இராம நவமியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் வாழ்த்து
ராம நவமியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் தமது வாழ்த்து செய்தியில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்:
“ராம நவமி புனித நாளில், சக மக்கள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ராம நவமி என்பது ராமரின் கொள்கைகளை நினைவுகூரவும், அவற்றை நம் வாழ்வில் பயன்படுத்தவும் ஒரு நல்ல சந்தர்ப்பம் ஆகும். நல்லொழுக்கம், சகிப்புத்தன்மை, இரக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய உயர்ந்த விழுமியங்களைப் பின்பற்ற அவரது வாழ்க்கை நம்மைத் தூண்டுகிறது.
நமது கடமைகளை நாம் செய்யும் போது இந்த விழுமியங்களால் நம் வாழ்க்கை வழிநடத்தப்படட்டும்.
ராமர் காட்டிய வழியைப் பின்பற்றி, சிறந்த தேசத்தைக் கட்டமைக்க உறுதி ஏற்போம்.”என்றும் .ராம நவமியையொட்டி மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து
ராம நவமியையொட்டி மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்தி வருமாறு;
ராம பிரானின் பிறந்த நாள் ராம நவமி தினமாக கொண்டாடப்படும் மங்களகரமான தினத்தில் நாட்டு மக்களுக்கு எனது இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய பாரம்பரியத்தில் ராம பிரான் நீதி, தைரியம், கருணை ஆகியவற்றின் வடிவமாக சித்தரிக்கப்படுகிறார். அவரது வாழ்க்கை, உண்மை, நீதி, பெரியவர்களுக்கு மரியாதை அளித்தல், அனைத்து மனிதர்களிடத்தும் அன்பு செலுத்துதல் ஆகிய கொள்கைகளுடன் திகழ்கிறது. ‘மரியாதா புருசோத்தமன்’ என்று போற்றப்படும் ராம பிரான், சிறந்த மன்னராகவும், பணிவுமிக்க மகனாகவும், அன்பான சகோதராரகவும், உண்மையான உணர்வுடன் முன்மாதிரியாகவும் திகழ்கிறார். ராம பிரானின் வாழ்க்கை அவரது உன்னதமான கொள்கைகளையும், உயர்ந்த ஒழுக்க பண்புகளையும் நாம் பின்பற்றத் தூண்டுகிறது.
இந்த ராம நவமி திருநாள் நமது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் கொண்டு வருவதுடன், பகவான் ராமரால் வலியுறுத்தப்பட்ட நித்திய விழுமியங்களால் நமது பாதையை ஒளிரச் செய்யட்டும். மேலும்ராம நவமியை முன்னிட்டு ஜூனாகத், கதிலாவில் உள்ள உமியா மாதா கோவிலின் 14-வது நிறுவன தின விழாவில் பிரதமர் உரையாற்றுகிறார்
ராம நவமியை முன்னிட்டு, குஜராத்தில் உள்ள கதிலாவில் அமைந்திருக்கும் உமியா மாதா கோவிலின் 14-வது நிறுவன தின விழாவில் 2022-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி மதியம் 1 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றுகிறார்.
2008-ம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்தபோது, பிரதமர் திரு நரேந்திர மோடியால் இந்தக் கோவிலின் திறப்பு விழா நடைபெற்றது. 2008-ல் அவர் வழங்கிய ஆலோசனைகளின் அடிப்படையில், பல்வேறு சமூக மற்றும் சுகாதாரம் தொடர்பான செயல்பாடுகளிலும், இலவச கண்புரை அறுவை சிகிச்சைகள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த நோயாளிகளுக்கு இலவச ஆயுர்வேத மருந்துகள் போன்றவற்றிலும் கோவில் அறக்கட்டளை தனது நோக்கத்தை விரிவுபடுத்தியுள்ளது.
கடவா பதிதார்களின் குல தெ
ய்வமாக உமியா அன்னை கருதப்படுகிறார்.
கருத்துகள்