இந்திய வாழைப்பழம் மற்றும் பேபி கார்ன் கனடாவிற்கு ஏற்றுமதி
இந்திய வாழைப்பழம் மற்றும் இளம் சோளத்திற்கான (பேபி கார்ன்) சந்தை அணுகல் குறித்து இந்தியா மற்றும் கனடாவின் தேசிய தாவர பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் மூலம் இப்பொருட்களுக்கான கனடிய சந்தை அணுகல் கிடைத்துள்ளது.
வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் திரு மனோஜ் அஹுஜா மற்றும் கனடா தூதர் திரு கேமரூன் மெக்கே ஆகியோருக்கிடையே 07.04.22 அன்று நடைபெற்ற கூட்டத்தில், தாவர இறக்குமதிக்கான உள்நாட்டு தேவைகளைப் புதுப்பிக்கப்பட்ட பிறகு, இந்தியாவில் இருந்து கனடாவுக்கு பேபி கார்ன் ஏற்றுமதி 2022 ஏப்ரல் முதல் தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், வாழைப்பழம் குறித்து இந்தியா வழங்கிய தொழில்நுட்பத் தகவல்களின் அடிப்படையில், அதை உடனடியாக ஏற்றுமதி செய்வதற்கு கனடா ஒப்புதல் அளித்துள்ளது.
கனடா அரசின் இந்த முடிவு, இந்தப் பயிர்களை வளர்க்கும் இந்திய விவசாயிகளுக்குப் பெரிதும் பயனளிக்கும், மேலும் இந்தியாவின் ஏற்றுமதி வருவாயையும் அதிகரிக்கும்.
கருத்துகள்