் கடலில் விருந்து வெளிவந்துள்ள தூண்கள், செங்கற்கள்,
ஸ்தூபிகள் புதையுன்ட பல்லவர் காலத்து பழங்கால கோயிலின் பொருட்களா என்று ஆய்வு செய்வதற்காக தொல்லியல் துறையினர் எடுத்து சென்றனர். மேலும் கோவில் கட்டுமானப் பொருட்கள் வெளிவந்த இடத்தில் பழங்கால செப்பு நாணயம் ஒன்று மீனவர் கையில் சிக்கியது.
7 ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் காலத்தில் வடிவமைக்கப்பட்ட கடற்கரை கோவில் உள்ளிட்ட ஏராளமான புராதன சின்னங்கள் உள்ள நிலையில் கடற்கரைக் கோவிலருகில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் ஏற்பட்டு கடலரிப்பால் மணல் திட்டு ஏற்பட்ட போது பழங்கால கோவில்களின் டெரகோட்டா வகை 70 செங்கற்கள், 8 தூண்கள், கோவில் உச்சியில் அமைக்கப்படும் கருங்கல் ஸ்தூபிகளென கடலரிப்பின் போது பூமிக்கடியிலிருந்து வெளிவந்தன. மணல் திட்டாக காட்சியளித்த அப்பகுதி முழுவதும் இப்போது கோவில் கட்டுமானங்களைச் சேர்ந்த பழங்கால டெரகோட்டா வகையை சேர்ந்த சதுர வடிவு செங்கற்களாகவும் மற்றும் கருங்கற்களாவும் காட்சி அளிக்கிறது.
பல்லவ மன்னர்கள் மாமல்லபுரத்தை துறைமுகப்பட்டினமாகவும், காஞ்சிபுரத்தை தலைநகராகவும் கொண்டு ஆட்சி செய்த போது மாமல்லபுரத்தில் கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுணன் தபசு, புலிக்குகை உள்ளிட்ட கட்டுமானக் கோயில்களை அமைத்தனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கோவாவிலிருந்து வந்த கடல் அகழாய்வு தொல்லியல் துறை அறிஞர்கள் குழுவினர் மாமல்லபுரம் கடற்கரையில் படகில் சென்று ஆய்வு செய்து பல வரலாற்றுத் தகவல்களைக் கண்டறிந்தனர்
கடலில் கட்டுமானங்கள்(கோவில்கள்), பொக்கிஷங்களாக உள்ள நிலையில் தமிழக தொல்லியல் துறையின் அகழாராய்ச்சி பிரிவினர் 2005 ஆம் ஆண்டு புலிக்குகை புராதன சின்னம் பல பழங்கால கலை மூழ்கி இருப்பதாகவும் அவர்கள் தில்லியில் மத்திய தொல்லியல் துறைக்கு அறிக்கை அளித்தனர் அதன் படி கடற்கரையை ஒட்டி அகழாய்வு செய்த போது பூமியில் புதைந்து கிடந்த பழங்கால முருகன் கோவில் கட்டுமானத்தைக் கண்டுபிடித்தனர்.
கருத்துகள்