முதியோர் இல்லங்களுக்கு நிதி ஒதுக்கீடு
முதியவர்களை பராமரிப்பதற்கான அடல் வயோ அபிஉதய் திட்டத்தின்கீழ் 534 முதியோர் இல்லங்களை பராமரிப்பதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த முதியோர் இல்லங்களில் பராமரிக்கப்படும் முதியவர்களுக்கு தங்கும் இடம், உணவு, மருத்துவ வசதிகள் வழங்குவதற்கு இந்த நிதி அளிக்கப்படுகிறது.
2016-17 ஆம் ஆண்டு ரூ. 36.99 கோடி வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஐந்தாண்டுகளில் இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 2020-21-ல் ரூ. 122.58 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 65 முதியோர் இல்லங்களும், புதுச்சேரியில் 2 முதியோர் இல்லங்களும் இந்த திட்டத்தின்கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இத்தகவலை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் சுஷ்ரி பிரதிமா பவ்மிக் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்